வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபத்து மூன்று
தீமை தரும் யோகங்கள்.. தொடர்ச்சி
15. ஒருவர் பிறக்கும் நேரத்தில், உதய இராசியானது ரிசபம்,
மேசம் அல்லது தனுசுவில் இருப்பதுடன் அதனை பாவக்கோள்கள் பார்த்தால், அத்தகைய மனிதர்
அழகற்ற பற்களைக் கொண்டிருப்பார்; பிறக்கும் நேரத்தில் ஏதேனும் ஒரு அசுப வீடு(1) அல்லது
தனுசு அல்லது துலாம் இராசியானது உதய இராசியாக இருக்க, அத்தகைய வீடு அசுபக் கோள்களால்
பார்க்கப்பட்டால், அந்த மனிதர் வழுக்கைத் தலையராக இருப்பார்; சூரியன் இலக்கினத்திலிருந்து
9வது அல்லது 5வது வீட்டில் இருக்க அது அசுபக் கோள்களால் பார்க்கப்பட்டால், அந்த மனிதருக்கு
பார்வை குறைபாடு இருக்கும்; பிறக்கும் நேரத்தில் சனியானது 5வது அல்லது 9வது வீட்டில்
இருப்பதுடன் அது அசுபக்கோள்களால் பார்க்கப்பட்டால் அந்த மனிதர் பல்வேறு நோய்களுக்கு
உட்படுவார்; பிறக்கும் நேரத்தில் செவ்வாயானது 5வது அல்லது 9வது வீட்டில் இருக்க அது
அசுபக் கோள்களால் பார்க்கப்பட்டால் அந்த மனிதர் உடல் உறுப்பு குறைபாடு உடையவராக இருப்பார்.
குறிப்பு(1):
அத்தகைய இராசிகள் மேசம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகும்.
தீமை தரும் யோகங்கள்.. தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment