Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Wednesday, November 22, 2017

சாதகம் இல்லாதவர்களின் நட்சத்திரம் அறிதல் - வேறுமுறை - பிருகத் ஜாதகா – 205


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து ஆறு

சாதகம் இல்லாத  நிலை  …தொடர்கிறது


15. ஒருவரின் பெயரில் உள்ள மாத்திரையை இரண்டால் பெருக்கவும்; நிழலின் நீளத்தினைக் கூட்டவும்; அவ்வாறு கிடைத்ததை 27-ஆல் வகுக்கவும்; கிடைக்கும் மீதியானதை அவிட்டத்திலிருந்து எண்ணி வர பிறந்த போது உள்ள நட்சத்திரம் கிடைக்கும்.


குறிப்பு: 

பெயர் என்பது ஒருவருக்கு பிறந்தபோது சூட்டப்பட்ட பெயராகும். குற்றெழுத்து ஒலி ஒரு மாத்திரை, நெட்டெழுத்து ஒலி இரண்டு மாத்திரை, மெய்யெழுத்துக்கள் அரை மாத்திரை. நிழலின் நீளம் என்பது சங்கு எனும் 12 அங்குல அளவுள்ள சங்கின் நிழலாகும்.

[நிமித்திகன்: மாத்திரை – கைநொடிக்கும் பொழுது அல்லது கண் இமைக்கும் பொழுது என்பது ஒரு மாத்திரை அளவாகும்]


16. திக்கு எண்கள் என்பன, கிழக்கு-2; தென்கிழக்கு-3; தெற்கு-14; தென்மேற்கு-10; மேற்கு-15; வடமேற்கு-21; வடக்கு-9; வடகிழக்கு-8 ஆகும். கேள்வி கேட்பவர் பார்த்திருக்கும் திசைக்கு உரிய எண்ணை 15-ஆல் பெருக்கவும்; அவ்வாறு பெருக்கி வந்த எண்ணுடன், அதே திசையை பார்க்கும் உடன் வந்தவர்களின் எண்ணிக்கையையும் கூட்டவும், அதனை 27-ஆல் வகுக்கவும். கிடைக்கும் மீதியானது அவிட்டத்திலிருந்து எண்ணிவர, பிறந்தபோது உள்ள நட்சத்திரம் ஆகும்.

குறிப்பு:
இந்த பத்தி மற்றொரு முறையில் பிறந்தபோது உள்ள நட்சத்திரத்தினை அறியும் முறையினைக் கூறுகிறது.



17.    இவ்வாறு பல்வேறு கணித முறைகளைக் கொண்டு சாதகம் இல்லாதவர்களுக்கும் உரிய சாதகத்தினைப் படைக்க முடியும். அறிவார்ந்தவர்கள் இவைகளைக் கவனமுடன் படித்து பயன்படுத்தவும்.


சாதகம் இல்லாத நிலை – முற்றும்.



அடுத்து – பகுதி – 27 - திரேக்காணத்தின் பலன்கள்.


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17



No comments: