Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Tuesday, December 3, 2013

விடி வெள்ளி


     இது சூரியக் குடும்பத்தில் இரண்டாவது கோள். மாலுமிகளின் நம்பிக்கை நட்சத்திரம். இது விடியலிலும் மாலை நேர இரவிலும் வானில் தெரியும் ஒரு வழி காட்டி. சூரியன் உதிப்பதற்கு முன்பே வெள்ளி முளைப்பதால், இதனை விடிவெள்ளி என்று அழைப்பர். 

     ஏறக்குறைய பூமியின் அளவு உள்ள கோள். அதனால் இதனை பூமியின் தங்கை என்றும் அழைப்பர். இது ஒரு திடக் கோள். கரியமில வாயுவால் சூழப்பட்ட சுற்றுச் சூழல். எரிமலைக் குழம்பின் காயங்கள் காய்ந்த வடுக்களாக பரவிக் கிடக்கும் மேற்பரப்பு. 

    கிழக்கிலிருந்து மேற்காக தன்னைச் சுற்றிக் கொள்வதால், சூரியன் மேற்கில் உதிக்கும். அயல் வான் குடும்ப தின்ம பொருட்கள் மோதியதால், இது தன் சுழல் தன்மையில் மாறியிருக்கக் கூடும் எனும் கருத்தும் உண்டு.



வெள்ளியின் மேற்பரப்பு

வெள்ளி - சில குறிப்புகள்:

  • ·         சூரியனிலிருந்து ஏறக்குறைய 108 மில்லியன் கி.மீ. தொலைவில் உள்ளது.
  • ·         தன்னைத்தானே சுற்றிக் கொள்ள 243 நாட்கள் ஆகும். ஒரு நாள் போவது ஒரு யுகம் போவதுபோல் என்பது வெள்ளியில் பொருந்தும்.
  • ·         சூரியனைச் சுற்றிவர 225 நாட்கள் ஆகும்.
  • ·         துணைக்கோள்கள் எதுவும் கிடையாது.
  • ·         கரியமிலவாயு, நைட்ரஜன் மற்றும் கந்தக சாம்பல் கொண்டது.
  • ·         480 செல்சியஸ் வெப்பம் நிலவும். ஈயம் எளிதில் உருகும் வெப்ப நிலை.
  • ·         சூரியக் குடும்பத்திலேயே அதிக வெளிச்சம் தரும் கோள். [சந்திரன் அதிக வெளிச்சம் தந்தாலும் அது கோள் அல்ல]
  • ·         சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ளதால் இதுவும் சூரிய கிரகணத்தை ஏற்படுத்தும், ஆனால் சிறு புள்ளியாக.
  • ·         ஒரு காலத்தில் நீர் இருந்திருக்கலாம் எனவும், அது அதீத வெப்பம் காரணமாக ஆவியாகி இருக்கக்கூடும் என வான் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
  • ·         புதனைப் போல் வெள்ளியும் இரும்பின் கூழினை உட்கருவாகக் கொண்டிருக்கிறது.
  • ·         பூமியைப் போல் பெரிய அளவில் காந்தப்புலம் இல்லையென்றாலும், இதற்கும் காந்தப்புலம் உண்டு.
  • ·         கரியமிலமும் கந்தகமும் உள்ள சூழலில் உயிரினம் வாழ்தல் சாத்தியமில்லை என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.


……. அடுத்து நம்ம பூமி
(நன்றி: பல்வேறு இணைய தளங்கள்)



அவன் - இவன்
அவன் :
ஊருக்கு போனவர் திரும்பி வந்திட்டாரா ? அப்ப தினமும் பதிவு உண்டுன்னு சொல்லு.
இவன் :
கண்டிப்பா வாரம் ரெண்டு உண்டாம். அதில்லாமல் வராகமிகிரரின் பிருகத் ஜாதகா தமிழாக்கமும் விரைவில் பதியப் போகிறாராம்.

No comments: