வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - ஆறு
பால அரிஷ்டம் அல்லது குழந்தைப் பருவ மரணம்
7. தேய்பிறைச் சந்திரன் உதயத்தில் இருக்க, மேலும் பாவக் கோள்கள் 8வது வீடு அல்லது கேந்திரத்தில் இருக்க அல்லது சந்திரனானது 4வது, 7வது அல்லது 8வது வீட்டில் இருக்க அதனுடன் அசுபக் கோள் சேர்ந்து இருக்குமானால், குழந்தை இறந்து விடும். மேலும் சந்திரன் உதய இராசியிலும், இரு அசுபக் கோள்களுக்கு இடையிலும் இருக்க, அசுபக் கோள்கள் 7வது மற்றும் 8வது வீட்டில் இருக்க, மேலும் வலிமை மிகுந்த சுபக்கோள்கள் சந்திரனைப்(1) பார்க்காவிடில், தாயும் குழந்தையும் இறந்து விடுவார்கள்.
குறிப்பு (சிதம்பரம் அய்யர்):
அவை சந்திரனைப் பார்த்தால், தாய் பிழைத்துக் கொள்ள, குழந்தை
இறந்து விடும்.
8. பிறக்கும் நேரத்தில், சந்திரனானது ஒரு இராசியின் கடைசி நவாம்சத்தில்
இருந்து, அது சுபக் கோள்களினால் பார்க்கப்படாமல் இருக்குமானால், மேலும் அசுபக் கோள்கள்
5வது மற்றும் 9வது வீட்டில் இருக்க, அல்லது சந்திரன் உதய இராசியில் இருக்க மற்றும்
அசுபக் கோள் 7வது வீட்டில் இருக்குமானால், குழந்தையானது பிறந்த உடனேயே இறந்து விடும்.
9. பிறக்கும் நேரத்தில், மங்கிய சந்திரன், உதயத்தில் அசுபக் கோளுடன்
இருக்க(1), செவ்வாயானது 8வது வீட்டில் இருந்தால், தாயும் குழந்தையும் இறக்க நேரிடும்.
சந்திரனுக்கு பதில், சூரியன்(2) இந்த நிலையில் இருந்தால், அத்தகைய மரணம் ஆயுதத்தால்
ஏற்படும். மீண்டும், சூரியன் அல்லது சந்திரன் உதய இராசியில் இருக்க, அசுபக் கோள்கள் 5வது, 8வது மற்றும் 9வது வீடுகளில் இருக்க, சூரியன்
அல்லது சந்திரன் வலிமை மிக்க சுபக் கோள்களினால் பார்க்கப்படாமலோ அல்லது உடன் இல்லாமலோ
இருந்தால், குழந்தை இறக்க நேரிடும்.
குறிப்பு (சிதம்பரம் அய்யர்):
(1) அதாவது சனி
(2) அதாவது, மங்கிய சூரியன் உதயத்தில்
ஒரு அசுபக் கோளுடன் (புதன் அல்லது சனி) இருக்க, செவ்வாய் 8வது வீட்டில் இருந்தால்.
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-2016
|
No comments:
Post a Comment