அடுத்து புதன் கோள் 12 வீடுகளில் இருக்கும் நிலையில் உள்ள அதன்
வலிமை அல்லது திறனைப் பார்ப்போம்.
ஆட்சி:
புதன் கோளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு வீடுகள் முறையே மிதுனமும்
கன்னியும் ஆகும். இந்த இரண்டு வீடுகளும் புதனுக்கு ஒதுக்கப்பட்ட முறை குறித்து முன்பே
பதிவு செய்துள்ளோம். அதாவது, உள்வட்டக் கோள்களில் முதலில் வருவது புதன். எனவே, சூரியனுக்கு
அடுத்துள்ள வீடான கன்னியும், சந்திரனுக்கு அடுத்துள்ள வீடான மிதுனமும், புதனின் வீடுகள்
என்பதால் இவை இரண்டும் புதனின் ஆட்சி வீடுகள் ஆகும்.
மூலத்திரிகோணம்:
மூலத் திரிகோணத்தைத் தீர்மானிக்க கீழ்வரும் தகுதிகள் இருக்க
வேண்டும் என பார்த்தோம்.
1. அக் கோளிற்கு
சொந்த வீடாக இருக்க வேண்டும்
2. அந்த
வீட்டில் ஏதேனும் ஒரு கோள் உச்சம் பெற்றிருக்க வேண்டும்
3. அந்த
வீட்டிற்கு முன்னும் பின்னும் உள்ள வீடுகள் அக்கோளிற்கு நட்பு அல்லது சமம் எனும் நிலையில்
இருக்க வேண்டும்.
4. அந்த
வீட்டிற்கு முன்னும் பின்னும் உள்ள வீடுகள் அக்கோளிற்கு பகை எனும் நிலையில் இருக்கக்
கூடாது
5. ஐந்து
மற்றும் ஒன்பதாவது வீடுகள் நட்பு அல்லது சமம் எனும் நிலையில் இருக்க வேண்டும்.
மேற்கூறிய விதிகளை மிதுனம் மற்றும் கன்னி ஆகிய இரண்டிற்கும்
பொருத்திப்பார்ப்போம்.
மிதுனம்:
(1) புதனின் ஆட்சி வீடு. (2) மிதுனத்தில் எந்த கோளும் உச்சம்
பெறவில்லை. (3) மிதுனத்திற்கு முன் உள்ள வீடான ரிசபம் நட்பாகவும், அடுத்துள்ள வீடான
கடகம் பகையாகவும் உள்ளன. (4) எனவே, அடுத்துள்ள வீடுகளில் கடகம் பகையாக உள்ளது. (5)
மிதுனத்திற்கு இரண்டாவது கோணமான 5-ம் வீடு துலாம் நட்பு வீடாகும், மூன்றாவது கோணமான
ஒன்பதாம் வீடான கும்பம் சமம் எனும் நிலையில் உள்ளது.
கன்னி:
(1) புதனின் ஆட்சி வீடு. (2) கன்னியில் புதனே உச்சம் அடைகிறது
(விளக்கம் கீழே). (3) கன்னிக்கு முன் உள்ள வீடான சிம்மமு, அடுத்துள்ள வீடான துலாமும்
புதனுக்கு நட்பு வீடுகள். (4) எனவே, அடுத்துள்ள வீடுகள் பகைவீடுகள் இல்லை. (5) கன்னிக்கு
இரண்டாவது கோணமான 5-ம் வீடு மகரம் நட்பு வீடாகும், மூன்றாவது கோணமான ஒன்பதாம் வீடான
ரிசபமும் நட்பு எனும் நிலையில் உள்ளது.
மேற்சொன்ன விதிமுறைகள்படி, மிதுனத்தில் எந்த கோளும் உச்சமில்லை
என்பதுடன், கடகத்தில் பகையாகவும் உள்ளது. ஆனால், கன்னியில், புதன் தனது சொந்த வீட்டிலேயே
உச்சம் அடைவது சிறப்புடையதாக இருக்கிறது. 5 மற்றும் 9-ம் கோண வீடுகளும் நட்பு நிலையில்
இருப்பதால், புதனுக்கு கன்னி இராசியே, மூலத்திரிகோண வீடாகவும் இருக்கிறது. புதன் கன்னியில் 15-பாகை முதல் 20-பாகை
வரையில் மூலத்திரிகோண நிலையில் இருக்கிறது என சோதிட நூல்கள் கூறுகின்றன.
உச்சம்:
உச்சம் என்பது மிகைத் திறன் கொண்டது. சூரிய மண்டலத்தில், உள்வட்டத்தில்
புதனும் வெள்ளியும், வெளி வட்டத்தில் செவ்வாய், வியாழன் மற்றும் சனியும் இருப்பதை அறிவோம்.
உள் வட்டத்தில் உள்ள புதனும் வெள்ளியும் சூரியனை மிக நெருக்கமாகச் சுற்றிவருவதை அறிவோம்.
அதுபோல், இராசிக் கட்டத்தில் புதன் எப்போதும் சூரியன் இருக்கும் வீடு அல்லது சூரியன்
இருக்கும் வீட்டிற்கு அடுத்த வீட்டில் மட்டுமே இருக்கும் என்றும் அது ஏன் என்றும் ஏற்கனவே
பதிவு செய்துள்ளோம். அதாவது, புதன் சூரியனுக்கு மிக அருகிலேயே இருக்க வேண்டி இருப்பதால்
அது தன் முழுக் கதிர்வீச்சினையும் செலுத்தும் வாய்ப்பானது, சூரியனுக்கு அடுத்துள்ள
வீட்டில்தான் நிகழ முடியும். அதன்படி, அந்த வீடு சூரியன் உச்சமாக இருக்கும் மேசத்திற்கு
முன்புறமுள்ள மீனம் அல்லது ரிசபமாக இருக்க வேண்டும். அல்லது சூரியனின் சொந்த வீடும்
மூலத்திரிகோண வீடுமான சிம்மத்திற்கு முன் உள்ள கடகமும் அல்லது அடுத்துள்ள கன்னியாகவும்
இருக்க வேண்டும். இங்கே, மீனம் சுக்கிரனின் உச்ச வீடாகவும், ரிசபம் சந்திரனின் உச்ச
வீடாகவும், கடகம் வியாழனின் உச்ச வீடாகவும் இருக்கும் நிலையில், அதாவது ஒரே வீட்டில்
இரண்டு கோள்கள் உச்ச நிலையில் இருக்க முடியாது எனும் யதார்த்த நிலையில், மீதம் இருக்கும்
கன்னிதான் கணக்கில் வருகிறது. எனவே, சிம்மத்திற்கு அடுத்துள்ள கன்னியில் புதன் உச்சம்
அடைகிறது என்பது ஏற்புடையதே. சோதிட நூல்களின் கருத்துப்படி, புதன், கன்னியில் 0-பாகை
முதல் 15-பாகை வரையில் உச்சம் அடைகிறது.
நீச்சம்:
நீச்சம் என்பது, தனது முழு வலிமையைச் செலுத்த முடியாத நிலையில்
இருப்பது. அதாவது மிகை உச்சத்தில் இருக்கும் கோள், அதற்கு நேர் எதிரான, 180 பாகையில்
வலிமை இழந்து இருக்கும். அதன்படி, உச்ச நிலைக்கு நேர் எதிரான மீனத்தில் 0-பாகை முதல்
15-பாகை வரையில் நீச்ச நிலையில் இருக்கும் என்பதும் ஏற்புடையதே.
நட்பு,
சமம், பகை:
ஒரு கோள் எந்த இராசியில் நட்பாகவும், சமமாகவும், பகையாகவும்
இருக்கிறது என்பதைத் தீர்மானிக்க, முன்பே கூறியவாறு, அக்கோளிற்கு மூலத் திரிகோண வீட்டிலிருந்து,
2, 4, 5, 8, 9, 12 ஆகிய வீடுகளில் நட்பாகவும், பிற வீடுகளில் பகையாகவும் இருக்கும்
என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும். அதன்படி, 2-துலாம்(வெள்ளி), 4-தனுசு(வியாழன்),
5-மகரம்(சனி), 8-மேசம்(செவ்வாய்), 9-ரிசபம்(வெள்ளி), 12-சிம்மம்(சூரியன்). பகைவீடுகள்
எனும் கணக்கில், 3-விருச்சிகம்(செவ்வாய்), 6-கும்பம்(சனி), 7-மீனம்(வியாழன்), 10-மிதுனம்(புதன்),
11-கடகம்(சந்திரன்) என வருகிறது. இங்கு, விருச்சிகம் செவ்வாயின் வீடாக இருப்பதால்,
மேசத்தில் உள்ள செவ்வாய் நட்பாக இருக்கும் நிலையில், செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிகத்தை
பகை எனக் கொள்ள முடியாது என்பதால், சமம் எனக் கொள்ள வேண்டும். அடுத்து மகரம்(சனி) நட்பாக
இருக்கும் நிலையில், கும்பம்(சனி) பகை எனக் கொள்ள முடியாது என்பதால் சமம் எனக் கொள்ள
வேண்டும். மீனத்தில் புதன் நீச்சம் என்பதால் அதனை விலக்கிவிட வேண்டும். மிதுனம் புதனின்
வீடு என்பதால் அதனையும் பகையிலிருந்து நீக்கிட வேண்டும். ஆக, பகை வீடுகள் எனும்போது,
கடகம் மட்டுமே வருகிறது. இதன்படி, நட்பு: துலாம், தனுசு, மகரம், மேசம், ரிசபம், சிம்மம்;
பகை: கடகம்; சமம்: விருச்சிகம், கும்பம்.
இங்கு வரையறை செய்த வகையில் இராசிகளில் புதனின்
வலிமை அல்லது நிலை
கோள்களின் நிலை அல்லது வலிமை பற்றி கூறும்போது, கோள்களுக்கிடையே
உள்ள உறவு நிலைகள் பற்றியும் கூற வேண்டியுள்ளது.
கோள்களுக்கிடையேயான உறவுகள்:
கோள்களுக்கான உறவுகள் பற்றியும் பல்வேறு நூல்கள் சிற்சில முரணைக்
கொண்டிருந்தாலும், வீடுகளின் நட்பு, பகை அடிப்படையிலேயே கோள்களின் நிலையைத் தீர்மானித்தல்
முறையாக உள்ளது. அதன்படி, உச்சம் மற்றும் நட்பு வீட்டில் உள்ள கோள்கள், நட்புக் கோள்கள்
எனவும், நட்பு+சமம் எனும் வீட்டில் உள்ள கோள்கள் சமம் எனவும், பகை வீட்டில் உள்ள கோள்கள்
பகை எனவும் கொள்வது முறையாக உள்ளது. அத்தகைய முறைப்படி புதனுக்கு நட்பு கோள்கள்: சூரியன்,
வெள்ளி; சமக் கோள்: செவ்வாய், வியாழன், சனி;
பகைக் கோள்: சந்திரன் ஆகும்.
மேல் கூறியவற்றின் அடிப்படையில் புதனின் வலிமை அல்லது நிலை
பற்றிய தொகுப்பினைக் கீழே காண்போம்.
மேசம்
|
நட்பு
|
துலாம்
|
நட்பு
|
ரிசபம்
|
நட்பு
|
விருச்சிகம்
|
சமம்
|
மிதுனம்
|
ஆட்சி
|
தனுசு
|
நட்பு
|
கடகம்
|
பகை
|
மகரம்
|
நட்பு
|
சிம்மம்
|
நட்பு
|
கும்பம்
|
சமம்
|
கன்னி
|
ஆட்சி,
மூலத்திரிகோணம்(15-20)
உச்சம்(
0-15)
|
மீனம்
|
நீச்சம்
(0-15)
|
கோள்களுடன் உறவு நிலை
நட்பு
|
சமம்
|
பகை
|
வெள்ளி
சூரியன்
|
செவ்வாய்
வியாழன்
சனி
|
சந்திரன்
|
அடுத்து
.. வெள்ளியின் நிலை
No comments:
Post a Comment