வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபது
பாவங்களில் கோள்களின் பலன்கள்
1. ஒருவர் பிறக்கும் நேரத்தில், சூரியன் இலக்கினத்தில் இருந்தால், அந்த மனிதர் சண்டை இடுவதில் விருப்பம் கொண்டிருப்பார், மெதுவாக வேலை செய்பராக இருப்பார், பார்வையற்றவராக, கருணையற்றவராக இருப்பார்; ஆனால், மேசம் இலக்கினமாக இருந்து அதில் சூரியன் இருந்தால், அந்த மனிதர் செல்வந்தராகவும், கண் நோய் உடையவராகவும் இருப்பார்; சிம்மம் இலக்கினமாக இருந்து அதில் சூரியன் இருந்தால், அவருக்கு மாலைக் கண் நோய் இருக்கும்; துலாம் இலக்கினமாக இருந்து அதில் சூரியன் இருந்தால் அந்த மனிதர் குருடராகவும் ஏழையாகவும் இருப்பார்; கடகம் இலக்கினமாக இருந்து அதில் சூரியன் இருந்தால், அவருக்கு கண்ணில் கரும்புள்ளி இருக்கும். இலக்கினத்திலிருந்து 2வது வீட்டுல் சூரியன் இருந்தால், அந்த மனிதர் பெரும் பணக்காரராகவும், அரசரால் சொத்துக்களை இழப்பவராகவும், முகத்தில் வியாதி உடையவராகவும் இருப்பார்.
2. பிறக்கும் நேரத்தில், சூரியன் இலக்கினத்திலிருந்து 3வது வீட்டில் இருந்தால் அந்த மனிதர் புத்திசாலியாகவும், வலிமை மிக்கவராகவும் இருப்பார்; அது நான்காவது வீட்டில் இருந்தால் அவர் துன்பத்தில் உழல்பவராகவும், மனக் குழப்பம் மிக்கவராகவும் இருப்பார்; அது 5வது வீட்டில் இருந்தால், அவருக்கு குழந்தைகள் இருக்காது என்பதுடன் ஏழையாகவும் இருப்பார்; 6வது வீட்டில் இருந்தால் அவர் வலிமை மிக்கவராகவும் எதிரிகளை வசப்படுத்தப்படுபவராகவும் இருப்பார்(1)
குறிப்பு (1) : வேறு நூலின்படி, சூரியனானது இலக்கினத்திலிருந்து 6வது வீட்டில் இருந்தால், அந்த மனிதரின் எதிரிகள் அழிவினைச் சந்திப்பர். சத்தியாச்சாரியாரின் கருத்துப்படி, அத்தகைய மனிதர் எதிரிகள், நோய்கள், துன்பங்கள் இல்லாமல் இருப்பார்; ஆனால் யவனாச்சாரியார் மற்றும் சுஜிதவஜா அவர்களின் கருத்திற்கு இந்த உரையானது வலிமை சேர்க்கிறது.
பாவங்களில் கோள்கள்.. தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment