Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Sunday, May 7, 2017

இராசியில் புதனின் பலன்கள் -பிருகத் ஜாதகா – 138


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  பதினெட்டு


இராசிகளில் பிறக் கோள்கள் தொடர்ச்சி…


8. மேசம் அல்லது விருச்சிகத்தில் புதன் இருக்கும்போது பிறந்த ஒருவர் சூதாட்டத்தில் விருப்பம் உள்ளவராக இருப்பதுடன், கடனில் வாழ்பவராகவும், குடிகாரனாகவும் இருப்பார்; இறை நம்பிக்கையற்றவராக இருப்பார்; சாத்திரங்களுக்கு எதிராக வாதாடுவார்; திருடனாக இருப்பார்; ஏழையாக இருப்பார்; சராசரியான மனைவியைப் பெற்றிருப்பார்; ஏமாற்றுப் பேர்வழியாக இருப்பார்; பொய்யராக இருப்பார்; தவறான வழியில் செல்பவராக இருப்பார்.


ரிசபம் அல்லது துலாத்தில் புதன் இருக்கும்போது பிறந்த ஒருவர் மத போதகராக இருப்பார்; நிறைய குழந்தைகளும் நிறைய மனைவிகளும் கொண்டிருப்பார்; பணம் சம்பாதித்தலில் எப்போதும் ஈடுபடுவார்கொடுப்பதில் தாராளமாக இருப்பார்; குருவை(1) மதிப்பவராக இருப்பார்.

குறிப்பு(1) உரையாசரியரின் கருத்துப்படி, பெற்றோரையும் மதிப்பவராக இருப்பார்.


9. மிதுனத்தில் புதன் இருக்கும்போது பிறந்த ஒருவர் தற்பெருமை மிக்கவராக இருப்பார்; அறிவியல், இசை, நாட்டியம், ஓவியம் கற்றறிந்தவராக இருப்பார்;  இனிமையான பேச்சாளாராக இருப்பார், வசதியானவராக இருப்பார்.


கடகத்தில் புதன் இருக்கும்போது பிறந்த ஒருவர் தண்ணீர்(1) தொடர்புடைய வேலையின் மூலம் பணம் ஈட்டுபவராக இருப்பார்; அவரது உறவினரால் வெறுக்கப்படுபவராக இருப்பார்.


குறிப்பு(1) பிற நூலின்படி, வலிமையான செயல்பாடுகளின் காரணமாக.


இராசிகளில் பிறக் கோள்கள் தொடரும்…

முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17



No comments: