Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Wednesday, October 23, 2013

முன்னுரை-1


முன்னுரை-1

     வருகை புரியும் அனைவருக்கும் என் முதல் வணக்கம். இந்த வலைப் பூ தொடங்கியதற்கு ஏதோ ஒரு வகையில் தூண்டுகோலாய் இருக்கும் அத்தனை வலைப் பூ பதிவாளர்களுக்கும் நன்றி.

    அறிவு அற்றம் காக்கும் கருவி என்றார் திருவள்ளுவர். ஆய்ந்து தெளிதலை அறிவு என்று சொல்லலாம். அறிவுசார் இயலை அறிவியல் எனலாம், ஆனால், இன்று அறிவியல் என்பது தொலை நோக்கியும், கொஞ்சம் வேதிப் பொருட்களும், உயிரிப் பொருட்களும் கலந்த கலவையினை ஆராய்தல் என்ற நிலையிலேயே உள்ளது. மற்றவை எல்லாம் கலை, நுண்கலை என்ற பகுப்பிற்குள் அடங்கி விட்டது. கணிதம் கலையும் இல்லாமல் அறிவியலும் இல்லாமல் வவ்வால் போன்று உள்ளது.

     அண்டத்தின் உருவாக்கம், கொள்கை சார்ந்த தேற்றம் தான். அதனை சோதனைச் சாலையில் ஆராய்ந்து ஒரு பொருளாக கையில் அள்ளித் தர முடியாது. இயற்பியல் மற்றும் கணிதக் கோட்பாடுகளின் வகைகளுக்கு உட்பட்டு, காலத்தை தர முயன்று கொண்டிருக்கிறார்கள். அதிலும் முரண்பாடுகள் இருந்தாலும், அதிக வாக்குகள் பெற்ற பெரு வெடிப்புக் கொள்கை முன்னிலையில் இருந்து கொண்டிருக்கிறது.  அது அறிவியல் என்ற வடிவிற்குள் உள்ளது.

    இதே போன்றுதான், அகழ்வுகள், படிவுகள், வடிவங்கள் மற்றும் கணிதக் கோட்பாடுகளின் வகைகளுக்கு உட்பட்டு, திருவள்ளுவர் காலமும், சோழர்கள் காலமும், சமணர்கள் காலமும் தீர்மானிக்கப் பட்டு வந்துள்ளன. அதிக உடன்பாடுடைய கருத்துக்கள், அவர்களின் காலமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதனை அறிவியல் என்று கொள்ளாமல், வரலாறு என்ற ‘கலை’ க்குள் கொண்டுவருகிறார்கள்.


தொடரும்….

1 comment:

Astro Learner LKG said...

புதிய வலைப் பூ தொடங்கிய உங்களை வலைப் பூ உலகின் சார்பில் வரவேற்கிறேன்