Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Tuesday, July 4, 2017

சனியின் பாவக பலன்கள் - பிருகத் ஜாதகா – 157



வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்


பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபது

பாவங்களில் கோள்களின் பலன்கள்.. தொடர்ச்சி


9.         ஒருவர் பிறக்கும்போது, சனி இலக்கினத்தில் இருந்தால், அந்த மனிதர் ஏழையாகவும், நோய்வாய்பட்டவராகவும், காம இச்சை கொண்டவராகவும், தூய்மை இல்லாதவராகவும், இளவயதில் நோயாளியாகவும், தெளிவில்லாத பேச்சினைக் கொண்டவராகவும் இருப்பார். ஆனால், இலக்கினமானது துலாம், தனுசு, மகரம், கும்பம் அல்லது மீனமாக இருந்தால், அந்த மனிதர், அரசருக்கு உரிய மகிழ்ச்சியுடனும், ஒரு கிராமத்தையோ அல்லது ஒரு நகரத்தினையோ ஆளக்கூடியவராகவும், படித்தவராகவும், நல்ல உடலமைப்பு கொண்டவராகவும் இருப்பார். ஆனால், சனியானது மற்ற இடங்களில் இருந்தால் (2 முதல் 12 வரை), அதன் பலனானது அத்தகைய இடங்களில் சூரியன் இருந்தால் கிடைக்கும் பலனாக இருக்கும்.


பாவங்களில் கோள்கள்.. தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17


No comments: