வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - பதினேழு
பல்வேறு இராசிகளில் சந்திரன் தொடர்ச்சி….
9.
தனுசு இராசியில்
சந்திரன் இருக்கும்போது பிறந்த ஒருவர் நீண்ட முகமும் கழுத்தும் கொண்டிருப்பார்; தந்தையின்
சொத்தினை அனுபவிப்பார்; கொடையாளியாக இருப்பார்; இலக்கிய எழுத்தாளராக இருப்பார்; வலிமையான
திறமையான பேச்சினைக் கொண்டிருப்பார்; பெரிய பற்கள், காதுகள், உதடுகள், மூக்கினைக் கொண்டிருப்பார்;
பல்வேறு தொழில்களை செய்வார்; நுண்கலையில் சிறந்து விளங்குவார்; எடுப்பில்லாத தோள்பட்டையும்,
உடைந்த நகங்களையும், நீண்ட கைகளையும் கொண்டிருப்பார்; ஆழ்ந்த ஆராய்ச்சி அறிஞராக இருப்பார்;
நல்ல புரிதல் உள்ள மனிதராக இருப்பார்; உறவினர்களை வெறுப்பவராக இருப்பார்; அதிகாராத்திற்கு
உட்படாமல், அன்புக் கட்டுப்படுபவராக இருப்பார்.
10. மகர இராசியில்
சந்திரன் இருக்கும்போது பிறந்த ஒருவர் எப்போதும் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இணைந்திருப்பார்;
வெளிவட்டாரத்தில் நல்லொழுக்கம் மிக்கவராக இருப்பார்; குறுகிய உடலுறுப்பினையும், அழகிய
கண்களையும், மெல்லிய இடுப்பினையும் கொண்டிருப்பார்; பேசுவதை எளிதில் புரிந்துகொள்ளும்
திறன் கொண்டிருப்பார்; அனைவராலும் விரும்பப்படுபவராகவும், வேலையில் மெதுவானவராகவும்
இருப்பார்; குளிர் தாங்க மாட்டார்; இயற்கையை விரும்புவராகவும், சுதந்திரமானவராகவும்
அல்லது வலிமை மிக்கவராகவும், இலக்கிய எழுத்தாளராகவும் இருப்பார்; கருமியாகவும், தாழ்குல
பெண்களுடன் உறவு உள்ளவராகவும் இருப்பார்; வெட்கம் அற்றவராகவும், கருனையில்லாதவராகவும்
இருப்பார்.
இராசிகளில் சந்திரன் தொடரும்…
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment