Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Sunday, March 5, 2017

செவ்வாயுடன் இணைந்த கோள்களின் யோகங்கள் - பிருகத் ஜாதகா – 118


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா

பகுதி   -  பதின்மூன்று

இரட்டைக் கோள்களின் யோகங்கள்… தொடர்ச்சி

3.  பிறக்கும் பொழுது, இராசியில் உள்ள ஒரு வீட்டில் இரட்டைக் கோள்களாக செவ்வாயும் புதனும் ஒன்றாக இருந்தால் அந்த மனிதர் கிழங்குகள் மற்றும் அதுபோன்றவை(1), எண்ணெய், கலை வேலைப்பாடுகள், ஆட்டங்கள் ஆகியவற்றில் ஈடுபடுவார்; செவ்வாயும்  வியாழனும் ஒரு வீட்டில் ஒன்றாக இருந்தால் அந்த மனிதர் ஒரு நகரத்தின் தலைமை அதிகாரியாகவோ அல்லது அரசராகவோ அல்லது வசதிமிக்க வேதியராகவோ(2) இருப்பார்செவ்வாயும் வெள்ளியும் ஒரு வீட்டில் ஒன்றாக இருந்தால் அந்த மனிதர் பசுக்களை பாதுகாப்பவராகவும், ஆட்டங்களில் ஈடுபாடுகொண்டவராகவும், வேலையில் திறமை மிக்கவராகவும், பிற ஆடவரின் மனைவியருடன் உறவு கொள்பவராகவும், சூதாடியாகவும் இருப்பார்; செவ்வாயும் சனியும் ஒன்றாக ஒரு வீட்டில் இருந்தால் அந்த மனிதர்  வறுமையால் பார்க்கப்படுபவராகவும், பொய்யராகவும், பிறரால் வெறுத்து ஒதுக்கப்பட்டவராகவும் இருப்பார்.


குறிப்புகள்:

(1)    பழங்கள், பூக்கள், பட்டைகள், சாறுகள் போன்றவை

(2)    அல்லது கற்றறிந்தவர்வேறு நூலின் படி.



4.  பிறக்கும் பொழுது, இராசியில் உள்ள ஒரு வீட்டில் இரட்டைக் கோள்களாக புதனும்  வியாழனும் ஒன்றாக இருந்தால் அந்த மனிதர் ஆட்டத்திறன் கொண்டவராகவும், இசையில் ஆர்வம் உடையவராகவும், நடனங்களைத் கற்றுத் தேர்ந்தவராகவும் இருப்பார்;  புதனும் வெள்ளியும் ஒரு வீட்டில் ஒன்றாக இருந்தால் அந்த மனிதர் ஒரு நல்ல பேச்சாளராகவும், நாடுகளையும் மக்களையும் ஆள்பவராக இருப்பார்; புதனும் சனியும் ஒன்றாக இருந்தால் அந்த மனிதர் மற்றவர்களை ஏமாற்றி பிழைப்பவராகவும்,  மூத்தோர்களின் அறிவுரையை ஏற்காதவராகவும் இருப்பார்வியாழனும் வெள்ளியும் ஒன்றாக இருந்தால், ஒரு குறிப்பிட்ட துறையில்  கற்றறிந்த அறிஞராக இருப்பதுடன், செல்வமும், மனைவியும், நல்லொழுக்கமும் கொண்டவராக இருப்பார்; வியாழனும் சனியும் ஒன்றாக இருந்தால், அந்த மனிதர் நாவிதராகவோ அல்லது படகோட்டியாகவோ அல்லது சமையற்காரராகவோ இருப்பார்.


இரட்டைக் கோள்களின் யோகங்கள்… தொடரும்



முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17



No comments: