Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Thursday, April 20, 2017

சதயம் – ரேவதி பலன்கள் -பிருகத் ஜாதகா – 127


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  பதினாறு

நட்சத்திரங்கள் () நட்சத்திரங்களில் சந்திரன் தொடர்ச்சி


13. சதயம் நட்சத்திரத்தினைச் சந்திரன் கடக்கும்போது பிறந்த ஒருவர் கடுமையாக பேசுபவராகவும், உண்மையானவராகவும், துன்பம் அனுபவிப்பவராகவும், எதிரிகளை வெற்றி கொள்பவராகவும், வேலையில் துணிந்து ஈடுபடுபவராகவும், சுதந்திரமானவராகவும் இருப்பார்.


பூரட்டாதி நட்சத்திரத்தினைச் சந்திரன் கடக்கும்போது பிறந்த ஒருவர்  துன்பங்கள் அனுபவிப்பவராகவும், தனது சொத்துக்களை பராமரிப்பதை தன் மனைவியிடம் கொடுப்பவராகவும், தனித்துவமான பேச்சு(1) உடையவராகவும் இருப்பார்.

குறிப்பு:  (1) அல்லது பணம் சம்பாதிப்பதில் திறமையானவர்.


14. உத்திரட்டாதி  நட்சத்திரத்தினைச் சந்திரன் கடக்கும்போது பிறந்த ஒருவர்  திறமையாக பேசுபவராகவும், மகிழ்ச்சியானவராகவும், குழந்தைகளும் பேரக்குழந்தகளும் கொண்டிருப்பவராகவும், எதிரிகளை வெல்பவராகவும், நல்லொழுக்கம் மிக்கவராகவும் இருப்பார்.


ரேவதி நட்சத்திரத்தினைச் சந்திரன் கடக்கும்போது பிறந்த ஒருவர்  அழகான உடலமைப்பும், அனைவராலும் விரும்பப்படுபவராகவும், சண்டையில் வீரம் மிக்கவராகவும், பிறரின் சொத்துக்களை அபகரிக்காதவராகவும், செல்வந்தராகவும் இருப்பார்.


குறிப்பு: மேற்கூறிய விளைவுகளானது, குறிப்பிட்ட நட்சத்திரத்தினைக் கடக்கும் போது சந்திரன் வலிமையாக இருந்தால் மட்டுமே நிகழும்.



நட்சத்திரங்களில் சந்திரன் முடிவுற்றது

அடுத்து இராசிகளில் சந்திரன்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17





No comments: