Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Monday, July 3, 2017

வியாழன்-வெள்ளி பாவக பலன்கள் -பிருகத் ஜாதகா – 156



வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபது

பாவங்களில் கோள்களின் பலன்கள்.. தொடர்ச்சி


7.         ஒருவர் பிறக்கும்போது, வியாழனானது இலக்கினம் முதல் 12வீடுகளில் இருந்தால், அந்த மனிதர் முறையே, கற்றறிந்தவர், நல்ல பேச்சாளர், கருமி, வசதியான வாழ்க்கை, புத்திக் கூர்மையாளர், எதிரிகள் அற்ற நிலை, அவரின் தந்தையைக் காட்டிலும் புகழ்மிக்கவர், அவரது தகுதிக்கு குறைவான வேலைகளை செய்தல், பக்தர், சொத்துக்களை உடையவர், மிகுந்த இலாபம் அடைபவர், தீய குணங்கள் கொண்டவர்.


8.         ஒருவர் பிறக்கும்போது,  வெள்ளியானது இலக்கினத்தில் இருந்தால், காதல் செய்வதில் திறமை மிக்கவராக இருப்பதுடன் வசதியான வாழ்க்கையும் கொண்டிருப்பார்; வெள்ளியானது 7வது வீட்டில் இருந்தால், சச்சரவுகளில் ஈடுபடுபவராகவும் காம இச்சைக் கொண்டவராகவும் இருப்பார்; வெள்ளியானது 5வது வீட்டில் இருந்தால், அவர் வசதியான வாழ்க்கை வாழ்வார், இதர வீடுகளில் இருந்தால்(1) அத்தகைய வீடுகளில் வியாழன் இருந்தால் என்ன பலன் கிடைக்குமோ அதே பலன்கள் கிடைக்கும்; ஆனால் வெள்ளியானது பிறக்கும் நேரத்தில் மீனத்தில் இருந்தால், அந்த மனிதர் செல்வந்தராக இருப்பார்.


குறிப்பு: (1) அதாவது, 2வது, 3வது, 4வது, 6வது, 8வது, 9வது, 10வது, 11வது, 12வது வீடுகள்.


பாவங்களில் கோள்கள்.. தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17




No comments: