Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Saturday, April 22, 2017

மேசம்-ரிசபம் - சந்திரனின் பலன்கள் - பிருகத் ஜாதகா – 128


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  பதினேழு

பல்வேறு இராசிகளில் சந்திரன்


1. மேச இராசியில் சந்திரன் இருக்கும்போது பிறந்த ஒருவர் வட்டவடிவமான சிவப்பு விழிகளையும், காய்கறி உணவில் விருப்பம் உள்ளவராகவும், இளஞ்சூடான உணவினை உண்பவராகவும் இருப்பார்; வெகுவில் இளகும் மனம் படைத்தவராகவும், பயணங்களில் ஆர்வம் உடையவராகவும், காம இச்சையில் ஆர்வம் உடையவராகவும் இருப்பார்; வலிமையற்ற மூட்டுகளைக் கொண்டிருப்பார்; நிரந்தரமான சொத்துக்களை வைத்திருக்க மாட்டார்; சண்டை இடுவதிலும், பெண்களிடத்தில் ஆசை உடையவராகவும் இருப்பார்; பிறரின் கீழ் பணிபுரிவதில் திறமையானவராக இருப்பார்; நகங்கள் உடைந்தும், தலையில் காயங்களுடனும் இருப்பார்; செருக்கு மிகுந்தவராகவும், சகோதர்களில் மூத்தவராகவும் இருப்பார்; கையில் ஆயுத இரேகையுடன் அதாவது சக்தி இரேகையுடன் இருப்பார்; அடிக்கடி மாறும் மன நிலையுடனும், நீரைக் கண்டு பயப்படுபவராகவும் இருப்பார்.


2. ரிசப இராசியில் சந்திரன் இருக்கும்போது பிறந்த ஒருவர் சிறந்த தோற்றமும் அழகிய நடையும் கொண்டிருப்பார்; பெரிய தொடைகளும் முகமும் கொண்டிருப்பார்; பின்புறம் அல்லது முகம் அல்லது பக்கவாட்டில் வடுக்கள் இருக்கும்; கொடையாளியாக இருப்பார்; துயரங்களைத் தாங்குபவராக இருப்பார்; பெரிய செல்வாக்கும் அதிகாரமும் கொண்டிருப்பார்; கழுத்தில் பெரிதாக புடைத்திருக்கும்; பெண் குழந்தைகள் இருக்கும்; சளித் தொந்தரவால் பாதிக்கப்பட்டிருப்பார்; சொத்துக்கள், உறவினர்கள், பிள்ளைகள் ஆகியோரிடமிருந்து, விலகியிருப்பார்; அனைவராலும் விரும்பப்படுபவராக இருப்பார்; அமைதியான குணம் உடையவராக இருப்பார்; நன்றாக உண்பவராகவும்; பெண்கள் மீது ஆர்வம் கொண்டவராகவும் இருப்பார்; நண்பர்களோடு இணைந்திருப்பார்; நடுவயதிலும், வயதின் முதிர்விலும்(1) மகிழ்ச்சியுடன் இருப்பார்.

குறிப்பு: (1) எனவே இளமைக் காலத்தில் மகிழ்வில்லாமல் இருப்பார்.


இராசிகளில் சந்திரன் தொடரும்…



முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17


No comments: