வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபத்தொன்று
வர்க்கங்களில் கோள்களின் பலன்கள்
2. ஒருவர் பிறக்கும்
நேரத்தில், ஒரே ஒரு கோள் மட்டும் அதன் உச்ச வீட்டில் இருந்து அது தனது நட்புக் கோள்களால்
பார்க்கப்பட்டால், அந்த மனிதர் அரசராவார்; பிறக்கும் நேரத்தில் ஏதேனும் ஒரு கோள் அதன்
உச்ச வீட்டில் இருப்பதுடன், அதனுடன் அந்த வீட்டில் அதன் நட்புக்கோள்களும் இருந்தால்
அந்த மனிதர் பெரும் செல்வந்தராகவும், உலகம் போற்றுபவராகவும் இருப்பார்; பிறக்கும் நேரத்தில்,
ஏதேனும் ஒரு கோள் அதன் பகை வீட்டில் அல்லது நீச்ச வீட்டில் இருந்தால், அந்த மனிதர்
ஏழையாக இருப்பார்; இரண்டு கோள்கள் அவைகளின் பகைவீட்டில் அல்லது நீச்ச வீட்டில் இருந்தால்,
அந்த மனிதர் துயரங்களால் பாதிக்கப்படுவார்; மூன்று கோள்கள் அவைகளின் பகைவீட்டில் அல்லது
நீச்ச வீட்டில் இருந்தால், அந்த மனிதர் முட்டாளாக இருப்பார்; நான்கு கோள்கள் அவ்வாறு
இருந்தால், அந்த மனிதர் நோயால் பாதிக்கப்படுவார்; ஐந்து கோள்கள் அவ்வாறு இருந்தால்,
அந்த மனிதர் சிறை தண்டனை அனுபவிப்பார்; ஆறு கோள்கள் அவ்வாறு இருந்தால், அந்த மனிதர்
துன்பத்தின் அடையாளமாக வாழ்வார்; ஏழு கோள்கள் அவ்வாறு இருந்தால், அந்த மனிதர் சித்திரவதை
செய்பவர்களால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவார்.
குறிப்பு:
புதனும் சூரியனும் ஒரே நேரத்தில் நீச்ச வீட்டில் இருக்க முடியாது,
அதாவது மீனம் மற்றும் துலாத்தில் இருக்க முடியாது. எனவே ஏழு கோள்கள் ஒரே நேரத்தில்
அவைகளின் நீச்ச வீட்டில் இருக்க முடியாது. மற்ற நிலைகளை, இங்கே ஆசிரியர் தமக்கு முந்தைய ஆசிரியர்களின் கருத்தினைப்
பதிவு செய்கிறார்.
வர்க்கங்களில் கோள்களின் பலன்கள்..தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment