Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Saturday, May 20, 2017

சந்திரனைப் பார்க்கும் கோள்களின் பலன்கள் தொடர்ச்சி - பிருகத் ஜாதகா – 145

வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  பத்தொன்பது


கோள்களின் பார்வை பலன்கள் தொடர்ச்சி…


2. பிறக்கும் நேரத்தில், சந்திரன் சிம்மத்தில் இருந்து அது புதனால் பார்க்கப்படுமானால், அவர் சோதிடராக இருப்பார்; அது வியாழனால் பார்க்கப்படுமானால், செல்வந்தராக இருப்பார்; சுக்கிரனால் பார்க்கப்பட்டால், அவர் அரசனாக ஆவார்; சனியால் பார்க்கப்படுமானால் அவர் நாவிதராக இருப்பார்; சூரியனால் பார்க்கப்படுமானால், அரசராக இருப்பார்; செவ்வாயால் பார்க்கப்பட்டாலும் அவர் அரசராக ஆவார்.


பிறக்கும் நேரத்தில், சந்திரன் கன்னியில் இருந்து அது புதனால் பார்க்கப்படுமானால், அந்த மனிதர் அரசராக இருப்பார்; அது வியாழனால் பார்க்கப்படுமானால், படையின் தளபதியாக இருப்பார்; சுக்கிரனால் பார்க்கப்பட்டால், அவர் விழிப்புணர்வு மிக்கவராக இருப்பார்; சனியால், சூரியனால் அல்லது  செவ்வாயால் பார்க்கப்பட்டால் அவர் பெண்களின் கீழ் வேலை செய்வார்.


பிறக்கும் நேரத்தில், சந்திரன் துலாத்தில் இருந்து அது புதனால் பார்க்கப்படுமானால், அவர் அரசராக இருப்பார்; அது வியாழனால் பார்க்கப்படுமானால், பொற்கொல்லராக இருப்பார்; சுக்கிரனால் பார்க்கப்பட்டால், அவர் வணிகராக இருப்பார்; சனியால், சூரியனால் அல்லது  செவ்வாயால் பார்க்கப்பட்டால் அவர் ஏமாற்று பேர்வழியாக இருப்பார்.


பிறக்கும் நேரத்தில், சந்திரன் விருச்சிகத்தில் இருந்து அது புதனால் பார்க்கப்படுமானால், அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கும் (அல்லது வேறு சிலரின் கருத்துப்படி அவருக்கு இரண்டு தந்தைகள் இருப்பர்); அது வியாழனால் பார்க்கப்படுமானால், பணிவு மிக்கவராக இருப்பார்; சுக்கிரனால் பார்க்கப்பட்டால், அவர் சலவையாளராக இருப்பார்; சனியால் பார்க்கப்பட்டால் உடலுறுப்பில் குறைகள் இருக்கும்; சூரியனால் பார்க்கப்பட்டால் ஏழையாக இருப்பார்; செவ்வாயால் பார்க்கப்பட்டால் அரசராக ஆவார்.


கோள்களின் பார்வை பலன்கள்.. தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17



No comments: