Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Wednesday, January 8, 2014

செவ்வாய் – மங்கள்யானின் இலக்கு



செவ்வாய் (பனியில் வெடித்த) கொவ்வை இதழாக

     
செவ்வாய் ஒரு இளஞ்சிவப்புக் கோள். பூமியில் உள்ள அனைவருக்கும் அதன் மேல் ஒரு கண். பூமிக்கு மிக அருகில் வீட்டு மனைகள் கிடைக்கும். பூமியிலிருந்து கூப்பிடு தூரத்தில், அதாவது சுமார் ஒன்றரை வருட பயனத்தில் நல்ல மனைகள் உடனடியாக வீடு கட்டி குடியேற கிடைக்கும் என விளம்பரம் வரும் நாளை மிக விரைவில் எதிர்பார்க்கலாம்.

      செவ்வாய், சூரியக் குடும்பத்தின் வரிசையில் நான்காவது திடக் கோள். பூமியின் விட்டத்தில் பாதி அளவு உடையது. பூமியின் எடையில் பத்தில் ஒரு பங்கே எடை உடையது. சூரியனைச் சுற்றிவர 687 நாட்கள் ஆகின்றது.

       பூமியில் நிலப்பரப்பு எவ்வளவோ அவ்வளவு நிலப்பரப்பு செவ்வாயிலும் உள்ளது. எப்போதும் புழுதிப் புயல். இரும்பு ஆக்சிடுகள் அதிகம் இருப்பதால் சிவப்பாகத் தெரிகிறது. பூமியிலிருந்து காணப்படும் வடிவில் பாதி அளவுதான் சூரியன் தெரியும். செவ்வாய்க்கு இரண்டு நிலவுகள். இரண்டிலும் பாட்டி வடை சுடுகிறாரா என்று தெரியவில்லை. வேற்றுக் கிரக வாசிகள் என்றாலே செவ்வாய்க் கிரக வாசிகள் என்றுதான் நம் மனதில் பதியப்பட்டிருக்கிறது.

      செவ்வாயின் மேற்பரப்பு

      எவரெஸ்ட் உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம். இந்தியாவில் உள்ள மிக உயரமான மலைச் சிகரம் கே2. ஆனால் சூரியக் குடும்பத்திலேயே செவ்வாயில்தான் மிகவும் உயரமான மலைச் சிகரம், அதாவது 21 கி.மீ. உயரமும் 600 கி.மீ. குறுக்களவும் கொண்ட மலை உள்ளது. செவ்வாயின் துகள்கள் (எரி கற்களாக) அவ்வப்போது பூமிக்கு வந்துகொண்டுதான் இருக்கின்றன. அவைதான் செவ்வாயைப் பற்றி ஆய்வதற்கு பெரிதும் துணைபுரிகின்றன.

செவ்வாயில் மனிதன் – கற்பனையின் உச்சம் 
(உண்மையில் அது ஒரு பாறையின் முனை)


     முன்னொரு காலத்தில் (பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு) செவ்வாயில் கடலும் ஆறும் இருந்திருக்கக் கூடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எரிமலைச் சாம்பல்களால் தற்போது நீர் இல்லை என கருதுகின்றனர். குளிர் தட்ப வெப்பமும், இலகுவான வான் வளி சூழலும் தண்ணீரைத் தக்கவைத்துக் கொள்ள ஏதுவாக இல்லை.ஆனால் துருவங்களில் நீர் பனிக்கடலாய் இருக்கலாம் எனும் கருத்தும் உண்டு.

     கரியமில வாயு 95%, நைட்ரஜன் 3%, மற்றவை 2% உள்ள வளிமண்டலம் கொண்டது செவ்வாய். செவ்வாயும் பூமியைப் போல் சற்றே சாய்ந்திருப்பதால், இங்கும் பருவநிலை மாற்றம் உண்டு.

     செவ்வாய்க்கு காந்தப்புலம் இருப்பதைப் பற்றி இருவேறு கருத்துக்கள் உள்ளன. செவ்வாயின் தென் துருவத்தில் இன்னமும் காந்தப்புலம் இருக்கிறது என்றும் சொல்லுகிறார்கள்.

சில குறிப்புகள்

  • ·         சூரியனிலிருந்து 228 மில்லியன் கி.மீ. தூரத்தில் உள்ளது.
  • ·         சூரிய மண்டலத்தில் நான்காவது கோள்.
  • ·         சூரியனின் வெளிவட்டப்பாதையில் உள்ள கோள்களில் முதலாவது கோள்.
  • ·         பூமியைப் போலவே தன்னைத்தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரம் ஆகின்றது.
  • ·         சூரியனைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் கால அளவு 687 நாட்கள்.
  • ·         திடக் கோள். பாறைகளும், எரிமலைக் குழம்பின் மிச்சங்களும் விரவிக் கிடக்கின்றன.
  • ·         தற்போதைய கருத்துக்களின்படி மனிதன் வாழக்கூடிய சூழல் இல்லை.
  • ·         செவ்வாயிலும் காந்தப்புலம் இருக்கிறது.
  •  மேலும் தகவல்களுக்கு, நமது மங்கள்யான் சொ(செ)ல்லும் வரை காத்திருப்போம்.


இதையும் படியுங்கள்:


07.01.2013 அன்று தினத் தந்தியில் வந்த ஒரு செய்தித் தகவல். 


வான் ஆய்வாளர்கள் இதனை உறுதி செய்தல் வேண்டும். இது பற்றி பின்னர் விவாதிப்போம்.

அடுத்து….. குரு பார்க்க …..
(நன்றி: பல்வேறு இணைய தளங்கள்)

அவன் - இவன்
அவன் :
திருநள்ளாறு போகலாமா ?
இவன் :
நீ எதுக்கு கேக்கறன்னு தெரியும். கொஞ்சம் பொறு, அடுத்த சனிப்பெயர்ச்சிக்கு போகலாம்.


No comments: