Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Thursday, November 30, 2017

துலாத்தின் திரேக்காண பலன்கள் -பிருகத் ஜாதகா – 212


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து ஏழு

திரேக்காண பலன்கள்.. தொடர்ச்சி

[குறிப்பு: இராசிகளின் வடிவங்களைக் கொண்டு பொதுப்பலன் உரைப்பது போல்
   இங்கு திரேக்காண வடிவங்கள் விளக்கப்பட்டுள்ளன]



19.    துலாத்தின் முதல் திரேக்காணமானது ஒரு கையில் தராசு வைத்திருக்கும் மனிதனாகவும், எடை அளவைகளில் திறமை மிக்கதாகவும், எடை அளவை செய்ய வேண்டிய பொருட்களைக் கையில் சுமந்தும், எண்ணம் முழுமையும் அந்த பொருளின் விலையினை நிர்ணயம் செய்வதாகவும் இருக்கும்.

குறிப்பு: இந்த திரேக்காணமானது ஒரு மனிதனின் வடிவில் இருக்கும். இதன் அதிபதி சுக்கிரன்.



20. துலாத்தின் இரண்டாவது திரேக்காணமானது கழுகின் முக அமைப்பைக் கொண்ட மனிதனாகவும், கையைவிட்டு நழுவும் நிலையில் ஒரு பானையைக் கையில் சுமந்தும், பசியாலும் தாகத்தாலும் வாடுவதாகவும்,  தனது மனைவி மற்றும் குழந்தையின் மீது எண்ணம் கொண்டதாகவும் இருக்கும்.

குறிப்பு: இந்த திரேக்காணமானது ஒரு மனிதன் மற்றும் ஒரு பறவையின் வடிவில் இருக்கும். இதன் அதிபதி சனி.



21. துலாத்தின் மூன்றாவது திரேக்காணமானது இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை முகம் கொண்டதாகவும், மரத்தில் விலங்குகளின் வடிவத்தினை செதுக்கியதாகவும், தங்கத்தால் ஆன அம்பாராத்துணியை சுமந்தும், கவச ஆடை அணிந்தும், இறைச்சியும் பழங்களும் சுமந்தும், குரங்கு போன்ற தோற்றமும், கையில் வில்லும் கொண்டிருக்கும்.

குறிப்பு: இந்த திரேக்காணமானது மனிதானகவும் நான்குகால் விலங்காகவும் இருக்கும். இதன் அதிபதி புதன்.


திரேக்காணத்தின் பலன்கள்.தொடரும்



முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17

Wednesday, November 29, 2017

கன்னியின் திரேக்காண பலன்கள் -பிருகத் ஜாதகா – 211

வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து ஏழு

திரேக்காண பலன்கள்.. தொடர்ச்சி

[குறிப்பு: இராசிகளின் வடிவங்களைக் கொண்டு பொதுப்பலன் உரைப்பது போல்
   இங்கு திரேக்காண வடிவங்கள் விளக்கப்பட்டுள்ளன]

  

16. கன்னியின் முதல் திரேக்காணமானது ஒரு கன்னிப் பெண்ணாகவும், பூக்களால் நிரம்பிய குடத்தினைச் சுமந்தவளாகவும், அழுக்கான ஆடைகளை அணிந்தவளாகவும், ஆடைகள் மீதும் சொத்துக்களின் மீதும் ஆசை உடையவளாகவும் அவளுடைய ஆசிரியரின் வீட்டை நோக்கி செல்பவளாகவும் இருக்கும்.

குறிப்பு: இந்த திரேக்காணம் ஒரு பெண்ணின் வடிவில் இருக்கும். இதன் அதிபதி புதன்.



17. கன்னியின் இரண்டாவது திரேக்காணமானது கையில் எழுத்தாணி கொண்ட ஆணின் வடிவிலும், கருப்பாகவும், தலையில் முண்டாசு கட்டியும், வரவு செலவு கணக்கினைப் பார்ப்பதாகவும், நீண்ட வில்லினைக் கையில் கொண்டும் உடல் முழுதும் முடியால் மூடியபடியும் இருக்கும்.

குறிப்பு: இந்த திரேக்காணம் கையில் ஆயுதம் கொண்ட ஒரு மனித வடிவில் இருக்கும். இதன் அதிபதி சனி.



18. கன்னியின் மூன்றாவது திரேக்காணமானது மஞ்சள் வண்ண பெண்ணாகவும், வெள்ளைப்பட்டாடை அணிந்தும், பானையைச் சுமந்தும், கையில் கரண்டியும், தூய்மையானதாகவும், கோவிலுக்கு செல்வதாகவும் காணப்படும்.

குறிப்பு: இந்த திரேக்காணமானது ஒரு பெண்ணின் வடிவில் இருக்கும். இதன் அதிபதி சுக்கிரன்.



திரேக்காணத்தின் பலன்கள்.தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17



Tuesday, November 28, 2017

சிம்மத்தின் திரேக்காண பலன்கள் - பிருகத் ஜாதகா – 210



வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து ஏழு

திரேக்காண பலன்கள்.. தொடர்ச்சி

[குறிப்பு: இராசிகளின் வடிவங்களைக் கொண்டு பொதுப்பலன் உரைப்பது போல்
   இங்கு திரேக்காண வடிவங்கள் விளக்கப்பட்டுள்ளன]



13. சிம்மத்தின் முதல் திரேக்காணமானது கழுகு மற்றும் குள்ள நரியின் உருவம் கொண்ட மனிதனாகவும், இலவம்பஞ்சு மரத்தின் மீது அமர்ந்தும், நாயைப் போன்ற உருவமும், அழுக்கான ஆடைகளை அணிந்த மனிதனாகவும், தாய்தந்தையரைப் பிரிந்தவராகவும், ஓசையுடன் அழுபவராகவும் இருக்கும்.

குறிப்பு: இந்த திரேக்காணமானது ஒரு மனிதனின், நாற்கால் உயிரினம், பறவை ஆகியவற்றின் வடிவில் இருக்கும். இதன் அதிபதி சூரியன்.



14. சிம்மத்தின் இரண்டாவது திரேக்காணமானது குதிரைபோன்ற வடிவம் உடைய மனிதனாகவும், தலையில் சற்றே வெண்மை கலந்த பூக்களால் ஆன மாலையினைச் சூடியதாகவும், மான் தோல் போர்த்தியதாகவும், சிங்கம்போல் கொடூரமான, நெருங்கமுடியாததாகவும், கையில் அம்பும், வளைந்த மூக்கும் கொண்டிருக்கும்.

குறிப்பு: இந்த திரேக்காணமானது ஆயுதம் பூண்ட மனித வடிவில் இருக்கும். இதன் அதிபதி வியாழன்.



15. சிம்மத்தின் மூன்றாவது திரேக்காணமானது கரடி போன்ற முகம் கொண்டதாகவும், குரங்கின் குறும்புத்தனமும், கையில் பழமும் இறைச்சியும், நீண்ட தாடியும் மீசையும், சுருள் முடியும் கொண்டிருக்கும்.

குறிப்பு: இந்த திரேக்காணமானது ஆணின் வடிவமும் நான்கு கால்களும் கொண்டிருக்கும். இதன் அதிபதி செவ்வாய்.



திரேக்காணத்தின் பலன்கள்.தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17


Monday, November 27, 2017

கடகத்தின் திரேக்காண பலன்கள் -பிருகத் ஜாதகா – 209



வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து ஏழு

திரேக்காண பலன்கள்.. தொடர்ச்சி

[குறிப்பு: இராசிகளின் வடிவங்களைக் கொண்டு பொதுப்பலன் உரைப்பது போல்
   இங்கு திரேக்காண வடிவங்கள் விளக்கப்பட்டுள்ளன]



10. கடகத்தின் முதல் திரேக்காணமானது இலைகள், கிழங்குகள், பழங்களைச் சுமந்த மனிதனாகவும், யானையைப் போன்ற உருவ அமைப்பும் கொண்டிருக்கும்; காட்டில் சந்தன மரத்தடியில் வசிப்பதாகவும், ஒட்டகத்தினைப்போல் நீண்ட பாதமும், காட்டுப்பன்றியைப் போன்ற முகமும் குதிரையின் கழுத்தும் கொண்டிருக்கும்.

குறிப்பு: இந்த திரேக்காணமானது நான்கு கால் மிருகத்தின் வடிவம் கொண்டிருக்கும். இதன் அதிபதி சந்திரன்.



11. கடகத்தின் இரண்டாவது திரேக்காணமானது தாமரை மலர்களைச் சூடிய மங்கைபோன்றும், பாம்பினைக் கையில் கொண்டும், கடினமனம் கொண்டதாகவும், இளமையானதாகவும், காட்டில் அழுதுகொண்டும், பலாபோன்ற மரத்தின் கிளையைக் கையில் பிடித்தவாறும் காணப்படும்.

குறிப்பு: இந்த திரேக்காணமானது ஒரு பெண்ணின் வடிவம் கொண்டிருக்கும். இதன் அதிபதி செவ்வாய்.



12. கடகத்தின் மூன்றாவது திரேக்காணமானது, பாம்புகள் சூழ உள்ள மனிதனாகவும், தனது மனைவிக்காக அணிகலன்கள் வாங்குவதற்காக கடலில் படகில் செல்பவராகவும், அணிகலன்கள் அனிந்தவராகவும், தட்டையான முக அமைப்பு கொண்டதாகவும் இருக்கும்.

குறிப்பு: இந்த திரேக்காணமானது ஒரு ஆணின் வடிவமும் பாம்பின் வடிவமும் கொண்டிருக்கும். இதன் அதிபதி வியாழன்.



திரேக்காணத்தின் பலன்கள்.தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17