Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Saturday, October 26, 2013

முன்னுரை-4




     ஒரு அறிவியல் தேற்றத்தை (theory) மதத்தோடு தொடர்புபடுத்தி நிரூபிக்க முயலும்போது, மற்ற மதத்தினர் அதனை ஏற்க மறுக்கின்றனர். அதனை எவ்வாறு இழிவுபடுத்தி நிராகரிக்கலாம் என்பதில் முழு முனைப்புக் காட்டுகின்றனர். நாத்திகவாதிகளோ தோலுரித்து தொங்கவிடுவதற்கு அதில் உள்ள பொருந்தா விதிகளைத் தோண்டி எடுத்து, தூற்றுகின்றனர். சரி பொருந்தா விதிகளுக்கு விளக்கம் சொல்லுங்கள் என்று கேட்டால், அது விளக்க முடியாத, விளங்க முடியாத கடவுளின் தத்துவம் என்று அதனைத் தொடர்பவர்கள் தப்பிக்கப் பார்க்கிறார்கள்.

     உலகில் எல்லோருமே ஆத்திகர்கள் தான் – தங்களின் நம்பிக்கையை ஆய்வுக்கு உட்படுத்த மறுக்கும், அல்லது மறுபரிசீலனைச் செய்ய மறுக்கும், அனைவருமே ஆத்திகர்கள் தான். ஒருவர் “அ” எனும் கடவுள் நம்பிக்கை கொண்டவராக இருப்பார். இன்னொருவர் ‘இ’ எனும் கடவுள் நம்பிக்கையைக் கொண்டவராக இருப்பார். பிரிதொருவர் ‘உ’ எனும் கடவுள் நம்பிக்கையைக் கொண்டவராக இருப்பார். நான்காமவர், கடவுளே இல்லை எனும் நம்பிக்கையைக் கொண்டவராக இருப்பார். ஆகவே அவரவர் தத்தமது நம்பிக்கையில் விடாப்பிடியாக இருப்பதால், நம்பிக்கை எனும் அளவீட்டில் அனைவருமே ஆத்திகர்கள் தான்.

     உலகில் எல்லோருமே நாத்திகர்கள் தான் – பிறரின் நம்பிக்கையை ஆய்வுக்கு உட்படுத்த நினைக்கும், அல்லது  அந்த நம்பிக்கையை மறுக்கும், அனைவருமே நாத்திகர்கள் தான்.  “அ” எனும் கடவுள் நம்பிக்கை கொண்ட ஒருவர் - ‘இ’. அல்லது “உ” எனும் கடவுளே இல்லை எனச் சொல்லுவார். அவரைப்போலவே, மற்றவர்கள் தத்தமது கடவுளைத் தவிர மற்றக் கடவுள்கள் இல்லை என்பர்.. நான்காமவர், கடவுளே இல்லை என்பவர். ஆகவே அவரவர் பிறரது நம்பிக்கையை நம்பாமல் இருப்பதால், நம்பிக்கை எனும் அளவீட்டில் அனைவருமே நாத்திகர்கள் தான்.

    ஆனால், ஆத்திகரானாலும், நாத்திகரானலும், அனைவருமே இந்த பிரபஞ்சம் உள்ளதை நம்புகிறார்கள். சூரியனை நம்புகிறார்கள், மழையை நம்புகிறார்கள், ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ளவர் பேசுவது, அருவமாய், காற்றில் மிதந்து வந்து, தன் அலைப்பேசியில் ஒலிப்பதை நம்புகிறார்கள். ஏனெனில் இவை பொதுவில் வைக்கப்பட்டுள்ளன.

   ஆனால், பொதுவில் வைக்கப்பட வேண்டிய ஒரு பொருள், மதம் சார்ந்த பொருளாக ஆக்கப் பட்டுள்ளதால், அதை நம்புபவர்களை மயக்கவும், வியக்கவும், தவிக்கவும் வைக்கும் பொருளாக ஆக்கப் பட்டுள்ளதால், அது ஒரு குழுவிற்கு உரிய பொருளாக இருந்துவருகிறது. ஆனால், வியக்க வைக்கும் உண்மை என்னவெனில், அதனை நம்பாதவர்களும் அதன் தொடர்பில் இருப்பதுதான்.

அது, சோதிடம்.

முன்னுரை தொடரும்…………

No comments: