வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - ஏழு
ஆயுர்தயம் அல்லது உயிர்வாழ் நாட்களைத் தீர்மானித்தல் (தொடர்ச்சி)
குறிப்புகள்:(நிமித்திகன்)
கீழ்வரும்
குறிப்புகளில் 1000, 2000, 10,000 ஆண்டுகள், ஒரு யுகம் வாழக்கூடிய சாதக அமைப்புகளைத் திரு.
சிதம்பரம் அய்யர் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ளார். யதார்த்த உலகில் 120
ஆண்டுகளுக்கு மேல் உயிர்வாழ்தல் என்பது அரிதிலும் அரிதாகவே உள்ளது. எனவே 1000,
2000 ஆண்டுகள் வாழ்ந்தார்கள் என்பது கற்பனைப் பாத்திரங்களாக இருக்கலாமே தவிர
உண்மையில் இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் இதனை வேறு கோணத்தில் ஆராய்ந்தால்,
வாழ்தல் என்பது புகழுடன் வாழ்தல் எனும் பொருள் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, கரிகால்
சோழன், இராசஇராசன் போன்ற மன்னர்கள் இன்றும் புகழோடு பேசப்படுவதை கருத்தில்
கொள்ளலாம். ஆக உயிர் உடல் என்பதைக் காட்டிலும், புகழுடலை கணக்கில் கொண்டால்,
இந்தக் கூற்று உண்மையாக இருக்கலாம். எனவே அவ்வாறான அமைப்புள்ள சாதகர்களின் புகழோ
அல்லது அவர்தம் வரலாறோ நீண்ட ஆண்டுகள், அதாவது 1000, 2000 ஆண்டுகள்
நிலைத்திருக்கும் எனக் கணக்கில் கொள்ளலாம். இதுவே சரியானது என்பதே எனது கருத்து.
குறிப்புகள்
(திரு சிதம்பரம்) – சென்ற பதிவின் தொடர்ச்சி
11. சுக்கிரன்
தேவலோக அம்சத்திலும், செவ்வாயானது ஏதேனும் ஒரு கேந்திரத்திலும் இருக்க, வியாழனும்
ஏதேனும் ஒரு கேந்திரத்தில் இருப்பதுடன் சிம்மாசனம்சத்தில் இருப்பது. மேற்படி
யோகத்தில் பிறக்கும் ஒரு மனிதன், எண்ணிக்கையில் அடங்காத ஆண்டுகள் வாழ்வார்.
12. சுக்கிரன்
ஏதேனும் ஒரு கேந்திர வீட்டில் இருப்பதுடன் வர்க்கோத்தம நிலையிலும்,
பரவதம்சத்திலும் இருக்க, வியாழன் ஏதேனும் ஒரு கேந்திரவீட்டில் இருப்பதுடன்
சொர்க்கலோக அம்சத்திலும் இருப்பது. மேற்படி யோகத்தில் பிறக்கும் ஒரு மனிதன்,
மருந்துகளின் வலிமையால் முடிவில்லாத ஆண்டுகள் வாழ்வார்.
13.வியாழன்
ஒரு கேந்திர வீட்டில் இருப்பதுடன் கோபுர அம்சத்திலும் இருக்க, சுக்கிரன் ஒரு
திரிகோண வீட்டில் இருப்பதுடன் பரவதம்சத்திலும் இருக்க, கடகம் உதய இராசியாக
இருப்பது. மேற்படி யோகத்தில் பிறக்கும் ஒரு மனிதன், ஒரு யுகம் வாழ்வார்.
14. உதய
இராசி கடகமாக இருக்க, அதில் வியாழன் இருப்பதுடன் அது தனுசுவின் நவாம்சத்தில்
இருக்க, 2 அல்லது 3 கோள்கள் கேந்திரத்தில் இருப்பது. மேற்படி யோகத்தில் பிறக்கும்
ஒரு மனிதன், நீண்ட நாட்கள் வாழ்வதுடன் பிரம்ம நிலையையும் அடைவார்.
15. சுக்கிரன்
3வது அல்லது 11வது வீட்டில் இருப்பதுடன் கோபுரம் அல்லது பிற அம்சத்துடன் இருக்க,
உதய நவாம்சமானது ரிசபமாக ரிசப இராசியில் இருப்பது. மேற்படி யோகத்தில் பிறக்கும்
ஒரு மனிதன், நீண்ட நாட்கள் வாழ்வதுடன் பிரம்ம நிலையையும் அடைவார்.
16. சுக்கிரன்
உதய இராசியில் இருக்க, வியாழன் 7வது வீட்டிலும், சந்திரன் கன்னியிலும், உதய
நவாம்சமானது தனுசு இராசியுனடைய மேசமாக இருப்பது. மேற்படி யோகத்தில் பிறக்கும் ஒரு மனிதன்,
அழிவிலிருந்து காக்கும் நிலையை அடைவார்.
17. புதன் 5வது வீட்டில் கோபுரம் அல்லது பிற அம்சத்தில்
இருக்க, உதய இராசி கும்பமாகவும் அதில் வியாழனும் இருப்பது. மேற்படி யோகத்தில்
பிறக்கும் ஒரு மனிதன், பிரம்ம நிலையை அடைவார்.
18. வியாழன்
ஏதேனும் ஒரு கேந்திர வீட்டில் இருக்க, சனி 11வது வீட்டிலும், சூரியன் 2வது
வீட்டிலும், குளிகை (ஒரு கோளின் சுற்றுவட்டப்பாதையின் அதிகபட்ச தூரத்தின் முனைகள்)
7வது வீட்டிலும், செவ்வாய் 9வது வீட்டிலும் இருப்பது. மேற்படி யோகத்தில் பிறக்கும்
ஒரு மனிதன், ஒரு யுகம் வாழ்வார்.
19. வியாழன்
மற்றும் புதன் திரிகோண வீட்டில் இருக்க; உதய இராசி ரிசபமாகவும் அதில் செவ்வாய்
இருக்க, சந்திரன் கோபுர அம்சத்தில் இருப்பது. மேற்படி யோகத்தில் பிறக்கும் ஒரு
மனிதன், 2000 ஆண்டுகள் வாழ்வார்.
20. வியாழன்
ஏதேனும் ஒரு கேந்திரத்தில் இருக்க, உதய இராசி கடகமாக இருக்க, செவ்வாய் 7வது
வீட்டிலும், சனி 4வது வீட்டிலும், பிறக்கும் நேரமானது மாதத்தின் வளர்பிறையாக
இருப்பது. ஒரு மனிதன் பிறப்பானது, பகலில் மேற்படி யோகத்தில் நிகழுமானால், அவர் 10,000 ஆண்டுகள் வாழ்வார்.
21. வியாழன்,
சனி, செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஆகியவை கேந்திரங்களில் இருக்க, அவை ஒன்றையடுத்து
ஒன்றாக கேந்திரத்தில் இருக்க அல்லது அவைகள் திரிகோண வீடுகளில் இருப்பது. ஒரு
மனிதன் மேற்படி இரு யோகங்களில் ஒன்றில் பிறந்தால், அவர் 10,000 ஆண்டுகள் வாழ்வார்.
22. சுபக்கோள்கள்
கேந்திரங்களில் இருக்க; அசுபக் கோள்கள் 3வது, 6வது மற்றும் 11வது வீடுகளில்
இருக்க, உதய இராசி சிம்மமாக இருக்க அதில் வியாழன் இருப்பது. மேற்படி யோகத்தில்
பிறக்கும் மனிதன் 60,000 ஆண்டுகள் வாழ்வார்.
………ஆயுர்தயம் அல்லது உயிர்வாழ் நாட்களைத் தீர்மானித்தல் (தொடரும்)
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-16
|
No comments:
Post a Comment