Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Tuesday, May 9, 2017

இராசியில் புதனின் பலன்கள் தொடர்ச்சி - பிருகத் ஜாதகா – 139


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  பதினெட்டு

இராசிகளில் பிறக் கோள்கள் தொடர்ச்சி…


10. சிம்மத்தில் புதன் இருக்கும்போது பிறந்த ஒருவர் பெண்களால் வெறுக்கப்படுபவராக இருப்பார்; ஏழையாக இருப்பார்; வசதியற்றவராகவோ அல்லது குழந்தைகள் இன்றியோ இருப்பார்; இடம் விட்டு இடம் செல்பவராக இருப்பார்; வெகுளியாக இருப்பார்; பெண்களின்மீது ஆசை கொண்டவராக இருப்பார்; அவமதிப்புக்கு உள்ளாவார்.


கன்னியில் புதன் இருக்கும்போது பிறந்த ஒருவர் தானம் வழங்குவதில் தாராளமானவராக இருப்பார்; கற்றறிந்தவராக இருப்பார்; பல நற்குணங்களைக் கொண்டிருப்பார்; வசதியானவராக இருப்பார்; அமைதியான குணம் கொண்டவராக இருப்பார்; தனித்துவமானவராகவும் பயமற்றவராகவும் இருப்பார்.


11. மகரத்தில் அல்லது கும்பத்தில் புதன் இருக்கும்போது பிறந்த ஒருவர் பிறருக்காக உழைப்பவராக இருப்பார்; ஏழையாக இருப்பார்; சிற்பியாக இருப்பார்; கடனில் வாழ்பவராக இருப்பார், ஊதியம் இல்லாமல் பணியாற்றுபவராக இருப்பார்.


தனுசுவில் புதன் இருக்கும்போது பிறந்த ஒருவர் அரசர்களால் மதிக்கப்படுபவராக இருப்பார்; அறிவியலும் சட்டமும் பயின்றவராக இருப்பார்.


மீனத்தில் புதன் இருக்கும்போது பிறந்த ஒருவர் பிறரை நண்பராக்கிக் கொள்வதில் திறமையானவராக இருப்பார்; பிறரின் எண்ண ஓட்டத்தை எளிதில் அறிந்து கொள்ளக்கூடியவராக இருப்பார்; தாழ்குல மக்களின் கைத்தொழிலினை, அதாவது செருப்புத் தைத்தல் போன்றவை, கற்றறிந்தவராக இருப்பார்.



இராசிகளில் பிறக் கோள்கள் தொடரும்…

முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17



No comments: