Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Monday, February 8, 2016

பிறப்பில் இறக்கும் குழந்தைகள் - பிருகத் ஜாதகா – 65


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா

பகுதி   -  ஆறு

பால அரிஷ்டம் அல்லது குழந்தைப் பருவ மரணம்


1. பிறப்பானது சந்தியா(1) காலத்தில் (இருள் மயங்கும் பொழுது) சந்திர ஓரை(2) தொடங்கும் நேரத்தில், மற்றும் நவாம்சத்தின் கடைசி வீட்டில் அசுபக் கோள்கள் இருக்கும் போது நிகழந்தால், அக்குழந்தை பிறந்த உடன் இறந்து விடும். பிறப்பின்பொழுது, சந்திரன் மற்றும் மூன்று அசுபக் கோள்கள் நான்கு கேந்திரத்திலும், ஒவ்வொன்றும் ஒன்றில், இருக்கும் எனில் குழந்தை இறந்து விடும்.


குறிப்பு (சிதம்பரம் அய்யர்):

(1)     சந்தியாகாலம்: இது பற்றி ஆசிரியர் தமது பிருகத் சம்ஹிதா எனும் நூலில் பகுதி-30, பத்தி 1-ல் குறிப்பிடுகிறார் – “ சூரியனானது பாதி உதயமாகும் நிகழ்வின் போது உள்ள காலம் மற்றும் சூரியனானது பாதி மறையும் நிகழ்வின் போது உள்ள காலம், அப்போது விண்மீன்கள் கண்ணுக்கு புலப்படும் நிலையில் இருக்கும், அதுவே சந்தியா காலம் அல்லது இருள் மயங்கும் பொழுது எனப்படும்.”
(2)     ஒற்றைப்படை இராசிகளின் இரண்டாவது பாதியும், இரட்டைப்படை இராசிகளின் முதல் பகுதியும் சந்திர ஓரைகள் ஆகும்.



2. கடகம் அல்லது விருச்சிகம் ஆகியவற்றில் ஒன்று பிறக்கும்பொழுது உதயமாக இருக்க, அசுபக் கோள்கள் இராசி சக்கரத்தின் கிழக்கின் பாதியில் இருக்க, சுபக் கோள்கள் மேற்கின் பாதியில்(1) இருக்க, குழந்தையானது பிறந்த உடனேயே இறந்து விடும். உதய இராசியிலிருந்து அசுபக் கோள்கள் 12வது மற்றும் 2வது வீட்டிலும் அல்லது 6வது அல்லது 8வது வீட்டிலும்  இருந்தால், குழந்தை இறந்து விடும்.


குறிப்பு (சிதம்பரம் அய்யர்):

(1)     இராசி சக்கிரத்தினை உச்சிவேளையானது இரண்டு சம பாதி பகுதிகளாக, கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளாகப் பிரிக்கிறது; அதன்படி, எடுத்துக்காட்டாக, கடகமானது 100-யில் அந்த நேரத்தில் உதயாமாகும் எனில், கிழக்கின் பாதியானது, ஏறக்குறைய மேசத்திலிருந்து 100- முதல் துலாத்தின் 100-வரை இராசி சக்கரத்தின் பகுதிகள் அடங்கியதாகும்.
(2)     வேறு சில உரையாசிரியர்கலின் கருத்துப்படி, இரண்டு யோகங்கள் ஒன்றினைந்து ஒரே யோகமாக உருவாவது. அதாவது, முதல் யோகத்தின்படி, அசுபக் கோள்கள் 2வது, 12வது, 6வது மற்றும் 8வது வீட்டில் இருந்தால் மட்டுமே, குழந்தை இறந்து போகும். காரகரின் கருத்துப்படி, கீழ்வரும் நான்கு யோகங்களிலும்  இறப்பு நிகழும்: அசுபக் கோள்கள் () 6வது மற்றும் 12வது வீட்டில் இருக்க, () 8வது மற்றும் 2வது வீட்டில் இருக்க, () 12வது மற்றும் 2வது வீட்டில் இருக்க, () 8வது மற்றும் 6வது வீட்டில் இருக்க, இறப்பு நிகழும்.


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-2016


No comments: