வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபத்து எட்டு
முடிவுரை… தொடர்ச்சி
7. இந்த சுருக்க உரையானது, பழம்பெரும் ஆசிரியர்கள் படைத்த விரிவான படைப்புகளை முழுமையாகப் படித்தும் ஆராய்ந்தும் என்னால் எழுதப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் முக்கிய கருத்துக்கள் விடுபட்டு இருப்பின், அறிவார்ந்த ஆய்வாளர்கள் மன்னிக்குமாறும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
8. இதில் எந்த உரைப்பகுதியாவது இதனை படியெடுப்பவரால் அல்லது கற்பிக்கும் ஆசிரியரால் விடுபட்டுப் போயிருப்பின், கற்றறிந்த அறிஞர்கள் எவ்வித மனக்கசப்புமின்றி அதனை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும், உரையில் ஏதேனும் தவறுகள், சரியற்ற விளக்கங்கள் அல்லது விடுபடல் இருப்பின், அறிஞர் பெருமக்கள் அத்தகைய தவறினை சரி செய்து, தேவையானதை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
9. ஆதித்ய தாசரின் மகனாகிய வராகமிகிர் தனது தந்தையிடம் கல்வி பயின்றும், கபித்தா எனும் கிராமத்தில் சூரியனிடமிருந்து அறிவும் பெற்று, உஜ்ஜைனியில் உள்ள அவந்தியின் அரண்மணையில் பணியாற்றி, சோதிடம் தொடர்பாக முன்னோர்களின் படைப்பினைக் கவனமுடன் ஆராய்ந்து இந்த நல்லதொரு படைப்பினை வழங்கியிருக்கிறார்.
10. இந்த படைப்பினை நான் வணங்கும் சூரியன், வசிஷ்டர், ஆதித்ய தாசர் ஆகியோரின் ஆசியுடன் படைத்துள்ளேன். சோதிடம் குறித்து எழுதிய முன்னோர்கள் அனைவரையும் வணங்குகிறேன்.
உத்திர பாகம் முடிவுற்றது.
..................................................
பாகம் இரண்டு முடிவுற்றது
....................
பிருகத் ஜாதகா முற்றும்
என முடிப்பதற்குமுன்
ஒரு சில வார்த்தைகள்
.. தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment