சோதிடத்தில்
புதனைப் புத்திக்காரகன் என்று சொல்வார்கள். ஒருவன் தர்க்க முறையிலும் கணித வழியிலும்
சிந்தனை மிக்கவனாக இருக்க வேண்டுமெனில் புதன் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பர்.
பொதுவாக நல்ல நிலை என்றால் மறைவு நிலை இல்லாமை என்பது பொருள். எடுத்துக் காட்டாக ஒரு
கோள் ஆறு, எட்டு, பன்னிரெண்டு, மூன்று ஆகிய இடங்களில் இருந்தால் அது மறைவு நிலையில்
உள்ளது என சோதிட நூல்கள் கூறுகின்றன. ஆனால் இதற்கு விதி விலக்காக மறைவில் இருந்தாலும்,
நல்ல பலனைத் தருகின்ற கோள் புதன் என்பர். அதனால்தான் மறைந்த புதன் நிறைந்த கல்வி எனும்
பழமொழியும் சோதிடப் பயன்பாட்டில் இருக்கிறது.
புதனின்
சோதிட வரையறைகளைப் பார்க்கும் முன்பு அந்த கோளின் இயல்தன்மைகளைக் காண்போம்.
புதன், சூரியனுக்கு மிக அருகில் இருக்கும், சூரியக் குடும்பத்தின் மிகச்சிறிய குட்டிக் கோள். திட நிலையில் உள்ள
கோள்களில் இதுவும் ஒன்று. . மெர்குரி எனும் ஆங்கிலச் சொல்லுக்கு பாதரசம் என்பது பொருள் திரவ நிலையில் உள்ள உலோகம் பாதரசம். ஆனால் நமது புதனோ ஒரு இரும்புப் பந்துபோல் திட நிலையில் உள்ளது. இது தன்னைத்தானே சுற்றிக் கொள்ள 59 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. அதனால், ஒரு புறம் வெகு வெப்பமாகவும் மறுபுறம் வெகு குளிராகவும் உள்ளது. அதாவது 30 நாட்கள் பகலாகவும் 30 நாட்கள் இரவாகவும் உள்ளது. அதன் சூழலில் உயிர்வாயும், சோடியமும், ஹைட்ரஜனும், ஹீலியமும், பொட்டாசியமும் நிரவி உள்ளன. உயிர்வாயுவான ஆக்சிஜன் இருந்தாலும் அங்கு எதுவும் உயிர் வாழ்வதற்கான சாத்தியக் கூறு இல்லை. காரணம் அதிக வெப்பம் அதிக குளிர்.
சில குறிப்புகள்:
·
புதன் சூரியனுக்கு அருகில் உள்ள கோள்.
·
மிகச்சிறிய கோள். சந்திரனை விட சற்றே பெரியது.
·
சூரியனிலிருந்து 58 மில்லியன் கி.மீ. தொலைவில் உள்ளது.
·
அதன் ஆரம் 2439 கி.மீ (ஏறக்குறைய சென்னை – தில்லி தூரம்)
·
அதன் நிறை 3.30e23 கி.கி.
·
தன்னைத்தானே சுற்றிக் கொள்ள 59 நாட்கள்
·
சூரியனைச் சுற்றிவர 88 நாட்கள்
·
அதன் சூழல் சூரியக் காற்றாலும், நுண்ணலைக் கதிர்களாலும் எப்போதும் தாக்குதலுக்குள்ளாகி சூழப்பட்டுள்ளது
·
இதற்கு துணைக் கோள்கள் எதுவும் கிடையாது
·
பகல் நேர வெப்பம் 430 செல்சியஸ்; இரவு வெப்பம் (-180) செல்சியஸ்
·
உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் எதுவும் இல்லை.
·
புதனிலிருந்து சூரியனைப் பார்த்தால், பூமியிலிருந்து பார்ப்பதைப்போல் மூன்று மடங்கு பெரிதாக இருக்கும்.
·
புதனிலும் காந்தப் புலம் உண்டு
·
புதன் கற்பாறைகளும் இரும்புப் பாறைகளும் சேர்ந்த ஒரு உலோகப் பந்தாய் சுற்றி வருகிறது. பாறை 30 சதமும், பெரும்பகுதி இரும்புடன் சேர்ந்த உலோகக் கலவையாக 70 சதவீதமாகவும் உள்ளது.
·
மற்ற திடக் கோள்களில் இது நேர்மாறாக இருப்பதால், இதன் தோற்றம் பற்றி மாற்றுக் கருத்துக்களும் உள்ளன.
·
புதன் வேறு ஒரு கேலக்சியில் உருவாகி, பின்னர் வான் மண்டலத்தில் மிதந்து, தற்போது உள்ள இடத்திற்கு வந்திருக்கலாம் எனவும் ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
·
சூரியனின் கோணத்தில் 28.3 டிகிரியில் புதன் இருப்பதால், சூரியனின் வெளிச்சம் காரணமாக இதனை பெரும்பாலும் பூமியிலிருந்து பார்க்க முடிவதில்லை.
இங்கு புதன் என்பது, அறிவியலாளரின் கருத்துப்படி, நமது
சூரியக் குடும்பத்திற்கு வெளியில் இருந்து வந்து ஒண்டிக்கொண்ட ஒரு கோள். இதை சோதிடத்தில்
‘அலிக் கோள்’ என்கின்றனர். அதாவது மலட்டுத்தன்மை கொண்ட கோள் என்கின்றனர். அதுபோலவே,
இயல் தன்மையிலும் இது மற்றக் கோள்களைக் காட்டிலும் தனித்தன்மை கொண்டதாக உள்ளது. 70%
இரும்புக் குழம்பின் இறுகியத் தன்மையும் 30% பாறைகளும் கொண்டது. இது மற்றக் கோள்களுக்கு
நேர் எதிர்மாறானது எனும் கருத்து இயற்பியலாளர்கள் மத்தியில் இருக்கிறது. ஆக, புதன்
பிறக் கோள்களிலிருந்து தனித்திருப்பது, அதாவது எதிலும் சாராதிருப்பது அலிக் கோள் என்பதற்கு
பொருந்துகிறது.
இனி சோதிட வரையறைகளை ஒப்பிடுவோம்.
அடுத்த பதிவில் புதன் தொடரும்……
No comments:
Post a Comment