வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபத்து மூன்று
இறப்பு நிலை ….தொடர்கிறது
9. தேய்பிறைச் சந்திரன் வலிமை மிக்க செவ்வாயால் பார்க்கப்பட, சனியானது 8வது வீட்டில் இருந்தால், அந்த மனிதர் ஆசனவாய் நோயால் பாதிக்கப்பட்டு இறந்துபோவார்(1) – அந்த பாகமானது புழுக்கலால் தாக்கப்பட்டு அல்லது அறுவை சிகிச்சைக் கத்தியால் வெட்டுப்பட்டு அல்லது தீய்ந்துபோய் அல்லது கொப்பளங்களால் பாதிப்பு ஏற்பட்டு இறப்பார்.
குறிப்பு: (1) அதாவது பிறப்புறுப்பிற்கு அருகில் மூலம் மற்றும் குதம் போன்றவற்றால்.
10. ஒருவர் பிறக்கும்போது, சூரியனும் செவ்வாயும் 7வது வீட்டிலும், சனி 8வது வீட்டிலும் தேய்பிறைச் சந்திரன் 4வது வீட்டிலும் இருந்தால், அந்த மனிதரின் இறப்பானது பறவைகளால் ஏற்படும். 1வது, 5வது, 8வது, 9வது வீடுகளில் முறையே சூரியன், செவ்வாய், சனி மற்றும் சந்திரன் இருந்தால் அந்த மனிதரின் இறப்பு என்பது மலை உச்சியிலிருந்து விழுந்து அல்லது மின்னல் தாக்கி அல்லது சுவற்றிலிருந்து விழுந்து ஏற்படும்.
11. ஒருவரின் இறப்பும் நிகழக்கூடிய மேலே கூறிய யோகங்கள் இல்லாத சாதகம் கொண்டவரின் இறப்பின, பிறக்கும்போது உள்ள உதய திரேக்காணத்திலிருந்து எண்ணி வரும் 22வது திரேக்காணத்தின் பலனைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும், அத்தகைய இறப்பானது அந்த 22வது திரேக்காண அதிபதியால் அல்லது அந்த திரேக்காண வீட்டிற்கு உரிய அதிபதியால், இவர்களில் பலமிக்கவரால், தண்ணீர், நெருப்பு அல்லது அந்த அதிபதிக்கு உடைய இதர வகையில் நிகழும்(1).
குறிப்பு:1 இந்த பகுதியின் பத்தி-1ல் கூறியவாறு.
……….
இறப்பு நிலை தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment