வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - ஆறு
பால அரிஷ்டம் அல்லது குழந்தைப் பருவ மரணம் ..தொடர்ச்சி
3. உதய இராசி, மறைவு இராசி, சந்திரன் இருக்கும் இராசி ஆகிய ஒவ்வொன்றும் அசுபக் கோள்களுடன் இருக்குமானால், மற்றும் சந்திரனானது சுபக் கோள்களினால் பார்க்கப்படாமல் இருந்தால், குழந்தையானது பிறந்த உடனேயே இறந்து விடும்.
4. தேய்பிறை சந்திரனானது, உதயத்திலிருந்து 12வது இராசியில் இருந்தால், அசுபக் கோள் உதயத்திலும் 8வது வீட்டிலும் இருந்தால் மற்றும் சுபக் கோள்கள் கேந்திரத்தில் இல்லாமல் இருந்தால், குழந்தையானது பிறந்த உடனேயே இறந்து விடும்.
5. சந்திரனானது ஒரு அசுபக் கோளுடன் உதய இராசி அல்லது 7வது வீடு, 8வது வீடு அல்லது 12வது வீட்டில் இருக்க, மேலும் சுபக் கோள்கள் கேந்திரத்தில் இல்லாமலும், அவை சந்திரனைப் பார்க்காமலும் இருந்தால், குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் இறந்து விடும்.
குறிப்பு (சிதம்பரம் அய்யர்):
அதன்படி, சுபக் கோள்கள் கேந்திரத்தில் இருந்தால், குழந்தைப் பருவத்தில் மரணம் கிடையாது.
6. இலக்கினத்திலிருந்து சந்திரனாது 6வது அல்லது 8வது வீட்டில் இருந்தால், ஒரு அசுபக்கோள் அதனைப் பார்த்தால், குழந்தையானது பிறந்த சிறிது நேரத்தில் இறந்து விடும்; சுபக் கோள்களால் அது பார்க்கப்பட்டால், குழந்தையானது 8 ஆண்டுகளுக்குப் பிறகு இறந்து விடும்; ஒரு சுபக் கோளும் ஒரு அசுபக் கோளும் ஆகிய இரண்டும் சந்திரனைப் பார்த்தால், குழந்தையானது பிறந்து 4 ஆண்டுகள் கழித்து இறந்து விடும்(1); ஆனால் ஒரு சுபக் கோள் (6வது அல்லது 8வது வீட்டில் இருக்கும்) வலிமை மிக்க அசுபக் கோளினால்(2) பார்க்கப்பட்டால், அல்லது உதய இராசியின் அதிபதி 7வது வீட்டில் இருக்க, அது கோள்களின் யுத்தத்தில் (இணைவில்) ஒரு அசுபக் கோளினால்(3) தோற்கடிக்கப்பட்டால், குழந்தையானது, பிறந்த ஒரு மாதம் கழித்து இறந்து போகும்.
குறிப்பு(சிதம்பரம் அய்யர்):
(1)
அதன்படி, சந்திரனானது, 6வது அல்லது 8வது வீட்டில் இருக்க, எந்தக் கோளினாலும் பார்க்கப்படாமல் இருந்தால், குழந்தைப்பருவ மரணம் கிடையாது. இதன் தொடர்பாக யவனேஸ்வரரின் கருத்தானது: சந்திரனானது 6வது அல்லது 8வது வீட்டில் இருக்க, அந்த வீடானது சுபக்கோளின் வீடாக இருந்தால், அல்லது சந்திரனானது சுபக்கோளுடன் இணைந்து இருந்தால், அது பகை வீடாக இருந்தாலும், குழந்தையானது இறக்காது. மாந்தவியாவின் கருத்துப்படி: குழந்தையின் பிறப்பானது பகலில் இருள்-பாதியில் (அந்தி) பிறந்தால், அல்லது இரவில் ஒளி-பாதியில் (விடியல்) அந்த மாதத்தில் பிறந்தால், சந்திரானானது 6வது அல்லது 8வது வீட்டிலிருந்து அது சுப அசுப ஆகிய இரண்டு கோள்களினாலும் பார்க்கப்பட்டாலும், குழந்தையானது இறப்பிலிருந்து தப்பித்து விடும்.
(2)
உரையாசிரியர் குறிப்பின்படி- சந்திரனானது சுபக்கோளினால் பார்க்கப்படாத நிலையில். ஸ்வல்ப்ப ஜாதகாவின்படி – “ வக்கிரம் அடைந்த அல்லது பாவக் கோள்களினால் ‘.
(3)
கோள்களின் யுத்தத்தில் தோற்கும் கோள் என்பது, தெற்கில் இருக்கும் கோள், அஸ்தமன(மறைவுக்) கோள், ஒளிகுறைந்த கோள், வக்கிரக் கோள், சிறிய கோள் அல்லது சூரியனுடன் இணைந்த கோள் அல்லது பார்வைக்கு உட்படாத கோள் அல்லது வெளிச்சம் அல்லது நிறம் இல்லாத கோள்.
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-2016
|
No comments:
Post a Comment