Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Thursday, December 1, 2016

சந்திரன்-புதன் அஷ்டவர்க்க பலன்கள் - பிருகத் ஜாதகா – 88



வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா

பகுதி   -  ஒன்பது

அஷ்டவர்க்கம்..தொடர்ச்சி

சந்திரன்-புதன் அஷ்டவர்க்க பலன்கள்
 (திரு சிதம்பரம் அவர்களின் சிறப்பு குறிப்பு)

சந்திரனின் அஷ்டவர்க்க பலன்கள்

சந்திரன் அஷ்டவர்க்கத்தில் இருக்கும் இடத்திலிருந்து நான்காவது வீட்டில் உள்ள எண்ணைக் கொண்டு, குறைப்பிற்கு பிறகு உள்ள எண்களின் மொத்த எண்ணிக்கையால் பெருக்க வேண்டும்; பின்னர் 27-ஆல் வகுக்க, கிடைக்கும் மீதியை எடுத்துக் கொண்டு, முன்பு கூறியவாறு, அஸ்வினி நட்சத்திரத்திலிருந்து எண்ணி வர வேண்டும். (அவ்வாறு எண்ணிக்கையில் முடிவடைந்த) நட்சத்திரத்தினை சனி கடக்கும்போது அல்லது அந்த நட்சத்திரத்தின் திரிகோண நட்சத்திரங்களைக் கடக்கும்போது, அது அசுபக் கோளின் தசாக்காலமாக இருந்தால், சாதகரின் தாய் இறந்துபோவார் அல்லது தாய்க்கு துன்பங்கள் நேரும்.

சந்திரன் அஷ்டவர்க்கத்தில் இருக்கும் இடத்திலிருந்து எட்டாவது வீட்டில் உள்ள எண்ணைக் கொண்டு, குறைப்பிற்கு பிறகு உள்ள எண்களின் மொத்த எண்ணிக்கையால் பெருக்கி பின்னர் 27-ஆல் வகுக்க வேண்டும். மீதியை முன்பு கூறியதுபோல் அசுவினி முதல் எண்ண வேண்டும். அந்த (முடியும்) நட்சத்திரத்தினை சந்திரன் கடக்கும்போது அல்லது அந்த நட்சத்திரத்தின் திரிகோண நட்சத்திரங்களைக் கடக்கும்போது, சாதகர், கோபம், சண்டை, வருத்தம் ஆகிய நிலைகளை அடைவார்.

சந்திரனின் அஷ்டவர்க்கத்தில் எண்ணிக்கை இல்லாத வீட்டினை சந்திரன் கடக்கும் காலங்களில் எவ்வித வேலையையும் மேற்கொள்ளக் கூடாது.

முன்பு (சூரியனுக்கு) கூறியவாறு சந்திரனுக்குரிய திசை அல்லது பகுதியைக் கண்டுபிடிக்க, அந்த குறிப்பிட்ட திசையில் சாதகரின் வீட்டின் குளியலறை அமைய வேண்டும்.

செவ்வாயின் அஷ்டவர்க்கப் பலன்கள்:

செவ்வாயின் அஷ்டவர்க்கத்தில் எண்ணிக்கை இல்லாத வீட்டினை, சனி கடக்கும்போது, செவ்வாய் வலிமையுடன் இருந்தால் சாதகர் நோய்வாய்ப் படுவார், செவ்வாய் வலிமையற்றும் இலக்கினாதிபதியாகவும் இல்லாமல் இருந்தால் சாதகர் இறந்துவிடுவார்.

முன்பு கூறியவாறு, திசை அல்லது பகுதியைக் கண்டுபிடித்தால், அந்த திசை அல்லது பகுதியில் சாதகரின் வீட்டின் சமையலறை அமைய வேண்டும்.

புதனின் அஷ்டவர்க்கப் பலன்கள்:

புதனின் அஷ்டவர்க்கத்தில் எண்ணிக்கை இல்லாத வீட்டினை, சனி கடக்கும்போது, சாதகரின் பிள்ளை அல்லது அவரது நண்பர் இறந்துவிடுவார்.

முன்பு கூறியவாறு, திசை அல்லது பகுதியைக் கண்டுபிடித்தால், அந்த திசை அல்லது பகுதியில் சாதகரின் வீட்டின் விளையாட்டு இடம் அமைய வேண்டும்.

…….அடுத்து .. வியாழன் – சனி பலன்கள்



முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-16


No comments: