Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0
Showing posts with label Brihat Jataka 101-110. Show all posts
Showing posts with label Brihat Jataka 101-110. Show all posts

Saturday, February 25, 2017

அக்ரிதி யோகங்கள் – கட மற்றும் சகட யோகம் - பிருகத் ஜாதகா – 110

வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா

பகுதி   -  பன்னிரெண்டு

நபாச யோகங்கள்..தொடர்ச்சி


13.        கட யோகத்தில் பிறந்த ஒருவர், சடங்குகள் நிறைவேற்றுதல், வசதியாக வாழ்தல் என்பதுடன் சொத்துக்களை அடையும் வழிகளை மேற்கொள்வார்; சகட யோகத்தில் பிறந்த ஒருவர் வண்டியோட்டி பிழைப்பார், நோயாளியாய் இருப்பார், மனைவியைச் சார்ந்து இருப்பார்; விஹாஹ யோகத்தில் பிறந்த ஒருவர் தகவல் கொண்டு செல்பவராக வாழ்வார், பயணங்களில் ஆர்வம் கொண்டிருப்பார், சச்சரவுகளில் ஈடுபடுவார்; சிரிங்கடக யோகத்தில் பிறந்த ஒருவர் வாழ்வின் கடைசியில் மகிழ்ச்சியுடன் வாழ்வார்(1); ஹல யோகத்தில் பிறந்த ஒருவர் நிலத்தினால் வாழ்வார்.


குறிப்புகள்:

இந்த பத்தியில், ஐந்து அக்ரிதி யோகங்களின் பலன்களைக் கூறுகிறார்.

(1)    இந்த வரியில் வரும் சொல்சிர சுகி”. இது சிலரால்நீண்ட நாள் மகிழ்ச்சியுடன்என விளக்கம் சொல்லப்படுகிறது. இந்த விளக்கமானது காரகரின் விளக்கமான கடினமான பேச்சினைக் கொண்ட மனிதன் என்பதற்கு எதிரானது.



14.        வஜ்ர யோகத்தில் பிறந்த ஒருவர், வாழ்க்கையின் தொடக்கத்திலும் இறுதியிலும் மகிழ்வுடன் வாழ்வார், பொது நல விரும்பியாகவும், தைரியாமாக போராடுபவராகவும் இருப்பார். யவ யோகத்தில் பிறந்த ஒருவர் வலிமை மிக்கவராக இருப்பதுடன் வாழ்வில் இடைக்காலத்தில் மகிழ்வுடன் வாழ்வார். பத்ம (கமல) யோகத்தில் பிறந்த ஒருவர் பெரும் புகழுடனும், மகிழ்வுடனும், பல்வேறு செல்வங்களைப் பெற்று வாழ்வார். வபி யோகத்தில் பிறந்த ஒருவர், நீண்ட நாள் வசதியற்று வாழ்வதுடன், கஞ்சனாகவும் செல்வத்தை பூமியில் புதைத்தும் வைப்பார்.


குறிப்புகள்:

இந்த பத்தியில், மேலும் நான்கு அக்ரிதி யோகங்களைக் குறிப்பிடுகிறார்.


நபாச யோகங்கள் .. தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17



Friday, February 24, 2017

அக்ரிதி யோகங்கள் – இரஜ்ஜு யோகம் - பிருகத் ஜாதகா – 109


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா

பகுதி   -  பன்னிரெண்டு

நபாச யோகங்கள்..தொடர்ச்சி


11.  இரஜ்ஜு யோகத்தில் பிறந்த ஒருவர், மற்றவரின் சொத்தின் மீது பொறாமை கொண்டவராக இருப்பார், வெளி நாடு செல்வதுடன் பயணங்களில் ஆசை கொண்டவராக இருப்பார்; முசல யோகத்தில் பிறந்த ஒருவர் மரியாதைக்கு உரியவராக, வசதி மிக்கவராகவும் இருப்பதுடன் பல்வேறு பொறுப்புகளை ஏற்று நடப்பார்; நள யோகத்தில் பிறந்த ஒருவர், உறுப்புகளில் குறைபாடு, தீர்மானிக்கப்பட்ட முடிவுகள் மற்றும் வேலையில் திறமை மிக்கவராக இருப்பார்(1). மேலும், சிரிக் யோகத்தில் பிறந்த ஒருவர் வசதியாகவும் ஆடம்பரமாகவும் வாழ்வார்; சர்ப்ப யோகத்தில் பிறந்த ஒருவர் பலவிதங்களில்(2) துன்பப் பட்டு வாழ்வார்.


குறிப்புகள்:

இந்த பத்தியில், மூன்று அஸ்ரய யோகங்கள் மற்றும் இரண்டு தள யோகங்களின் பலன்களை வரையறுக்கிறார்.

(1)    சத்யாச்சாரியாரின் கருத்துப்படி

(2)    காரகரின் கருத்துப்படி



12.    அஸ்ரய யோகங்கள் பங்குபெறும் அதே வேளையில் பிற யோகங்களும் இருந்தால், அவைகளில் பிந்தையதையே கவனிக்க வேண்டும், இல்லையெனில் அவைகளுக்குரிய பலன்களையே அவை வழங்கும்.


குறிப்புகள்:

இது பற்றி பத்தி 3-ல் ஏற்கனவே விவரித்து விட்டோம். எடுத்துக்காட்டாக, இரஜ்ஜு யோகம் அல்லது முசல யோகம் அல்லது நள யோகமானது பங்குபெறும் நிலையில் கமல யோகம் (பத்தி-5) இருந்தால், பிந்தையதையே எடுத்துக் கொள்ள வேண்டும்.


நபாச யோகங்கள் .. தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17