வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபத்து இரண்டு
பல்வேறு யோகங்கள்
4. ஒருவர்
பிறக்கும்போது உதய நவாம்சம் வர்க்கோத்தமம் இருந்தால் அல்லது சந்திரன் வர்க்கோத்தம நிலையில்
இருந்தால், அவர் மகிழ்சியாகவும் வளமுடனும் இருப்பார். ஒருவர் பிறக்கும்போது சூரியனிலிருந்து
இரண்டாவது வீட்டில் சுபக் கோள்கள் இருந்தால்(1) அல்லது கேந்திரத்தில் எவ்வித கோள்களும்(2)
இல்லாது இருந்தாலும் மேற்கூறிய பலன்கள் கிடைக்கும். மேலும் ஒருவர் பிறக்கும்போது, காரகக்
கோள்கள் இராசி சக்கரத்தில் அவைகளின் வீடுகளில் இருந்தால், அவர் மகிழ்ச்சியுடனும் வளமுடனும்
வாழ்வார்.
குறிப்பு:
(1) புதன்,
வியாழன் அல்லது சுக்கிரன் – உரையாசிரியரின் கருத்துப்படி.
(2) ஏதேனும் ஒரு கேந்திரத்தில் இருந்தால், அந்த
மனிதர் மகிழ்ச்சியுடன் இருப்பார்; இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கேந்திரங்களில் இருந்தால்
மிக்க மகிழ்ச்சியுடனும், மேலும் அதில் உள்ள கோள்கள் சுபக்கோள்களாக இருந்தால், அளவுக்கு
அதிகமான மகிழ்ச்சியுடனும் வளமுடனும் வாழ்வார்.
குறிப்பு (நிமித்திகன்): “அல்லது
கேந்திரத்தில் எவ்வித கோள்களும்(2) இல்லாது இருந்தாலும்”
(or the Kendra houses may happen to be occupied by no planets at all) என வரையறை செய்யப்பட்டுள்ளது. ஆனால், திரு சிதம்பரம்
அவர்களின் குறிப்பு(2)-ல் கேந்திரத்தில் கோள்கள் இருந்தால் மகிழ்ச்சியாக இருப்பர் என
எழுதியுள்ளார். அறிந்தவர்கள் விளக்கவும்.
பல்வேறு யோகங்கள்.. தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment