மனித இனம் தோன்றியது சுமார்
பத்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் என அறிவியல் சொன்னாலும், [பதினான்கு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் தாடை எலும்புகள் இந்தியாவில் சிவாலிக் குன்றுகளிலும் வடமேற்கு கென்யா நாட்டிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன
– தமிழ் விக்கி] மதங்களின் கருத்தோ வேறுவிதமாக இருந்தன, இருக்கின்றன.
படைப்பிற்காக
ஒரு கடவுள் இருப்பதாகவும், அவரே ஒவ்வொருவரையும் படைப்பதாகவும், அவர்களது தலைவிதியை
நிர்ணயிப்பதாகவும் –ஒரு மதம் கூறுகிறது.
ஒரே ஒரு
ஆணையும், பெண்ணையும் மட்டும் படைத்து இந்த உலகில் உலாவ விட்டதாகவும், அவர்களின் மூலம்,
இன்று அனைத்து மனித இனமும் தோன்றியதாக – ஒரு மதம் கூறுகிறது
உருவமே
இல்லாத ஒரு கடவுள், உருவம் உள்ள ஆணையும் பெண்ணையும் படைத்ததாக – ஒரு மதம் கூறுகிறது.
ஆனால்
அறிவியலோ, அமினோ அமிலம், ஒரு செல் உயிரினம், பல் செல் உயிரினம் என பரினாம வளர்ச்சி
அடைந்து, மனித இனம் உண்டாகியதாகக் கூறுகிறது. அந்த அறிவியலை உயிரியல் மேதைகள் ஏற்றுக்
கொள்கிறார்கள். அந்த மேதைகள் எல்லா மதத்திலும் உள்ளனர்.
ஆனால்,
மதம் சார்ந்த கோட்பாடு என்பதாலேயே, இதைக் கண்டிப்பாக மறுக்க வேண்டும் என்று மதவாதிகள்
எதிர்க்கிறார்கள். நாத்திகவாதிகளோ, மதங்களை நையாண்டி செய்து அறிவியற் கருத்துக்களை
பரப்ப முயற்சிக்க, மத நம்பிக்கையாளர்கள் அதை ஏற்க மறுப்பதால், கருத்து முழுமையாக சென்று
சேராமல், முடங்கி விடுகிறது.
கடவுள்
யார் என்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் மனிதர்களால் தான் மதம் உருவாகியது
என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. மதமோ அல்லது மார்க்கமோ அது உண்டா அல்லது இல்லையா;
சரியா அல்லது தவறா என்று இங்கு விவாதம் செய்ய வரவில்லை.
ஆனால் அறிவியல் கருத்துக்களை அல்லது அறிவியல் தேற்றங்களை, மதங்களோடு தொடர்பு படுத்தக்
கூடாது என்பது தான் முக்கியம்.
தொடரும்….
No comments:
Post a Comment