Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Tuesday, January 31, 2017

சட்பலம் - கோள்கள் வீட்டினில் பெறும் வலிமை அல்லது ஸ்தான பலம்



சட்பலம் (அ) ஆறு வகை வலிமைகள்



நாம் இதுவரையில் பதிவிட்ட வகையில், கோள்களின் பலத்தினை அவை இருக்கும் வீடுகள், காரகத்துவங்கள், பார்வைகள், உச்சம், நீச்சம், நட்பு, பகை நிலைகள் ஆகியவற்றின் மூலம் கணிக்க வேண்டும் என பதிவு செய்தோம்.

ஆனால் சோதிட நூல்கள் கூறுவதுபடி, இவை மட்டுமே கோள்களில் பலத்தினை அறிய போதுமானதில்லை. ஒரு கோள், தனது சொந்த வீட்டில் இருப்பதாலேயோ அல்லது உச்ச நிலை பெற்றிருப்பதாலேயோ அது வலிமை மிகுந்தது என எண்ணிவிட முடியாது. அது போலவே அது பகை வீட்டிலோ அல்லது நீச்ச வீட்டிலோ இருப்பதாலேயே வலிமை குன்றிவிட்டதாகவும் எண்ணிவிட முடியாது.

ஒரு கோளின் வலிமையை, பல்வேறு கணிதங்களைச் செய்தே முடிவு செய்ய வேண்டும் என சோதிட நூல்கள் கூறுகின்றன. குறிப்பாக ஆறுவகை வலிமைகளைக் கண்டறிய வேண்டும் என கூறுகின்றன.  அதனை வடமொழியில் சட்பலம் எனக் குறிப்பிடுகின்றன.

ஆறுவகை வலிமை அல்லது சட்பலம் என்பது கீழ்வருமாறு தொகுத்து அளிக்கப்படுகிறது:

(1)  வீட்டினில் வலிமை (அ) ஸ்தான பலம்

(2)  திசையினில் வலிமை (அ) திக் பலம்

(3)  காலத்தில் வலிமை (அ) கால பலம்

(4)  நகர்வில் வலிமை (அ) சேஷ்டா பலம்

(5)  இயற்கையில் வலிமை (அ) நைசர்க்கிக பலம்

(6)  பார்வையின் வலிமை (அ) திருக் பலம்

ஆக, இந்த ஆறுவகை பிரிவிற்குள், கோள்களின் வலிமையினைக் கணக்கிடுகின்றனர்.

இங்கு, இவை எவ்வாறு கணக்கிடப்படுகின்றன என்பதை பதிவிடப் போவதில்லை. ஆனால், இந்த ஆறுவகை பிரிவுகள் கோள்களின் வலிமையை எவ்வாறு வரையறை செய்கின்றன என்பதைப் பார்க்கலாம்.


(1)  கோள்கள் வீட்டினில் பெறும் வலிமை அல்லது ஸ்தான பலம்

இதன்படி, ஒரு கோள் எந்த வீட்டில் இருக்கிறதோ, அதைப் பொருத்து பலம் அறிதல் என்பதாகும். அதாவது அக்கோளிற்கு அந்த வீடு  கீழ் வரும் நிலைகளில் ஏதேனும் ஒன்றாகவோ அல்லது அதற்கு மேற்பட்டோ இருக்கலாம்.

(1)  உச்சம்

(2)  மூலத் திரிகோணம்

(3)  ஆட்சி

(4)  நட்பு

(5)  பகை

(6)  கேந்திரம்

(7)  திரிகோணம்

(8)  பணபரம்

(9)  ஆபோக்லிமம்

இவை அனைத்தும் ஐந்து பிரிவிற்குள் கொண்டுவரப்படுகிறது.


(அ) உச்ச வலிமை – அதாவது அக்கோள் உச்ச வலிமையில் எவ்வளவு இருக்கிறது என்பதைக் கணக்கிடுவது

(ஆ) ஏழு வர்க்கங்களில் வலிமை (அ) சப்தவர்க்கஜ பலம் – இராசியில், ஹோரையில், திரேக்காணத்தில், சப்தாம்சத்தில், நவாம்சத்தில், துவதசாம்சத்தில், திரிம்சாம்சத்தில் என இவ்விடங்களில் அக்கோள் பெறும் வலிமையைக் கணக்கிடுவது

(இ) ஒற்றை இரட்டை (அ) ஆண் பெண் (அ) ஓஜ உக்ம வலிமை – இதன்படி, கோள்கள் இராசி மற்றும் நவாம்சத்தில் ஒற்றை அல்லது இரட்டை இராசிகளில் பெறும் வலிமையைக் கணக்கிடுவதாகும்.

(ஈ) நாற்கரம் அல்லது கேந்திரத்தில் வலிமை – இங்கு கேந்திர பலம் என்று கூறினாலும், நாற்கர அமைப்பிற்குள் வரும், கேந்திரம், பணபரம், ஆபோக்லிமம் இடங்களில், முறையே – 1, 4, 7, 10;  2, 5, 8, 11;  3, 5, 9, 12 ஆகிய இடங்களில் பெறும் பலத்தினைக் கணக்கிடுவது.

(உ) திரேக்காணத்தில் பெறும் பலம் – அதாவது திரேக்காண இராசிகளில் கோள்கள் பெறும் பலத்தினைக் கணக்கிடுவது.


ஆக, இந்த முறையில் கணக்கிடப்படும் ஐந்து வலிமைகளையும் ஒன்று கூட்டி கிடைக்கப் பெறுவது, ஸ்தான பலம் அல்லது வீட்டினில் வலிமை என்பதாகும்.


இவ்வாறு ஸ்தான பலம் அல்லது இடத்தினில் வலிமை பெறும் கோள்கள், மிக நற்பலன்களை அளிக்கும் எனவும், வலிமை குறைந்தால், கெடு பலன்களை வழங்கும் எனவும் சோதிட நூல்கள் கூறுகின்றன. பொதுவாக சோதிட நூல்கள் எனக் கூறினாலும், அவை பழமையான நூல்கள் என்பதினை நினைவிற் கொள்ளவும்.


…….திசையினில் வலிமை (அ) திக் பலம்


Monday, January 30, 2017

பிருகத் ஜாதகா – தமிழில்-8


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்

அறிமுகம்…(தொடர்ச்சி)


இதுவரையில் கூறியபடி, நாம் மேலும் ஒருபடி முன்னேறி செல்கிறோம், அதாவது, வெளிச்சத்தின் விளைவால் ஓடிக் கொண்டிருக்கும் ஒருவனின் செயல் பலமிழந்து போகுமானால், அது எதிர் விளைவாக இருக்கும், அத்தகைய எதிர்ப்பானது நேரிடையாகவோ அல்லது தகுதி மற்றும் வலிமையின் அடிப்படையிலோ அமைவதுடன், அத்தகைய செயல் நோக்கமானது மிகக் கடினமானதாக இருக்கும், அந்த நடவடிக்கைத் தடை செய்யப்படுமானால், டைகரஸ் நதியின் போக்கினைப்போல் செல்லும். இந்தக் கேள்வியானது முற்றிலும் கர்ம விதி சார்ந்த ஒரு கேள்வியாகும்முந்தைய கர்மாவின் விளைவு தற்போதைய கர்மாவிற்கு எதிரானதாக இருக்கும். ஒர் எதி விளைவை எதிர்க்கும்போது, ஒருவர் முதலில் அதுபற்றிய அறிவின் திறனையும் செயல் கோட்பாட்டினைப் பற்றிய அறிவும் நிறைந்தவராக இருக்க வேண்டும். முந்தைய அறிவு ஒருவருக்கு சோதிடத்தின் மூலம் வழங்கப்படுகிறது, பிந்தையது வினைப்பயன் முதிர்ச்சி எனும் அறிவால் கிடைக்கிறது. இரண்டாவதில் கூறப்பட்ட வழிமுறைகளானது தியானத்தின் (மனப்பயிற்சி அல்லது வளர்ச்சி) கொடையாகவும், சில சிறப்பு வாய்ந்த யாகத்தீயினால் செய்யப்படும் வேத யாகங்கள் மூலமாகவும் கிடைக்கின்றன. இது பயனற்றத் தடைகளை எதிர்த்து, தடையற்ற ஓட்டத்தின் மூலமாக எடுத்துச் செல்கிறது. எதிரியின் பலமோ அல்லது எந்தத் திசையிலிருந்து தாக்குதல் நடைபெறும் என்று அறியாத நிலையிலும் ஒரு மனிதன் தாம் வெற்றி பெறுவோம் என்று எப்பொழுதும் நம்பிக் கொண்டிருக்கிறான். சோதிடமானது ஒருவனின் எதிரியை மட்டுமின்றி அவனது நண்பனையும் அதாவது யாரிடமிருந்து உதவியைப் பெற இருக்கின்றானோ அவனையும் சுட்டிக் காட்டுகிறது. நண்பர்களையும் அதற்குரிய களங்களையும் எதிரிகளையும் அதற்குரிய களங்களயும் சுட்டிக்காட்டும் சோதிடம், மறைமுகமாக அவனது பேதமற்ற சம களத்தையும் அதாவது அவன் சுதந்திரமாக செயல்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளவற்றையும், உழைப்பின் விகிதாச்சாரத்திற்கேற்ப கிடைக்க இருக்கும் வெற்றியையும் சுட்டிக் காட்டுகிறது.


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 - 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014



இராசிகளில் கோள்களின் நகர்வு – சந்திரன், இராகு, கேது



2.       சந்திரன்


            சந்திரன் பூமியின் துணைக்கோள். அது பூமியைச் சுற்றிவர எடுத்துக் கொள்ளும் கால அளவு 27.3 நாட்கள். அதாவது, மேசத்தில் ஆரம்பிக்கும் சந்திரன், மீண்டும் மேசம் வருவதற்கு ஏறக்குறைய 27 நாட்கள் ஆகிறது. [பூமி சூரியனைச் சுற்றிவருவதால், சந்திரனானது, ஒரு சுற்றின் முடிவில் சூரியனை நெருங்க மேலும் இரண்டு நாட்கள் தேவைப்படும்]. நமது கணக்கின்படி, 27 நாட்களில் சந்திரன் இராசி மண்டலத்தைச் சுற்றிவரும் என்பதால், ஒரு நாளைக்கு 13-20’-00” நகர வேண்டும். மேற்கூறிய மூன்று பஞ்சாங்கங்களின்படி, சராசரி அளவானது 13-20 பாகை எனும் கணக்கில் இருப்பதால்வானியல் மற்றும் சோதிடம் இரண்டிலும் சந்திரனின் நகர்வு சராசரியில் சரியாகவே இருக்கிறது. அதாவது சராசரியாக ஒரு இராசியைக் கடப்பதற்கு 2¼ நாட்கள் தேவைப்படுகிறது. மறுமொழியில் கூறுவதென்றால், 27 விண்மீன்களையும் 27 நாட்களில் கடக்கிறது.



3.       இராகு மற்றும் கேது -

            இராகு மற்றும் கேதுவைப் பொருத்தவரையில் அவை இரண்டும் சூரியசந்திர பாதைகளின் இடைவெட்டுப் புள்ளிகள், அதாவது வெற்றிட முனைகள் என்பதால், சூரிய-சந்திர பாதைகளின் போக்கிற்கு எதிர் திசையில் (காட்சிப் பிழையில்) நகரும் தன்மை கொண்டவை. கணித அளவீட்டின் படி, ஏறக்குறைய 18½ ஆண்டுகளில் அப்புள்ளிகள் ஒரு முழு சுற்றினை முடிக்கும். எனவே, இராகுவானது மேசத்தில் (துலாம்-கேது) ஆரம்பித்து மீண்டும் மேசத்தில் எதிர்மறையில் சுற்றி வந்து சேர்வதற்கு 18½ ஆண்டுகள் ஆகும். அவ்வாறெனில் ஒரு நாளைக்கு நகரும் அளவு என்பது சராசரியாக – 00-03-00 என்பதாக இருக்கும்வான் கணிதத்தில் இராகு கேது இல்லையென்றாலும், பஞ்சாங்கங்களிலும் இந்த அளவானது சராசரியில் சரியாகவே உள்ளது.




                                                                                                         அடுத்து .. பிறக் கோள்களின் நகர்வு...