Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Tuesday, January 30, 2018

தர்மகர்மாதிபதி யோகம் (1)



சாதகத்தில் கோள்களின் அமைவில் ஏற்படக்கூடிய யோகங்களில் முதன்மையானது தர்மகர்மாதிபதி யோகம். இராசி சக்கரத்தின் வீடுகளில் ஒன்பதாம் இடமும் பத்தாம் இடமும் மிக முக்கியமான இடங்கள். ஒன்பதாம் இடம் என்பது செல்வச் சிறப்பு வீடு அல்லது பாக்கிய ஸ்தானம் எனப்படும். செல்வம் என்றால் பணம், சொத்து, என்பது மட்டுமல்ல புகழும் பெருமையும் நோய்நொடியற்ற வாழ்க்கையும் என அனைத்தும் கொண்டதுதான் பாக்கியம் எனப்படும். பொதுவாக, ஒன்பதாம் வீட்டின் அதிபதி எந்த நிலையில் இருந்தாலும் முடிந்தவரை நன்மையையே அளிக்கும் என்பது சோதிட நூல்களின் கருத்து, ஒருவனுக்கு செல்வமும் புகழும் கிடைக்க வேண்டுமென்றால், ஒன்று அது தனது மூதாதையர் அல்லது தந்தை வழியாகக் கிடைக்க வேண்டும் அல்லது தான் செய்யும் பணியின் காரணமாகக் கிடைக்க வேண்டும். இங்கு ஒன்பதாம் இடம் என்பது தந்தைக்கு உரியது என்பதையும் கவனத்தில் கொண்டால், ஒரு சாதகருக்கு பாக்கியம் என்பது தந்தை வழியிலும் கிடைக்கும்.


அதுபோல், ஒருவரின் வாழ்க்கை என்பது அவர் சார்ந்திருக்கும் தொழிலின் அடிப்படையிலேயே சிறப்புடனோ அல்லது சிறப்பு குன்றியோ அமையக் கூடும். இராசியில் 10-ம் இடம் என்பது தொழிலினைக் குறிக்கும் என்பதை அறிவோம். தொழில் மேன்மை என்பது 10-ம் இடத்தினைச் சார்ந்தே இருக்கும். எனவே ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய செல்வம் அல்லது புகழ் என்பது தொழிலைச் சார்ந்தும் இருக்கும். அதாவது 10-ம் இடம் என்பது 9-ம் இடத்தோடு தொடர்பில் இருப்பது சிறப்பாக இருக்கும்.


இராசியில் 9-ம் இடம் என்பது முக்கோணத்தில் (திரிகோணத்தில்) மூன்றாவது கோணம் ஆகும். திரிகோண வீடுகளில் மூன்றாவது கோணமான 9-ம் வீட்டின் தனித்துவத்தினை நாம் ஏற்கனவே பதிவு செய்துள்ளோம். அதே போல, இராசியின் நாற்கரங்களில் (கேந்திரங்களில்) நான்காவது கேந்திரம் அல்லது நான்காவது நாற்கரத்தின் தனித்துவத்தையும் பதிவு செய்துள்ளோம். நான்காவது கேந்திரம் என்பது 10-ம் வீடு என்பது நாம் அறிந்ததே. ஆக 9-வது வீடும் 10-வது வீடும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பதுடன் சிறப்பானது என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.


ஒன்பது மற்றும் பத்து ஆகிய இந்த இரண்டு வீடுகளின் அதிபதிகளின் இணைவு அல்லது தொடர்பு அல்லது பார்வைகள் சோதிடத்தில் சிறப்பான பலன்களைக் கொடுக்கின்றன. இந்த அமைப்பிற்கு தர்மகர்மாதிபதி யோகம்என்று பெயர். அதாவது ஒன்பதுதர்மம், பத்துகர்மம் ஆகிய இவற்றின் அதிபதிகளின் இணைவு அல்லது தொடர்பு என்பதே தர்ம கர்ம அதிபதிகளின் யோகம் எனப்படுகிறது.


தர்மகர்மாதிபதி யோகம் எவ்வாறு அமையக் கூடும் என்பதைப் பார்ப்போம்

1.இலக்கினத்திற்கு ஒன்பதுபத்து வீடுகளின் அதிபதிகள் இணைந்திருப்பது

2.இரண்டும் ஒன்றை ஒன்று பார்த்துக் கொள்வது

3.ஒன்று மற்றொன்றைப் பார்ப்பது

4.இரண்டும் பரிவர்த்தனைப் பெற்றிருப்பது




எடுத்துக்காட்டாக-



இவைகள் எடுத்துக்காட்டு மட்டுமே. ஆனால் இணைவுகள் சேர்க்கைகள் (permutation & combination) அடிப்படையில் எண்ணற்ற சாதகங்கள் அமையக் கூடும்.


இவ்வாறு அமையப் பெற்றிருக்கும் சாதகர்கள், அதாவது தர்மகர்மாதிபதி யோகம் இருக்கும் சாதக அமைப்பு உடையவர்கள்:-

      செல்வந்தர்களாக இருப்பர்

      தொழில் அதிபராக இருப்பர்

      அறிவாற்றல் மிக்கவராக இருப்பர்

      அறிவுரை வழங்குபவர்களாக இருப்பர்

      வெளிநாடு செல்லும் செல்வந்தராக இருப்பர்


ஆனால் நடைமுறையில் தர்மகர்மாதிபதி யோகம் பெற்றிருந்தும் மேற்சொன்ன பலன்கள் இல்லாத நிலையும் ஏற்படக்கூடும்


அதாவது, தர்மகர்மாதிபதி யோக அமைப்பு உடைய சாதகர்கள் மேற்கூறிய பலன்களை அடைய முடியாமல் போகும். அது ஏன்?



தர்மகர்மாதிபதி யோகம்..... தொடரும்

குறிப்பு: திரு ஓம் பிரகாஷ் அவர்கள் தெரிவித்த சில விளக்கங்களின்படி, எடுத்துக்காட்டு சாதகம் - 4ல், திருத்தம் மேற்கொள்ளவும் - தனுசுவில் சனி; மகரத்தில் குரு

No comments: