வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபத்தொன்று
வர்க்கங்களில் கோள்களின் பலன்கள்
1. ஒருவர் பிறக்கும்
நேரத்தில் ஒரு கோள் அதன் சொந்த வீட்டில் இருந்தால், அந்த மனிதர் அவரது குடும்பத்தில்
சராசரியான மதிப்பினைப் பெற்றிருப்பார்; இரண்டு கோள்கள் அவைகளின் சொந்த வீட்டில் இருந்தால்,
அவர் தமது குடும்பத்தில் மிக முக்கிய மனிதராக இருப்பார்; மூன்று கோள்கள் சொந்த வீடுகளில்
இருந்தால், அந்த மனிதர் உறவினர்களால் மதிக்கப்படுவார்; நான்கு கோள்கள் சொந்த வீட்டில்
இருந்தால் அந்த மனிதர் செல்வந்தராக இருப்பார்; ஐந்து கோள்கள் சொந்த வீட்டில் இருந்தால்,
அவர் வசதியான வாழ்க்கை அமையப் பெறுவார்; ஆறு கோள்கள் சொந்த வீட்டில் இருந்தால் அவர்
ஆடம்பரமான வாழ்க்கையினையும் அரசனைப் போல் மகிழ்ச்சியுடனும் வாழ்வார்; ஏழு கோள்கள் சொந்த
வீட்டில் இருந்தால், அந்த மனிதர் அரசராக ஆவார்.
மேலும், ஒரு கோள் நட்பு வீட்டில் இருந்தால், அந்த மனிதர் சார்பு
வாழ்க்கையினை வாழ்வார்; இரு கோள்கள் நட்பு வீட்டில் இருந்தால், அவரது நண்பர்களால் அவர்
பாதுகாக்கப்படுவார்; மூன்று கோள்கள் எனில், உறவினர்களாலும், நான்கு கோள்கள் எனில் சகோதரர்களாலும்
ஒன்றுவிட்ட சகோதரர்களாலும் ஆதரிக்கப்படுவதுடன் ஐந்து கோள்கள் எனில், பலருக்கு ஆசானாகவும்,
ஆறு எனில் படைத் தளபதியாகவும், ஏழு எனில் அரசராகவும் இருப்பார்,
வர்க்கங்களில் கோள்களின் பலன்கள்..தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment