Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Thursday, July 6, 2017

சொந்த வீட்டில் கோள்களின் பலன்கள் -பிருகத் ஜாதகா – 159


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்தொன்று

வர்க்கங்களில் கோள்களின் பலன்கள்


1.     ஒருவர் பிறக்கும் நேரத்தில் ஒரு கோள் அதன் சொந்த வீட்டில் இருந்தால், அந்த மனிதர் அவரது குடும்பத்தில் சராசரியான மதிப்பினைப் பெற்றிருப்பார்; இரண்டு கோள்கள் அவைகளின் சொந்த வீட்டில் இருந்தால், அவர் தமது குடும்பத்தில் மிக முக்கிய மனிதராக இருப்பார்; மூன்று கோள்கள் சொந்த வீடுகளில் இருந்தால், அந்த மனிதர் உறவினர்களால் மதிக்கப்படுவார்; நான்கு கோள்கள் சொந்த வீட்டில் இருந்தால் அந்த மனிதர் செல்வந்தராக இருப்பார்; ஐந்து கோள்கள் சொந்த வீட்டில் இருந்தால், அவர் வசதியான வாழ்க்கை அமையப் பெறுவார்; ஆறு கோள்கள் சொந்த வீட்டில் இருந்தால் அவர் ஆடம்பரமான வாழ்க்கையினையும் அரசனைப் போல் மகிழ்ச்சியுடனும் வாழ்வார்; ஏழு கோள்கள் சொந்த வீட்டில் இருந்தால், அந்த மனிதர் அரசராக ஆவார்.


மேலும், ஒரு கோள் நட்பு வீட்டில் இருந்தால், அந்த மனிதர் சார்பு வாழ்க்கையினை வாழ்வார்; இரு கோள்கள் நட்பு வீட்டில் இருந்தால், அவரது நண்பர்களால் அவர் பாதுகாக்கப்படுவார்; மூன்று கோள்கள் எனில், உறவினர்களாலும், நான்கு கோள்கள் எனில் சகோதரர்களாலும் ஒன்றுவிட்ட சகோதரர்களாலும் ஆதரிக்கப்படுவதுடன் ஐந்து கோள்கள் எனில், பலருக்கு ஆசானாகவும், ஆறு எனில் படைத் தளபதியாகவும், ஏழு எனில் அரசராகவும் இருப்பார்,

வர்க்கங்களில் கோள்களின் பலன்கள்..தொடரும்




முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17


No comments: