வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - ஆறு
பால அரிஷ்டம் அல்லது குழந்தைப் பருவ மரணம்
10. பிறக்கும் நேரத்தில், சனி, சூரியன், சந்திரன் மற்றும் செவ்வாய் முறையே, 12வது, 9வது, மற்றும் 1வது மற்றும் 8வது வீட்டில் இருந்தால், அந்தக் கோள்கள் வியாழனால் பார்க்கப்படாமலோ அல்லது சேர்ந்தோ இல்லாமல் இருந்தால், குழந்தை பிறந்தவுடன் இறந்து விடும்.
குறிப்பு (சிதம்பரம் அய்யர்):
நான்கு கோள்களையும் வியாழன் பார்க்க வேண்டுமெனில், அது 5வது வீட்டில் இருக்க வேண்டும். வியாழனானது நான்கு கோள்களில் சிலவற்றைப் பார்க்க அல்லது அது நான்கு கோள்களைப் பார்த்தாலும் பலம் குன்றி இருந்தால், குழந்தை இறந்து விடும். ஆகவே, குழந்தை இறப்பில் இருந்து தப்பிக்க, வலிமை மிகுந்த வியாழன் நான்கு கோள்களையும் பார்க்க வேண்டும்.
11. பிறக்கும் நேரத்தில், சந்திரன்(1) ஒரு அசுபக் கோளுடன், 5வது, 7வது, 9வது, 12வது, 1வது, அல்லது 8வது வீட்டில் இருக்க, அது வலிமை மிகுந்த சுக்கிரன், புதன் அல்லது வியாழனுடன் சேர்ந்தோ அல்லது பார்க்கப்படமாலோ இருந்தால், குழந்தையானது பிறந்த பிறகு இறந்துவிடும்.
குறிப்பு(சிதம்பரம் அய்யர்):
சாராவளியின்படி, சந்திரன் என்பது தேய்பிறைச் சந்திரன்.
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-2016
|
No comments:
Post a Comment