“O” அதாவது பூச்சியம் என்ற எண்ணை இந்தியர்கள் உலகிற்கு தந்ததாக சொல்லுவார்கள். பூச்சியத்தில் இருந்துதான் அனைத்து எண்களும், இடப்புறம் –n வரையிலும் வலப்புறம் +n வரையிலும் செல்வதாகக் கணிதம் சொல்கிறது. அந்த “n” முடிவில்லாதது.
அதுபோன்றுதான் இந்த பிரபஞ்சமும். பூச்சியம் போன்றது. ஆரம்பமும் முடிவும் இல்லாதது. “விரிந்தது சுருங்கும் சுருங்கியது விரியும்” எனும் இயற்பியல் தத்துவத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
இயற்பியல் அறிஞர்களின் கருத்துப்படி, நிறைய பிரபஞ்சங்கள் இருக்கக் கூடும். அதில் ஒன்றுதான் நாமிருக்கும் பிரபஞ்சம். பிரபஞ்சங்கள் எப்படித் தோன்றின அல்லது யார் படைத்தார்கள் என்பது எவருக்கும் தெரியாது.
ஆரம்பம் முதல் மிக நிறைய பக்கங்களைக் காணமுடியாததால், இயற்பியலாளர்கள் ‘சரி இங்கிருந்து வைத்துக் கொள்வோம்’ என நடுவிலிருந்து தொடங்கிய கதைதான் “பிக் பாங்க் தியரி” எனும் “பெரு வெடிப்புக் கொள்கை”.
தற்போதைய பெரு வெடிப்புக் கொள்கையின்படி, அணுக்கள் திரண்டு மிக மிக அடர்த்தியுடன் சிறு உருண்டையாக இருந்ததாகவும் (Planck epoch) பிளாங்க் யுகத்தில் பெரும் அழுத்தம் பெரும் வெப்பம் என 10 முதல் 32 வினாடி நேரத்தில் அதன் கருப் பொருள் மாபெரும் வெடிப்பாக வெடித்து, அந்தக் கருப்பொருள் பல கோடிக்கணக்கான துகள்களாக விரிந்து விரிந்து, அணுக்கள், விண்மீன்கள், விண்மீன் தொகுதிகள், கறுப்புப் பொருட்கள், கறுப்புச் சக்தி என தற்போதைய நிலையை அடைந்ததாக கூறப்படுகிறது.இந்த பிரபஞ்சத்தில் உள்ளவை 5% பொருட்கள் (Materials) – அணுக்கள், விண்மீன்கள், விண்மீன் தொகுதிகள்; 25% - கறுப்புப் பொருட்கள்( Dark Matter); 70% - கறுப்புச் சக்தி (Dark Energy) என இயற்பியலாளர்கள் கொள்கை வகுத்துள்ளனர்.
5% அளவே உள்ள பொருட்களில் தான் எண்ணற்ற விண்மீன்களும், விண்மீன்கூட்டங்களும், கேலக்ஸி எனப்படும் விண்மீன்தொகுதிகளும் உள்ளன. எத்தனை கேலக்ஸிகள் உள்ளன என்று கேட்டால், பல ஆயிரம் கேலக்ஸிகள் இருக்கக் கூடும் என அனுமானிக்கிறார்கள்.
அதில் ஒன்றுதான் “பால் வீதி” (Milky Way) எனப்படும் நமது சூரியக் குடும்பமும் உள்ளடங்கிய கேலக்ஸி ஆகும்.
அனைத்து கேலக்ஸிகளும் நமது பிரபஞ்சத்தை நீள்வட்டத்தில் சுற்றுவதாகக் கூறுகிறார்கள். நமது பிரபஞ்சம் தோன்றி ஏறக்குறைய 14 பில்லியன் ஆண்டுகள் (13.798 ± 0.037 billion years) ஆவதாகவும், நமது பால் வீதி முதல் சுற்று முடித்து இரண்டாவது சுற்றில் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
மீண்டும்….
அவன் - இவன்
|
|
அவன் :
|
சோதிடத்தைப்
பற்றி எழுத சொன்னால், பிரபஞ்சம், பெரு வெடிப்பு –ன்னு எழுதறாரு.
|
இவன் :
|
அது
ஒன்னுமில்ல, இப்பதான தீபாவளி முடிஞ்சுது, அதான் வெடியைப் பத்தி எழுதறாரு.
|
No comments:
Post a Comment