Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Saturday, April 29, 2017

கும்பம்-மீனம் - சந்திரனின் பலன்கள் - பிருகத் ஜாதகா – 133



வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்


பிருகத் ஜாதகா

பாகம்-2
பகுதி   -  பதினேழு

பல்வேறு இராசிகளில் சந்திரன் தொடர்ச்சி….

11.    கும்ப இராசியில் சந்திரன் இருக்கும்போது பிறந்த ஒருவர் ஒட்டகத்தினைப் போன்று கழுத்தும், திரண்ட சதையுடன் கூடிய உடலும், உறுதியான முழுமையாக பரவிய நிலையில் முடியும் கொண்டிருப்பார்; உயரமாக இருப்பார்; நீண்டவடிவிலான பாதம், தொடைகள், பின்புறம், முகம், அடிவயிறு கொண்டிருப்பார்; செவிடாக இருப்பார்; பிறரின் சொத்தினையும் மனைவிகளையும் அனுபவிப்பதுடன், தீய செயல்களிலும் ஈடுபடுவார்; மேலே எழுவதும் வீழ்வதுமாக இருப்பார்; மலர்களின் மீதும் வாசனைப் பொருட்கள் மீதும் ஆர்வம் கொண்டிருப்பார்; நண்பர்களுடன் இணைந்திருப்பதுடன், சோர்வடையாமல் நடப்பார்.


12. மீன இராசியில் சந்திரன் இருக்கும்போது பிறந்த ஒருவர் கடல் வணிகம் செய்பவராகவும், பிறரின் சொத்தினை அனுபவிப்பவராகவும் இருப்பார்; மனையின் மீதும் உடைகளிலும் மிக்க ஈடுபாடு கொண்டிருப்பதுடன், ஒழுங்கான உடல் உறுப்புகள், வெளிர் நிற உடலமைப்பு, நீண்ட மூக்கு, பெரிய தலை கொண்டிருப்பதுடன், எதிரியை வீழ்த்துபவராகவும் இருப்பார்; பெண்களின் செல்வாக்கிற்கு அடிபணிபவராகவும், அழகிய கண்களும், அழகாகவும் இருப்பார்; புதையல்களை அனுபவிப்பவராக இருப்பார்; வசதியானவராகவும், கற்றறிந்தவராகவும் இருப்பார்.


13.    ஒருவர் பிறக்கும் நேரத்தில், சந்திரன் மற்றும் சந்திரன் இருக்கும் இராசி, அந்த இராசியின் அதிபதி ஆகியோர் வலிமையுடன் இருந்தால், இந்த பகுதியில் கூறப்பட்ட பலன்கள் முற்றிலும் பொருந்தும்(1), இதே குறிப்புகள் சந்திரனைத் தவிர மற்ற கோள்களுக்கும் பொருந்தும்(2).


குறிப்புகள்:
(1)  மூன்றில் இரண்டு வலிமையுள்ளதாக இருந்தால், பலனானது முழுமையாக பொருந்தாது; மூன்றில் ஒன்று மட்டுமே வலிமையாக இருந்தால், பலனானது பெருமளவு பொருந்தாது, மூன்றில் எதுவுமே வலிமையாக இல்லையெனில், பலன் வலிமையற்று போகும்.
(2)  இது அடுத்த பகுதியில், ஒருவர் பிறக்கும்போது பல்வேறு இராசிகளில் இருக்கும் பல்வேறு கோள்களின் பலன்கள் பற்றி ஆசிரியர் குறிப்பிடுவதாகும்.

பகுதி-17 முற்றும்


அடுத்து..பகுதி-18 – சூரியன், செவ்வாய் மற்றும் இதர கோள்களின் பலன்கள்.


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17


Friday, April 28, 2017

தனுசு-மகரம் - சந்திரனின் பலன்கள் - பிருகத் ஜாதகா – 132


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்


பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  பதினேழு

பல்வேறு இராசிகளில் சந்திரன் தொடர்ச்சி….


9.  தனுசு இராசியில் சந்திரன் இருக்கும்போது பிறந்த ஒருவர் நீண்ட முகமும் கழுத்தும் கொண்டிருப்பார்; தந்தையின் சொத்தினை அனுபவிப்பார்; கொடையாளியாக இருப்பார்; இலக்கிய எழுத்தாளராக இருப்பார்; வலிமையான திறமையான பேச்சினைக் கொண்டிருப்பார்; பெரிய பற்கள், காதுகள், உதடுகள், மூக்கினைக் கொண்டிருப்பார்; பல்வேறு தொழில்களை செய்வார்; நுண்கலையில் சிறந்து விளங்குவார்; எடுப்பில்லாத தோள்பட்டையும், உடைந்த நகங்களையும், நீண்ட கைகளையும் கொண்டிருப்பார்; ஆழ்ந்த ஆராய்ச்சி அறிஞராக இருப்பார்; நல்ல புரிதல் உள்ள மனிதராக இருப்பார்; உறவினர்களை வெறுப்பவராக இருப்பார்; அதிகாராத்திற்கு உட்படாமல், அன்புக் கட்டுப்படுபவராக இருப்பார்.


10.    மகர இராசியில் சந்திரன் இருக்கும்போது பிறந்த ஒருவர் எப்போதும் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இணைந்திருப்பார்; வெளிவட்டாரத்தில் நல்லொழுக்கம் மிக்கவராக இருப்பார்; குறுகிய உடலுறுப்பினையும், அழகிய கண்களையும், மெல்லிய இடுப்பினையும் கொண்டிருப்பார்; பேசுவதை எளிதில் புரிந்துகொள்ளும் திறன் கொண்டிருப்பார்; அனைவராலும் விரும்பப்படுபவராகவும், வேலையில் மெதுவானவராகவும் இருப்பார்; குளிர் தாங்க மாட்டார்; இயற்கையை விரும்புவராகவும், சுதந்திரமானவராகவும் அல்லது வலிமை மிக்கவராகவும், இலக்கிய எழுத்தாளராகவும் இருப்பார்; கருமியாகவும், தாழ்குல பெண்களுடன் உறவு உள்ளவராகவும் இருப்பார்; வெட்கம் அற்றவராகவும், கருனையில்லாதவராகவும் இருப்பார்.

இராசிகளில் சந்திரன் தொடரும்…


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17



Wednesday, April 26, 2017

துலாம்-விருச்சிகம் - சந்திரனின் பலன்கள் - பிருகத் ஜாதகா – 131



வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  பதினேழு

பல்வேறு இராசிகளில் சந்திரன் தொடர்ச்சி….


7. துலாம் இராசியில் சந்திரன் இருக்கும்போது பிறந்த ஒருவர் தேவர்கள், இராசியில் சந்திரன் இருக்கும்போது பிறந்த ஒருவர் தேவர்கள், அந்தனர்கள், சன்னியாசிகள் ஆகியோருக்கு மரியாதை செலுத்துவார்; அறிவாளியாகவும்(1), பிறரின் சொத்துக்களுக்கு ஆசைப்படாதவராகவும் இருப்பார்; சாத்திரங்களை கற்றறிவார்; பெண்களின் பேச்சினைக் கேட்டு நடப்பார்; உயரமாக இருப்பார்; புடைத்த நாசியுடன் இருப்பார்; மெல்லிய, பாதிக்கப்பட்ட உடலுறுப்பினைக் கொண்டிருப்பார்; பயணத்தில் ஆர்வம் கொண்டிருப்பார்; செல்வந்தராக இருப்பார்; வணிகராக இருப்பார்; கற்றறிந்த அறிஞர்களால் தேவர்களின் பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்படுவார்; நோய்வாய் பட்டிருப்பார்; தனது குடும்பத்தினைக் காப்பவராகவும், தனது உறவினர்களால் விரும்பப்படாதவராகவும், ஒதுக்கி வைக்கப்பட்டவராகவும் இருப்பார்.

குறிப்பு: (1) சமஸ்கிருத வார்த்தையான ப்ரக்னா என்பது ஒரு மனிதன் மாபெரும் அறிவாளியாக இருப்பதுடன், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் குறித்த நிகழ்வுகளை அறிந்திருத்தல் என்பதாகும்.


8.  விருச்சிக இராசியில் சந்திரன் இருக்கும்போது பிறந்த ஒருவர் அகன்ற விழிகளையும், பரந்த மார்பினையும், வட்டவடிவமான முழங்கால்கள், தொடைகள், மூட்டுக்களைக் கொண்டிருப்பார்; தனது பெற்றோர் மற்றும் மூத்தோர்களை விட்டு விலகியிருப்பார்; சிறுவயதிலேயே நோய்வாய் பட்டிருப்பார்; அரச குடும்பத்தினால் மதிக்கப்படுவார்; பழுப்பு நிறமாய் இருப்பார்; நேரிடையான கருத்துக் கொண்டிருக்க மாட்டார்; மீன் வடிவம் அல்லது வஜ்ராயுத வடிவம் அல்லது பறவை வடிவமான  கோடுகளைக் கையிலும் பாதத்திலும் கொண்டிருப்பார்;  தான் செய்த பாவங்களை மறைக்கும் திறன் கொண்டிருப்பார்.

இராசிகளில் சந்திரன் தொடரும்…


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17



Monday, April 24, 2017

சிம்மம்-கன்னி - சந்திரனின் பலன்கள் - பிருகத் ஜாதகா – 130


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  பதினேழு

பல்வேறு இராசிகளில் சந்திரன் தொடர்ச்சி….


5. சிம்ம இராசியில் சந்திரன் இருக்கும்போது பிறந்த ஒருவர் முன்கோபியாகவும், பெரிய தாடையும், பரந்த முகமும், பழுப்பு நிறக் கண்களும் கொண்டிருப்பார்; குழந்தை குறைவாக இருக்கும்; பெண்களை வெறுப்பார்; அசைவ உணவில் ஆர்வம் கொண்டவராகவும், காடு மலைகளை விரும்பவராகவும் இருப்பார்; சிறு செயல்களுக்காக நீண்ட நேரம் சண்டையிடுபவராக இருப்பார்; பட்டினி, தாகம், வயிற்றுவலி, பல்வலி, மன உளைச்சல் ஆகியவற்றால் வலியால் துடிப்பார்; தானம் வழங்குவதில் தாராளமாக இருப்பார்; சண்டையிடுவதில் கண்டிப்பாக இருப்பார்; தீர்மானித்த கொள்கைகளைக் கொண்டிருப்பார்; செருக்குடனும், தாயிடம் பற்றும் கொண்டிருப்பார்.


6. கன்னி இராசியில் சந்திரன் இருக்கும்போது பிறந்த ஒருவர் அழகிய கண்களையும், பணிவுடன் மெதுவான நடையும் கொண்டிருப்பார்; தோள்பட்டையும் கைகளும்  தாழ்ந்து இருக்கும்; வசதியாக வாழ்வார்; மென்மையான உடலும் பேச்சும் கொண்டிருப்பார்; நேர்மையானவராக இருப்பார்; நாட்டியம், இசை, ஓவியம், புத்தகம் தயாரித்தல் ஆகியவற்றில் திறமையானவராக இருப்பார்; சாத்திரங்களை கற்றவராக இருப்பார்; நல்லொழுக்கமும் புத்திசாலித்தனமும் கொண்டிருப்பார்; காம இச்சையில் ஆர்வம் கொண்டிருப்பார்; பிறரின் வீடு மற்றும் சொத்துக்களை அனுபவிப்பார்; வெளிநாட்டில் வசிப்பார்; இனிய பேச்சினைக் கொண்டிருப்பார்; பெண் குழந்தைகளும், குறைவாக மகன்களும் கொண்டிருப்பார்.


இராசிகளில் சந்திரன் தொடரும்…



முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17