வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - ஐந்து
பிறப்பு நேரம் தொடர்புடைய தகவல்கள்
24. உடலின் மும்மடி பிரிவுகள் தலையிலிருந்து தொடங்கும், கழுத்திலிருந்து தொடங்கும் மற்றும் அடிவயிற்றிலிருந்து தொடங்கும், முறையே உதய திரேக்கானத்தின் முதல், இரண்டாவது அல்லது மூன்றாவது என வரும்.
குறிப்பு (சிதம்பரம் அய்யர்):
அவை கீழ்வருமாறு:
பன்னிரெண்டு வீடுகள்
|
உதய திரேக்கானத்திலிருந்து, குறிப்பிடப்படும் உடலின் உறுப்புகள்
|
||
முதலாவது
|
இரண்டாவது
|
மூன்றாவது
|
|
உதய இராசி
|
தலை
|
கழுத்து
|
அடிவயிறு
|
2வது வீடு
|
வலது கண்
|
வலது தோள்பட்டை
|
உயிர் உறுப்பு
|
12வது வீடு
|
இடது கண்
|
இடது தோள்பட்டை
|
ஆசனவாய்
|
3வது வீடு
|
வலது காது
|
வலது கை
|
வலது விதைப்பை
|
11வது வீடு
|
இடது காது
|
இடது கை
|
இடது விதைப்பை
|
4வது வீடு
|
வலது நாசி
|
வலப்பக்கம்
|
வலது தொடை
|
10வது வீடு
|
இடது நாசி
|
இடப்பக்கம்
|
இடது தொடை
|
5வது வீடு
|
வலது கோவில்
|
வலது மார்பு
|
வலது முழங்கால்
|
9வது வீடு
|
இடது கோவில்
|
இடது மார்பு
|
இடது முழங்கால்
|
6வது வீடு
|
வலது முகவாய்
|
வலது தொப்பை
|
வலது குதிகால்
|
8வது வீடு
|
இடது முகவாய்
|
இடது தொப்பை
|
இடது குதிகால்
|
7வது வீடு
|
வாய்
|
தொப்பூழ்
|
பாதம்
|
25. உடலின் உறுப்புகளைக் குறிப்பிடும் இராசிகளில் அசுபக் கோள்கள் இருந்தால், அப்பகுதியில் வடுக்கள் தோன்றும்; ஆனால் அத்தகைய இராசிகளில் சுபக் கோள்கள் இருந்தாலோ அல்லது பார்க்கப்பட்டாலோ, அத்தகைய உறுப்புகளில் மச்சங்கள் தோன்றும்; அத்தகைய அசுப அல்லது சுபக் கோள்கள் அவைகளின் சொந்த வீட்டில் அல்லது நவாம்சத்தில் அல்லது ஸ்திர இராசியில் அல்லது ஸ்திர நவாம்சத்தில் இருந்தால், வடு அல்லது மச்சமானது பிறப்பிலேயே தோன்றும்; இல்லையெனில், அது எதிர்காலத்தில் தோன்றும்(1). வடுக்களைப் பொருத்தவரையில், அக் கோள் சனியாக இருந்தால், வடுவானது கற்களினாலோ அல்லது காற்றினாலோ ஏற்படும்; செவ்வாய் எனில், அது நெருப்பினால் அல்லது ஆயுதங்களினால் அல்லது நச்சு பொருளினால் ஏற்படும்; (அசுப) புதனாக இருந்தால், அது பூமியினால்(2) ஏற்படும்; சூரியன் என்றால் மரம் அல்லது நாற்கால் விலங்கினால் ஏற்படும்; (தேய்பிறை) சந்திரன் எனில், கொம்பு உள்ள விலங்கினால் அல்லது நீர்வாழ் விலங்கினால் ஏற்படும். இராசிகளில் பிற (சுப) கோள்கள்(3) இருக்குமானால் இராசிகளினால் குறிப்பிடப்படும் பாகங்களில் எவ்வித வடுவும் தோன்றாது.
குறிப்பு (சிதம்பரம் அய்யர்):
(1)
அதாவது, பல்வேறு கோள்களின் தசா அல்லது கோள்களின் நகர்வுக் காலங்கள்.
(2)
அதன் அதிபதி மற்றும் அல்லது அதன் சாரம்
(3)
வியாழன், வெள்ளி, (சுப) புதன் மற்றும் வளர்பிறை சந்திரன்.
இந்த பத்தியில் சொல்லப்பட்டவையானது, உடலின் பிரிவுகள் பற்றி பத்தி 24-ல் சொல்லப்பட்டவைக்கு உரியவை.
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-15
|
No comments:
Post a Comment