Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Thursday, December 31, 2015

இராசி பலனும் – புத்தாண்டு நல்வாழ்த்துக்களும்




அனைவருக்கும் இனிய புத்தாண்டு-2016 
நல்வாழ்த்துக்கள்


பொதுவாக அனைத்து நாளிதழ்களும், வார இதழ்களும் இராசி பலன் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. அதுவும் குறிப்பாக, தமிழ்ப் புத்தாண்டு, ஆங்கிலப் புத்தாண்டு, ஆண்டிற்கு ஒருமுறை வரும் குரு பெயர்ச்சி, ஒன்றரை ஆண்டிற்கு ஒருமுறை வரும் இராகு-கேது பெயர்ச்சி, இரண்டறை ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் சனிப் பெயர்ச்சி ஆகியவற்றின்போது வெளியிடப்படும் இராசி பலன்களைப் படிப்பதற்கு எல்லோருக்கும் இருக்கும் ஆர்வத்தினைப் பயன்படுத்திக் கொள்கின்றன. பலன்களை எழுதுபவர்கள் பெரும்பாலும், மக்கள் அறிந்த சோதிடர்கள் அல்லது புகழ் பெற்ற சோதிடர்கள்தான்.

இந்தச் சூழலின்தான் எனது நண்பர்களும், நிமித்திகனைத் தொடர்பவர்களும் என்னிடம் வைக்கும் கோரிக்கை, ‘நீங்களும் இராசி பலன் ஏன் எழுதக் கூடாது?’ என்பதுதான். நான் விடையாகத் தருவது சிறு புன்னகைதான்.

என்னைப் பொருத்தவரையில், இராசி பலன் என்பது, விழியிழந்த ஐவர் யானையைத் தடவிப்பார்த்து உருவை வர்ணித்தற்கு ஒப்புதான் இருக்கும். ஏனெனில் இராசி பலன் என்பது, சந்திரன் இருக்கும் இராசியைக் கொண்டு, தற்போதையக் கோள்களின் நகர்வு நிலையினைக் கருத்தில் கொண்டு, பலன் உரைப்பதுதான். அது எந்த அளவிற்கு பலனை முழுமையாக சொல்லிட உதவும் என்பது மிகப்பெரும் வினாவாகும்.

சோதிடம் என்பதன் அடிப்படை விதி – ஒருவர் பிறக்கும்போது இலக்கினம் முதலாவதாகக் கொண்டு, பன்னிரெண்டு இராசிகளில் நிரவிக் கிடக்கும் ஒன்பது கோள்களின் நிலையினைக் கணக்கிட்டு கூறப்படும் ‘சாதகத்தினை’ அடிப்படையாகக் கொண்டது. அதில் முக்கியத்துவம் தரப்படுவது, இலக்கினம் இருக்கும் இராசியும் சந்திரன் இருக்கும் இராசியும் ஆகும். அதிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது இலக்கினம் மட்டுமே. ஆக, ஒருவரின் சாதகத்தின் பெருமளவு பலன்களைத் தீர்மானிப்பது – இலக்கினம் சார்ந்த கோள்களின் நிலையே.

அப்படி என்றால், சந்திரனை அடிப்படையாகக் கொண்ட இராசிக்கு பலன் உரைப்பது தவறா? தவறு என்று கூறுவதைக் காட்டிலும், பலனின் நம்பகத்தன்மை குறைவு என்பதுதான் உண்மை. இது அனைத்து சோதிடர்களுக்கும் தெரியும்.

சோதிட பலனை உரைக்க, மூன்று முக்கிய நிலைகளைக் கணக்கில் கொள்ள வேண்டும் என சோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. அதனைச் சுருக்கமாக – விதி – மதி – கதி என சொல்லுவர்.

விதி என்பது – பிறக்கும்போது உள்ள, இலக்கினம் முதற்கொண்டு பன்னிரெண்டு இராசிகளையும், ஒன்பது கோள்களையும் கணக்கில் கொண்டு கணிக்கப்படும் சாதகமாகும். இதைக் கொண்டே பலன்கள் உரைக்கப்பட வேண்டும் என்பது விதி.

மதி என்பது – பிறப்பு சாதகத்தில் சந்திரன் இருக்கும் இராசியில் உள்ள விண்மீன்களில் எந்த கோளின் சாரத்தில் சந்திரன் இருக்கிறதோ, அதனை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படும், தசா புத்தி பலன்கள். விதிக்கப்பட்ட சாதகத்தில் உள்ள பலன்கள் எப்போது நடைபெற வாய்ப்புள்ளது என்பதை அறிந்து கொள்ள உதவுவது.

கதி என்பது – அந்தந்த காலக் கட்டத்தில் கோள்கள், பன்னிரெண்டு இராசிகளில் இருக்கும் நிலையினைக் கொண்டு, பிறப்பு சாதகத்தில் சந்திரன் இருந்த இராசியின் அடிப்படையில் தற்போது கோள்கள் எங்குள்ளன, அவற்றால் ஏற்படும் பலன்கள் யாவை என்பதைக் கணிப்பதாகும். இந்தக் கணிப்பு என்பதன் வலிமை என்பது பிறப்பு சாதகத்தில் உள்ள வலிமை வாய்ந்த கோள்கள், வலிமை இழந்த கோள்கள் ஆகியவற்றின் தன்மையினைச் சார்ந்தே தீர்மானிக்கப்பட வேண்டும்.

இதன்படி, பிறப்பு சாதகத்திற்கு (இலக்கின அடிப்படை சாதகத்திற்கு) கிடைக்கும் பலன்களின் வலிமை என்பது 60% - 80% வரையிலும், தசா புத்தி பலன்களுக்கு 20% - 30% வரையிலும், நிகழ்காலக் கோள்களின் நகர்வினைக் கொண்டு கணக்கிடப்படும் இராசி பலன்களுக்கு 10% - 20% பலன்களும் என்பதே கணக்கீடாகும்.

அதனால்தான் இராசி பலன் எழுதும் சோதிடர்கள் – “ இது பொது பலன் மட்டுமே – அவரவர் பிறப்பு சாதகத்திற்கு ஏற்ப பலன்கள் மாறுபடும் “ என கருத்தைத் தெரிவித்து தப்பித்துக் கொள்வார்கள்.

பிறப்பு சாதகத்திற்கேற்ப பலன்கள் மாறுபடும் எனில், பொது இராசி பலன் ஏன் வெளியிட வேண்டும். இந்த இராசி பலனின் மீது நம்பிக்கைக் கொண்டிருப்பவர்களை ஏன் ஏமாற்ற வேண்டும்.

சோதிடம் பொய்யாய் போவதற்கு உரிய காரணிகளில் இதுவும் ஒன்று.

இந்த இராசி பலன் எவ்வாறு கணிக்கப்படுகிறது, இந்த கணிப்பு முறை ஏன் ஏற்பட்டது என்பது பற்றி பின்னர் வரும் ‘சோதிட ஆய்வில்’ விரிவாக விவரிக்கலாம்.

ஆக, நாளிதழ்களிலும் ஊடகங்களிலும் வரும் இராசி பலனைப் படித்து விட்டு, எவரும் வருத்தப்படவும் வேண்டாம், பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும் என்று மகிழ்ச்சி அடையவும் வேண்டாம்.

உங்களின் தனிப்பட்ட சாதகத்தால் மட்டுமே உங்களுக்குரிய பலனைக் கணக்கிட முடியும். இராசி பலன்கள் ஊறுகாய் மட்டுமே, அதுவே உணவல்ல.

இந்த புத்தாண்டில் அனைத்து  இராசிக்காரர்களும்  எல்லா நலமும் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்.

அன்புடன் –
நிமித்திகன்.



கருப்பும் வெள்ளையும் கலந்த மச்சம் - குழந்தையின் உடம்பில் - பிருகத் ஜாதகா – 64

   
வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா

பகுதி   -  ஐந்து

பிறப்பு நேரம் தொடர்புடைய தகவல்கள்


26. மூன்று கோள்கள், அவை அசுபமோ அல்லது சுபமோ, புதனுடன் சேர்ந்து ஒரு இராசியில் இருந்தால், ஒரு வடு அல்லது ஒரு மச்சம், அந்த இராசிக்குரிய(1) உடல் உறுப்பில் நிச்சயம் இருக்கும். தலையிலிருந்து (இலக்கினத்தைக் குறிப்பது) 12 உறுப்புகளைக் குறிக்கும் பிரிவின்படி(2),  6வது வீட்டில் ஒரு அசுபக் கோள் இருக்குமானால், ஒரு வடு (இடுப்பில்) இருக்கும்(3); ஆனால் அந்த அசுபக்கோள் ஒரு சுபக் கோளினால் பார்க்கப்பட்டால், கருப்பும் வெள்ளையும் கலந்த ஒரு மச்சம் இருக்கும்; ஆனால் சுபக் கோள் ஆறாம் இடத்தில் இருந்தால், அந்த இடத்தில் அடர்த்தியான முடி இருக்கும்.

குறிப்பு(சிதம்பரம் அய்யர்):

(1)     உடலின் பிரிவுகள் பத்தி 24-ல் குறிப்பிடப்பட்டவாறு.

(2)     பத்தின் 23-ல் குறிப்பு(3)-ல் குறிப்பிடப்பட்ட பிரிவின்படி.

(3)     வலிமை மிகுந்த கோளின் தசா காலத்தில். மேலும், கோளானது தனது சொந்தம் அல்லது நவாம்சமான 6வது வீட்டில் இருந்தால், அல்லது ஸ்திர இராசி அல்லது ஸ்திர நவாம்சத்தில் இருந்தால், வடு அல்லது மச்சமானது பிறப்பிலிருந்தே இருக்கும்.


பகுதி-5 நிறைவுற்றது

அடுத்துபகுதி-6 - பால அரிஷ்டம் அல்லது இளம் வயது மரணம்.



முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-15


Wednesday, December 30, 2015

மச்சங்களும் வடுக்களும் குழந்தையின் உடம்பில் எப்போது தோன்றும் - பிருகத் ஜாதகா – 63



வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா

பகுதி   -  ஐந்து

பிறப்பு நேரம் தொடர்புடைய தகவல்கள்


24. உடலின் மும்மடி பிரிவுகள் தலையிலிருந்து தொடங்கும், கழுத்திலிருந்து தொடங்கும் மற்றும் அடிவயிற்றிலிருந்து தொடங்கும், முறையே உதய திரேக்கானத்தின் முதல், இரண்டாவது அல்லது மூன்றாவது என வரும்.

குறிப்பு (சிதம்பரம் அய்யர்):

அவை கீழ்வருமாறு:
பன்னிரெண்டு வீடுகள்
உதய திரேக்கானத்திலிருந்து, குறிப்பிடப்படும் உடலின் உறுப்புகள்
முதலாவது
இரண்டாவது
மூன்றாவது
உதய இராசி
தலை
கழுத்து
அடிவயிறு
2வது வீடு
வலது கண்
வலது தோள்பட்டை
உயிர் உறுப்பு
12வது வீடு
இடது கண்
இடது தோள்பட்டை
ஆசனவாய்
3வது வீடு
வலது காது
வலது கை
வலது விதைப்பை
11வது வீடு
இடது காது
இடது கை
இடது விதைப்பை
4வது வீடு
வலது நாசி
வலப்பக்கம்
வலது தொடை
10வது வீடு
இடது நாசி
இடப்பக்கம்
இடது தொடை
5வது வீடு
வலது கோவில்
வலது மார்பு
வலது முழங்கால்
9வது வீடு
இடது கோவில்
இடது மார்பு
இடது முழங்கால்
6வது வீடு
வலது முகவாய்
வலது தொப்பை
வலது குதிகால்
8வது வீடு
இடது முகவாய்
இடது தொப்பை
இடது குதிகால்
7வது வீடு
வாய்
தொப்பூழ்
பாதம்


25. உடலின் உறுப்புகளைக் குறிப்பிடும் இராசிகளில் அசுபக் கோள்கள் இருந்தால், அப்பகுதியில் வடுக்கள் தோன்றும்; ஆனால் அத்தகைய இராசிகளில் சுபக் கோள்கள் இருந்தாலோ அல்லது பார்க்கப்பட்டாலோ, அத்தகைய உறுப்புகளில் மச்சங்கள் தோன்றும்; அத்தகைய அசுப அல்லது சுபக் கோள்கள் அவைகளின் சொந்த வீட்டில் அல்லது நவாம்சத்தில் அல்லது ஸ்திர இராசியில் அல்லது ஸ்திர நவாம்சத்தில் இருந்தால், வடு அல்லது மச்சமானது பிறப்பிலேயே தோன்றும்; இல்லையெனில், அது எதிர்காலத்தில் தோன்றும்(1). வடுக்களைப் பொருத்தவரையில், அக் கோள் சனியாக இருந்தால், வடுவானது கற்களினாலோ அல்லது காற்றினாலோ ஏற்படும்; செவ்வாய் எனில், அது நெருப்பினால் அல்லது ஆயுதங்களினால் அல்லது நச்சு பொருளினால் ஏற்படும்; (அசுப) புதனாக இருந்தால், அது பூமியினால்(2) ஏற்படும்; சூரியன் என்றால் மரம் அல்லது நாற்கால் விலங்கினால் ஏற்படும்; (தேய்பிறை) சந்திரன் எனில், கொம்பு உள்ள விலங்கினால் அல்லது நீர்வாழ் விலங்கினால் ஏற்படும். இராசிகளில் பிற (சுப) கோள்கள்(3) இருக்குமானால் இராசிகளினால் குறிப்பிடப்படும் பாகங்களில் எவ்வித வடுவும் தோன்றாது.


குறிப்பு (சிதம்பரம் அய்யர்):

(1)     அதாவது, பல்வேறு கோள்களின் தசா அல்லது கோள்களின் நகர்வுக் காலங்கள்.

(2)     அதன் அதிபதி மற்றும் அல்லது அதன் சாரம்

(3)     வியாழன், வெள்ளி, (சுப) புதன் மற்றும் வளர்பிறை சந்திரன்.

இந்த பத்தியில் சொல்லப்பட்டவையானது, உடலின் பிரிவுகள் பற்றி பத்தி 24-ல் சொல்லப்பட்டவைக்கு உரியவை.


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-15