Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Friday, April 28, 2017

தனுசு-மகரம் - சந்திரனின் பலன்கள் - பிருகத் ஜாதகா – 132


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்


பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  பதினேழு

பல்வேறு இராசிகளில் சந்திரன் தொடர்ச்சி….


9.  தனுசு இராசியில் சந்திரன் இருக்கும்போது பிறந்த ஒருவர் நீண்ட முகமும் கழுத்தும் கொண்டிருப்பார்; தந்தையின் சொத்தினை அனுபவிப்பார்; கொடையாளியாக இருப்பார்; இலக்கிய எழுத்தாளராக இருப்பார்; வலிமையான திறமையான பேச்சினைக் கொண்டிருப்பார்; பெரிய பற்கள், காதுகள், உதடுகள், மூக்கினைக் கொண்டிருப்பார்; பல்வேறு தொழில்களை செய்வார்; நுண்கலையில் சிறந்து விளங்குவார்; எடுப்பில்லாத தோள்பட்டையும், உடைந்த நகங்களையும், நீண்ட கைகளையும் கொண்டிருப்பார்; ஆழ்ந்த ஆராய்ச்சி அறிஞராக இருப்பார்; நல்ல புரிதல் உள்ள மனிதராக இருப்பார்; உறவினர்களை வெறுப்பவராக இருப்பார்; அதிகாராத்திற்கு உட்படாமல், அன்புக் கட்டுப்படுபவராக இருப்பார்.


10.    மகர இராசியில் சந்திரன் இருக்கும்போது பிறந்த ஒருவர் எப்போதும் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இணைந்திருப்பார்; வெளிவட்டாரத்தில் நல்லொழுக்கம் மிக்கவராக இருப்பார்; குறுகிய உடலுறுப்பினையும், அழகிய கண்களையும், மெல்லிய இடுப்பினையும் கொண்டிருப்பார்; பேசுவதை எளிதில் புரிந்துகொள்ளும் திறன் கொண்டிருப்பார்; அனைவராலும் விரும்பப்படுபவராகவும், வேலையில் மெதுவானவராகவும் இருப்பார்; குளிர் தாங்க மாட்டார்; இயற்கையை விரும்புவராகவும், சுதந்திரமானவராகவும் அல்லது வலிமை மிக்கவராகவும், இலக்கிய எழுத்தாளராகவும் இருப்பார்; கருமியாகவும், தாழ்குல பெண்களுடன் உறவு உள்ளவராகவும் இருப்பார்; வெட்கம் அற்றவராகவும், கருனையில்லாதவராகவும் இருப்பார்.

இராசிகளில் சந்திரன் தொடரும்…


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17



No comments: