Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Monday, May 15, 2017

இராசியில் சனியின் பலன்கள் - பிருகத் ஜாதகா – 142



வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  பதினெட்டு

இராசிகளில் பிறக் கோள்கள் தொடர்ச்சி…


17. மேசத்தில்  சனி இருக்கும்போது பிறந்த ஒருவர் முட்டாளாக இருப்பார்; இடம் விட்டு இடம் அலைபவராக இருப்பார்; தற்பெருமையாளனாக இருப்பார்; நண்பர்கள் இருக்க மாட்டார்கள்.


விருச்சிகத்தில்  சனி இருக்கும்போது பிறந்த ஒருவர் சிறைவாசியாக இருப்பார்; அடி உதை வாங்குபவராக இருப்பார்; வேலையில் கவனம் செலுத்த மாட்டார்; கருணையில்லாதவராக இருப்பார்.


மிதுனம் அல்லது கன்னியில்  சனி இருக்கும்போது பிறந்த ஒருவர் வெட்கமற்றவராக இருப்பார்; துக்கத்தில் இருப்பார்; ஏழையாக இருப்பார்; குழந்தைகள் இருக்காது; மோசமான ஓவியர் அல்லது எழுத்தாளராக இருப்பார்; சேவகராக இருப்பார்; தலைமை அதிகாரியாக இருப்பார்.


18. ரிசபத்தில்  சனி இருக்கும்போது பிறந்த ஒருவர் கீழ்குலப் பெண்களின் மீது காமம் கொண்டவராக இருப்பார்; குறைவான செல்வம் கொண்டிருப்பார், பல மனைவிகள் கொண்டிருப்பார்.


துலாம் இராசியில்  சனி இருக்கும்போது பிறந்த ஒருவர்  புகழ்மிக்க மனிதராக இருப்பார்; ஒரு நகரத்தில்  கட்சியின் தலைவராக அல்லது படையின் தலைவராக இருப்பார்; செல்வந்தராக இருப்பார்.


கடகத்தில்  சனி இருக்கும்போது பிறந்த ஒருவர் ஏழையாக இருப்பார்; பற்கள் குறைவாக இருக்கும்; தாயிடமிருந்து பிரிந்து இருப்பார்; குழந்தைகள் இருக்காது; முட்டாளாக இருப்பார்.


சிம்மத்தில்  சனி இருக்கும்போது பிறந்த ஒருவர் மரியாதைக்கு உரியவராக இருக்க மாட்டார்; துயரத்தில் இருப்பார்; குழந்தைகள் இருக்காது, சுமைகளைத் தூக்குபவராக இருப்பார்.

சனியின் பலன்கள் தொடரும்…

முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17


No comments: