Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Wednesday, May 31, 2017

நவாம்ச சந்திரனின் பலன்கள்(5) -பிருகத் ஜாதகா – 152


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  பத்தொன்பது

கோள்களின் பார்வை பலன்கள் தொடர்ச்சி…


9. சந்திரன் வர்க்கோத்தம நிலையில் இருந்து, அதன் சொந்த நவாம்சத்திலோ அல்லது வேறு நவாம்சத்திலோ இருந்தால், சந்திரனானது பல்வேறு நவாம்சத்தில் இருந்து பல்வேறு கோள்களால் பார்க்கபடுவதால் ஏற்படும் நற்பலன்கள் என்பது அவைகளுக்கு ஏற்ப முழுமையாக, அல்லது முற்றிலும் இல்லாமல் அல்லது குறைவாக இருக்கும்; அதுபோல் தீய பலன்கள் என்பது குறைவாக அல்லது முற்றிலும் இல்லாமல் அல்லது முழுமையாக இருக்கும்(1). நவாம்ச அதிபதி வலிமை மிக்கதாக இருந்தால், நவாம்சத்தினைக் கோள்கள் பார்க்கப்படுவதால்(2) ஏற்படும் பலன்கள் மட்டுமே கிடைக்கும், சந்திரன் இருந்து கோள்கள் பார்ப்பதால் கிடைக்கக்கூடிய பலன்கள் கிடைக்காது.


குறிப்பு:

(1)  இதே குறிப்புகள் உதய இராசிக்கும் மற்றும் சூரியன் குறிப்பிட்ட நவாம்சத்தில் இருந்து பல்வேறு கோள்களால் பார்க்கப்படுவதால் ஏற்படும் பலன்களுக்கும் பொருந்தும்.

(2)  சந்திரன் இருக்கும் நவாம்சங்கள் அல்லது உதய நவாம்சம் மற்றும் கோள்களால் பார்க்கப்படுதல்.


கோள்களின் பார்வைகளின் பலன்கள் – முற்றும்


 அடுத்து - பகுதி-20 -  பாவங்களில் கோள்கள்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17



Tuesday, May 30, 2017

நவாம்ச சந்திரனின் பலன்கள்(4) - பிருகத் ஜாதகா – 151


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  பத்தொன்பது

கோள்களின் பார்வை பலன்கள் தொடர்ச்சி…


8. பிறக்கும் நேரத்தில், சந்திரனானது சனியின் நவாம்சத்தில் இருந்து, அது சூரியனால் பார்க்கப்பட்டால், அந்த மனிதர் குறைவான குழந்தைகளைக் கொண்டிருப்பார்; செவ்வாயால் பார்க்கப்பட்டால், செல்வத்தின் மூலம் மகிழ்ச்சியை இழந்தவராக இருப்பார்; புதனால் பார்க்கப்பட்டால் கர்வம் மிக்கவராக இருப்பார்; வியாழனால் பார்க்கப்பட்டால் அவரது நிலைக்கு ஏற்ப உரிய வேலைகளைச் செய்வார்; வெள்ளியால் பார்க்கப்பட்டால் தாழ்நிலைப் பெண்களின் மீது மோகம் கொண்டிருப்பார்; சனியால் பார்க்கப்பட்டால் அவர் கருமியாக இருப்பார்(1). மேலே குறிப்பிட்டவை அனைத்தும் சந்திரன் ஒரு குறிப்பிட்ட நவாம்சத்தில் இருந்து அது பல்வேறு கோள்களினால் பார்க்கப்படுவதால் ஏற்படும் பலன்கள் என்பது சூரியனுக்கும் பொருந்தும் – அதாவது சூரியனால் பார்க்கப்படுவது என்பது சந்திரனால் பார்க்கப்படுவது எனும் விதிவிலக்கினைத் தவிர.

குறிப்பு:
(1)  இதே குறிப்புகள் உதய நவாம்சத்திற்கும், சந்திரனுக்கு இருப்பதுபோலவே பொருந்தும் – ஆனால் சந்திரன் உதய இராசியைப் பார்க்குமானால், அது கடகத்தினைத் தவிர பிற இராசியாக இருந்தால், அந்த பலனானது தீமையாக இருக்கும்.
நவாம்ச சந்திரனின் பலன்கள்.. தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17



Monday, May 29, 2017

நவாம்ச சந்திரனின் பலன்கள்(3) - பிருகத் ஜாதகா – 150



வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  பத்தொன்பது

கோள்களின் பார்வை பலன்கள் தொடர்ச்சி…


7. பிறக்கும் நேரத்தில், சந்திரனானது சிம்மத்தின் நவாம்சத்தில் இருந்து, அது சூரியனால் பார்க்கப்பட்டால், அந்த மனிதர் கோபக்காரராக இருப்பார்; செவ்வாயால் பார்க்கப்பட்டால் அரசரால் ஆதரிக்கப்படுவார்; புதனால் பார்க்கப்பட்டால், புதையலைக் கண்டுபிடிப்பதன் மூலம் செல்வந்தராவார்; வியாழனால் பார்க்கப்பட்டால் செல்வாக்கு மிக்கவராகவும் அதிகாரம் மிக்கவராகவும் இருப்பார்; வெள்ளியால் பார்க்கப்பட்டால் குழந்தைகள் இருக்காது; சனியால் பார்க்கப்பட்டால் தீய செயல்களில் ஈடுபடுவார்.


பிறக்கும் நேரத்தில், சந்திரனானது வியாழனின் நவாம்சத்தில் இருந்து, அது சூரியனால் பார்க்கப்பட்டால், அந்த மனிதர் அதிகாரமிக்கவராக இருப்பார்; செவ்வாயால் பார்க்கப்பட்டால் சண்டைகளின் விதிமுறைகளை அறிந்தவராக இருப்பார்; புதனால் பார்க்கப்பட்டால் நகைச்சுவைத் திறன் கொண்டவராக இருப்பார்; வியாழனால் பார்க்கப்பட்டால், அவர் ஒரு அமைச்சராக இருப்பார்; வெள்ளியால் பார்க்கப்பட்டால் வீரியம் இல்லாத மனிதராக இருப்பார்; சனியால் பார்க்கப்பட்டால், அறக்கட்டளைகள நிர்வாகிப்பார்.


நவாம்ச சந்திரனின் பலன்கள்.. தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17



Sunday, May 28, 2017

நவாம்ச சந்திரனின் பலன்கள்(2) - பிருகத் ஜாதகா – 149


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  பத்தொன்பது

கோள்களின் பார்வை பலன்கள் தொடர்ச்சி…


6. பிறக்கும் நேரத்தில், சந்திரனானது புதனின் நவாம்சத்தில் இருந்து, அது சூரியனால் பார்க்கப்பட்டால், அந்த மனிதர் கலைஞர் அல்லது நாட்டியக்காரராக இருப்பார்; செவ்வாயால் பார்க்கப்பட்டால், அவர் திருடராக இருப்பார்; புதனால் பார்க்கப்பட்டால் பெருங்கவிஞராக இருப்பார்; வியாழனால் பார்க்கப்பட்டால், அவர் அமைச்சராக இருப்பார்; வெள்ளியால் பார்க்கப்பட்டால், இசையில் திறமை மிக்கவராக இருப்பார், சனியால் பார்க்கப்பட்டால், எந்திரதொழில் நுட்பத்தில் சிறந்து விளங்குவார்.


பிறக்கும் நேரத்தில், சந்திரனானது கடக நவாம்சத்தில் இருந்து, அது சூரியனால் பார்க்கப்பட்டால், அந்த மனிதர் சிறு உடலமைப்பு கொண்டவராக இருப்பார்; செவ்வாயால பார்க்கப்பட்டால் அவர் ஒரு கருமியாக இருப்பார் அல்லது குறைவான செல்வம் கொண்டிருப்பார்; புதனால் பார்க்கப்பட்டால் யோகக்கலையில் ஈடுபாடு கொண்டவராக இருப்பார்; வியாழனால் பார்க்கப்பட்டால், ஒரு தலைவராக இருப்பார்; வெள்ளியால் பார்க்கப்பட்டால் பெண்களால் வளம் பெறுவார்; சனியால் பார்க்கப்பட்டால் வேலையில் ஆர்வம் கொண்டவராக இருப்பார்.


நவாம்ச சந்திரனின் பலன்கள்.. தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17



Saturday, May 27, 2017

நவாம்ச சந்திரனின் பலன்கள் - பிருகத் ஜாதகா – 148

வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  பத்தொன்பது

கோள்களின் பார்வை பலன்கள் தொடர்ச்சி…


5. பிறக்கும் நேரத்தில், சந்திரனானது செவ்வாயின் நவாம்சத்தில் இருந்து, அது சூரியனால் பார்க்கப்பட்டால், அந்த மனிதர் ஒரு நகரத்தின் பாதுகாவலராக இருப்பார்; செவ்வாயால் பார்க்கப்பட்டால், பிறரைத் துன்புறுத்துவதில் ஆர்வம் கொண்டவராக இருப்பார்; புதனால் பார்க்கப்பட்டால், சண்டைப்பயிற்சியில் திறமையானவராக இருப்பார்; வியாழனால் பார்க்கப்பட்டால், அவர் அரசனாக ஆவார்; வெள்ளியால் பார்க்கப்பட்டால் செல்வந்தராக இருப்பார்; சனியால் பார்க்கப்பட்டால் வம்புகளை வாங்கிவருவார்.


பிறக்கும் நேரத்தில், சந்திரனானது வெள்ளியின் நவாம்சத்தில் இருந்து, அது சூரியனால் பார்க்கப்பட்டால், அந்த மனிதர் ஒரு முட்டாளாக இருப்பார்; அது செவ்வாயால் பார்க்கப்பட்டால், அவர் பிறர் மனைவியின் மீது மோகம் கொண்டவராக இருப்பார்; புதனால் பார்க்கப்பட்டால் நல்ல கவிஞராக இருப்பார் அல்லது பிறரின் கருத்துப்படி, பிறரின் மனைவியைக் கவர்பவராக இருப்பார்; வியாழனால் பார்க்கப்பட்டால் சிறந்த நூல்களைப் படைப்பவராக இருப்பார்; வெள்ளியால் பார்க்கப்பட்டால், வசதியான வாழ்க்கையை விரும்புவராக இருப்பார்; சனியால் பார்க்கப்பட்டால், பிறர் மனைவியுடன் சேர்ந்து வாழ்வார்.


நவாம்ச சந்திரனின் பலன்கள்.. தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17