Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Saturday, September 2, 2017

வாகன விபத்தில் இறக்கும் நிலை - பிருகத் ஜாதகா – 191


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து மூன்று

இறப்பு நிலை          .தொடர்கிறது

6.         ஒருவர் பிறக்கும் நேரத்தில், 8வது, 10வது, 1வது, 4வது வீடுகளில் முறையே, தேய்பிறைச் சந்திரன், செவ்வாய், சனி, சூரியன் ஆகியவை இருந்தால், அந்த மனிதரின் இறப்பானது தடி, கோல், கம்பு ஆகியவற்றால் தாக்கப்பட்டு நிகழும். 10வது, 9வது, 1வது, 5வது ஆகிய வீடுகளில் முறையே தேய்பிறைச் சந்திரன், செவ்வாய், சனி, சூரியன் ஆகியவை இருந்தால், அந்த மனிதரின் இறப்பானது புகை, நெருப்பு, சிறையில் அடைக்கப்பட்டு அல்லது அடிபட்டு நிகழும்.


7.         ஒருவர் பிறக்கும் நேரத்தில், 4வது, 7வது, 10வது வீடுகளில் முறையே செவ்வாய், சூரியன், சனி ஆகியவை இருந்தால், அந்த மனிதர் ஆயுதத்தால், நெருப்பால் அல்லது அரசரால் இறப்பார், 2வது, 4வது 10வது வீடுகளில் முறையே சனி, சந்திரன் செவ்வாய் ஆகியவை இருந்தால், அவர் உடலில் காயங்களும் புண்ணும் ஏற்பட்டு இறந்து போவார்.


8.         ஒருவர் பிறக்கும் நேரத்தில், 10வது வீட்டில் சூரியனும், 4வது வீட்டில் செவ்வாயும் இருந்தால், அந்த மனிதர் வாகனத்திலிருந்து விழுந்து அல்லது பயணத்தில் இறப்பார். செவ்வாய் 7வது வீட்டிலும், சூரியன், சந்திரன், சனி ஆகியவை உதய இராசியிலும் இருந்தால், அந்த மனிதர் எந்திரத்தில் அடிபட்டு இறப்பார். [1] துலாத்தில் செவ்வாயும், மேசத்தில் சனியும், மகரம் அல்லது கும்பத்தில் சந்திரனும் இருந்தால் அல்லது [2] 10வது, 7வது, 4வது வீடுகளில் முறையே தேய்பிறைச் சந்திரன், சூரியன், செவ்வாய் ஆகியவை இருந்தால், அவர் கழிவிடத்தின் நடுவில் விழுந்து இறப்பார்.


………. இறப்பு நிலை தொடரும்

முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17




No comments: