Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Wednesday, April 12, 2017

வாக்கியம் (எதிர்) திருக்கணிதம் (6)








பஞ்சாங்கம் - நண்பரின் கருத்தும் விளக்கமும்


வாக்கியம் (எதிர்) திருக்கணிதம் கட்டுரைத் தொடர்பாக திரு ஓம்பிரகாஷ் அவர்கள் இன்று மின்னஞ்சலில் ஒரு கடிதம் எழுதியிருக்கின்றார். அதனை, மீள்பதிவு செய்திருக்கின்றேன். நிமித்திகனில் வெளிவந்த வாக்கியம்(எ)திருக்கணிதம் கட்டுரையைப் படித்து, அதற்கு கொஞ்சம் ஏற்பாகவும் நிறைய மறுப்பாகவும், நல்லதொரு பதில் பதிவினை வழங்கிய நண்பர் திரு ஓம்பிரகாஷ் அவர்களுக்கு மிக்க நன்றி.


            .திரு.நிமித்திகன்அவர்களுக்குவணக்கம்.

02.04.2017 தேதியிட்டுதாங்கள்எழுதியுள்ளவாக்கியம்எதிர்திருக்கணிதம் (5) என்றகட்டுரையில்அயனாம்சக்கணக்கீடுஇல்லாமல்இருப்பதுவாக்கியம். அயனாம்சக்கணக்கீட்டுடன்இருப்பதுதிருக்கணிதம்என்றுஎழுதியிருக்கின்றீர்கள். இதுதவறாகும்

அயனாம்சக்கணக்கீடுஇல்லாமல்இருப்பதுமேலைநாட்டினர்பின்பற்றும்சாயனமுறைக்கணிதம்தான்

இந்தியாவில்யாவரும்பயன்படுத்தும்நிரயனமுறைக்கணிதத்தில்அயனாம்சம்கணக்கிடப்பட்டுசாயனஸ்புடத்திலிருந்துஅதைக்கழித்துக்கிரகஸ்புடங்களைக்குறிப்பிடுகின்றார்கள்.

எப்படிதிருக்கணிதமுறைப்படியானபஞ்சாங்கங்களில்ஒவ்வொன்றும்வேறுவேறுஅயனாம்சத்தைப்பின்பற்றுகின்றதோஅதேபோல்வாக்கியப்பஞ்சாங்கம்தயாரிப்பவர்களுக்கிடையேயும்அயனாம்சவித்தியாசம்இருக்கின்றது.

ஆனால்அவர்கள்அயனாம்சத்தைத்தங்களதுபஞ்சாங்கங்களில்குறிப்பிடுவதில்லை.
            திருக்பஞ்சாங்கங்கள்எல்லாமேமிகநவீனவானியல்கணிதஅடிப்படையில்தான்தயாரிக்கப்படுகின்றன. அதில்எள்ளளவும்சந்தேகமில்லை

திரிகோணமிதிச்சூத்திரங்களின்படியேஎல்லாத்திருக்கணிதபஞ்சாங்கங்களும்தயாரிக்கப்படுகின்றன. உலகம்முழுமைக்கும்சாயனகிரகஸ்புடங்கள்ஒன்றுதான். நிரயனஸ்புடம்தான்வேறுவேறு

இதற்குக்காரணம்ஒவ்வொருவரும்பின்பற்றும்அயனாம்சமே.
BV.ராமன்வெளியிடும்கிரகஸ்புடங்களுடன்அவரதுஅயனாம்சத்தைச்சேர்த்தால்வரும்சாயனஸ்புடமும்N.C.லாஹிரிவெளியிடும்கிரகஸ்புடங்களுடன்அவரதுஅயனாம்சத்தைச்சேர்த்தால்வரும்சாயனஸ்புடமும்K.P. வெளியிடும்கிரகஸ்புடங்களுடன்கிருஷ்ணமூர்த்திஅயனாம்சத்தைச்சேர்த்தால்வரும்சாயனஸ்புடமும்ஒன்றாகத்தான்இருக்கும். ஆனால்வாக்கியப்பஞ்சாங்கங்களைக்கணிப்பவர்கள்அவர்கள்பயன்படுத்தும்அயனாம்சத்தையும்கிரகஸ்புடங்களையும்கொடுப்பார்களானால்அவைஇரண்டையும்சேர்த்துவரும்சாயனஸ்புடம்வெவ்வேறாகவேஇருக்கும்.

எனவேதிருக்கணிதபஞ்சாங்கங்களிடையேஅயனாம்சம்வித்தியாசம்உள்ளதுவாக்கியப்பஞ்சாங்கங்களிடையேஎந்தவிதவித்தியாசமும்இல்லைஎன்றதொனிஉங்கள்கட்டுரையில்வருவதுதவறாகும்.

திருக்கணிதமுறையைப்பின்பற்றுபவர்களிடையேஅயனாம்சஅளவுவித்தியாசம்இருப்பதைத்தவிர்க்கஇயலாது. ஏனெனில்vernal equinox -ம்இந்தியவானசாஸ்திரிகளால்மேஷம்எனஅழைக்கப்படும்ராசியின்ஆரம்பப்புள்ளியும்எப்போதுஒன்றாகஇருந்தனஎன்பதில்அவர்களுக்கிடையேகருத்துவேறுபாடுஉள்ளது. இரண்டாயிரம்வருடங்களுக்குமுந்திவாழ்ந்தஇந்தியவானசாஸ்திரிகள்அப்போதையகிரேக்கஎகிப்தியவானசாஸ்திரிகள்போலபடம்எதையும்வரைந்துநமக்குவிட்டுச்செல்லவில்லை

மேலும்vernalequinoxமேற்குநோக்கிநகரும்வேகமும்பல்வேறுவானசாஸ்திரிகளால்பல்வேறுவிதமாகக்கூறப்பட்டுள்ளது. அதன்வேகம்ஒவ்வொருநூற்றாண்டுக்கும்வித்தியாசப்படுவதாகத்தற்போதுகணக்கிட்டுள்ளார்கள். எனவேசரியாகஎப்போதுசாயனஸ்புடமும்இநிரயனஸ்புடமும்ஒன்றாகஇருந்ததுஎன்பதுதெரியாதவரைக்கும்அயனாம்சவித்தியாசங்களைத்தவிர்க்கஇயலாது.
மேலும்இந்தச்சிறுவித்தியாசங்கள்கூடச்சோதிடப்பலன்களைப்பெரிதும்மாற்றிவிடும்என்பதையும்ஒப்புக்கொள்வதற்குஇல்லை

நவாம்சம்திரேக்காணம்த்வாதசாம்சம்திரிம்சாம்சம்ஹோராஎன்றபிரிவுகளைத்தவிரவேறுஎதையும்வராகமிகிரர்சொல்லவில்லை. ஒருராசியை 60 பங்குஅளவுக்குப்பிரித்துச்சொல்லும்முந்தையசோதிடஆசிரியர்கள்அல்லது 150 பங்குஅளவுக்குப்பிரித்துச்சொல்லும்நாடிசோதிடர்கள்அதற்கானகாலஅளவைக்கணக்கிடும்கருவியைவைத்திருந்தால்அல்லவோநாம்அந்தப்பிரிவுகளைஒப்புக்கொள்ளவேண்டும்

தங்களதுதிறமையில்நம்பிக்கைஇல்லாததொழில்முறைச்சோதிடர்கள்தாம்இந்தப்பிரிவுகளைக்கொண்டுவந்துபுகுத்திக்கொஞ்சம்நேரம்வித்யாசம்வந்தாலும்பலன்மாறிப்போகும்என்றநம்பிக்கையைவளர்த்திருக்கின்றார்கள்என்றுதான்நான்நம்புகின்றேன்.
பலநூற்றாண்டுகளாகஇந்தியச்சோதிடர்கள்ஜாதகம்எழுதும்போதுராசிநவாம்சம்என்றஇரண்டுகட்டங்களைத்தானேஎழுதுகின்றார்கள்

இந்தஇரண்டும்பொதுவானபலன்கள்சொல்லப்போதுமானவைஎன்றகருத்தின்அடிப்படையில்தானேஅவ்வாறுஎழுதியிருக்கக்கூடும்? அப்படியிருக்கும்போதுசஷ்டியாம்சம்அளவுக்குக்கிரகநிலைகளைக்கணிக்கும்ஒருபொதுவானகணக்கீட்டுமுறைவேண்டும்என்றுநீங்கள்சொல்வதைஒப்புக்கொள்ளஇயலாது. சாயனஸ்புடங்கள்தாம்உலகம்முழுமைக்கும்பொதுவானவை

நிரயனஸ்புடங்கள்பொதுவானஒன்றாகஇருக்கஇயலாது. ஒரேமாதிரியானகணக்குஇருந்தால்மட்டுமேபலனைச்சரியாகச்சொல்லஇயலும்என்றுநீங்கள்சொல்வதும்தவறுதான். ஏனெனில்சாயனமுறையைப்பின்பற்றும்மேலைநாட்டுச்சோதிடர்கள்எல்லோரும்ஒரேமாதிரியாபலனைச்சொல்லுகின்றார்கள்? இல்லையே! பலன்களைச்சரியாகச்சொல்வதுசோதிடரின்தனிப்பட்டதிறமையேதவிரசோதிடர்பின்பற்றும்கணிதமுறைஅல்ல

மேலும்சோதிடத்தால்வாழ்க்கையின்அத்தனைநிகழ்ச்சிகளையும்மிகத்துல்லியமாகச்சொல்லமுடியும்என்றுநம்புவதேதவறுதான். பொதுவானசிலநிகழ்ச்சிகள்சிலகுறிப்பிட்டகாலங்களில்நடைபெறக்கூடும்என்றஅளவுக்குத்தான்பலன்சொல்லமுடியும்

எனவேநீங்கள்வாக்கியம்எதிர்திருக்கணிதம்என்றதலைப்புக்காகஇவ்வளவுநேரம்செலவழிக்கவேண்டாம்என்பதுஎனதுதாழ்மையானஅபிப்ராயம்.


            வாக்கியம்எதிர்திருக்கணிதம்என்பதுநூற்றாண்டுச்சண்டை

திருக்கணிதம்அவ்வப்போதுவரும்திருத்தங்களைச்செய்துதன்னைப்புதுப்பித்துக்கொள்கிறதுஎன்பதையும்வாக்கியம்ஆயிரம்ஆண்டுப்பழமைக்குள்சுகமாகதூங்கிக்கொண்டிருக்கின்றதுஎன்றஉண்மையையும்புரிந்தவர்கள்இந்தசண்டைகளுக்குள்சிக்கிக்கொள்வதில்லை.

அன்புடன்
.ஓம்பிரகாஷ்

திரு ஓம்பிரகாஷ் அவர்களின் வலைதள முகவரி:  www.kanyasasi.com.



ஐயா, தங்களின் பதில் உரையில் குறிப்பிடப்பட்டுள்ள சில தகவல்களுக்கு நான் நிறைய விளக்கங்கள் அளிக்க வேண்டியுள்ளது. அது நீண்டதொரு மறுப்புக் கடிதமாக ஆகிவிடக் கூடாது என்று அஞ்சுகிறேன். அதனால் தவிர்த்து விடுகிறேன். இருப்பினும் ஒரு சில தகவல்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

·         என்னைப் பொருத்தவரையில், சோதிடம் என்பது ஒரு கணித அறிவியல்.
·         அதன் அடிப்படை என்பது, Probability, Permutation and Combination கணிதமாகும்.

·         ஆனால் தொன்றுதொட்டே பலன் வரையறை செய்தல் என்பதில், மிகப்பெரும் சோதிட மேதைகளுக்கு இடையேக் கூட, மாறுபட்டக் கருத்து இருந்து வருகிறது.
·         காரகர், வராகமிகிரர், பரசாரர், காளிதாசர், மந்திரேஸ்வரர் போன்ற மாமேதைகளுக்கு இடையே கூட பலன் வரையறை செய்வதில் வேறுபாடு இருப்பதைக் காணமுடிகிறது.

·         ஒரு சாதகத்தினை ஆராய்ந்து பலன் உரைப்பதில், உங்களுக்கும் எனக்கும் கூட நிச்சயம் வேறுபாடு இருக்கக்கூடும்.

·         அவ்வாறு வேறுபாடு இருப்பதற்கு பல்வேறு காரணிகள் இருக்கின்றன.

·         அதில் பஞ்சாங்கங்களும் மிக முக்கியக் காரணியாக இருக்கின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை.

·         நிமித்திகனில் வெளிவரும் பதிவு ஆய்வு நோக்கில் எழுதுவதால், பஞ்சாங்கத்தினையும் தொட்டு செல்ல வேண்டும் என்பதால், அக்கட்டுரையை எழுதினேன்.

·         அயனாம்சக் கணிதம் என்பது சற்று சிக்கலான, குழப்பமானக் கணிதம் என்பதால், எளிதில் புரிவதற்காக ” அயனாம்சக் கணக்கீடு இல்லாமல் இருப்பது வாக்கியம். அயனாம்ச கணக்கீட்டுடன் இருப்பது திருக்கணிதம்.” என்று எழுதினேன். “அயனாம்ச கணக்கீடு முறையாக இல்லாமல்” என்று எழுதியிருந்தால் சரியாக இருந்திருக்கும் என்று எண்ணுகிறேன். இருப்பினும் தாங்கள் விளக்கமாகச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

·         தற்போதைய வானியல் கணித அடிப்படையில் திருத்தம் செய்யப்பட்டு, உலகம் முழுமைக்கும் ஒரே பஞ்சாங்கம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே சரியான முடிவாக இருக்கும்.  இதைத்தான் இங்கே வலியுறுத்த விரும்புகிறேன்.

·         சோதிடம் என்பது அறிவியல் கணிதம் என்பது உண்மையானால், பலன் உரைத்தல் என்பதில் வேறுபாடு இருக்கக்கூடாது என்பதில் உங்களுக்கு மாறுபட்டக் கருத்து இருக்காது என்று நினைக்கிறேன்.

·         கணக்கீடுகள் என்பது காலந்தோரும் update செய்யப்படவேண்டும்.

·         பிருகத் சாதகத்தில் இராகு-கேது ஆகியவற்றின் முக்கியத்துவம் அறவே இல்லை. ஆனால் இன்று இராகு-கேது இவற்றைத் தவிர்த்துவிட்டு சோதிட பலன் உரைக்க முடியாது. இது கால மாற்றத்தில் வந்தது அல்லவா?

·         எனது உறவினர் ஒருவருக்கு சென்ற மாதம் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. வெறும் 7 நிமிட வித்தியாசம்தான். இராசி மற்றும் நவாம்சத்தில் இரண்டு குழந்தைகளுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை. கண்டிப்பாக இரண்டு குழந்தைகளும் ஒரே வாழ்க்கை நிலையினை அடையப்போவதில்லை. இந்த சூழலில், ஒரு சாதகத்தினை இன்னும் நுணுக்கமாக எவ்வளவு பிரித்து அறியமுடியுமோ (சஷ்டியாம்சம் அளவிற்கு) அவ்வளவு பிரித்து அறிவதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.

·         பலன் உரைத்தல் என்பது சோதிடரின் தனித்துவமான திறமையின் காரணமாகத்தான் அமைகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அப்படி பலன் உரைப்பதற்கு ஏன் ஒரு தெளிவான கணக்கீட்டினை உருவாக்கக் கூடாது என்பதுதான் என் கேள்வி.

·         என்னைப் பொருத்தவரையில் சோதிடம் என்பது அறிவியற்கணிதம். அது அறிவியற்கணிதம் என்றால் மதங்களுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். அகஸ்டினும் ஏற்றுக் கொள்ள வேண்டும், அப்துல்லாவும் ஏற்றுக் கொள்ள வேண்டும், அறிவு நம்பியும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

·         எல்லா கணித ஆசிரியரும் சிறப்பாக கணிதம் போடுவதில்லை. ஆனால் எல்லோருக்கும் கணித விதிமுறைகள் ஒன்றுதான். அதுபோலத்தான் சோதிடமும் இருக்க வேண்டும். எல்லா சோதிடர்களும் சிறப்பாக பலன் உரைப்பதில்லை என்றாலும், அடிப்படைக் சோதிடக் கணித விதிமுறைகள் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். அப்போதுதான், சோதிடத்தின் நம்பகத்தன்மை வலிமை பெறும்.

·         சோதிடம் பொய்யாய் போவதற்கு காரணிகள் நிறைய இருக்கின்றன. அவைகளை சரிசெய்யாமல், சோதிடம் அறிவியல் என்று கூறுவது முறையல்ல என்பதே எனது கருத்து.

அன்புடன்
நிமித்திகன்.

No comments: