வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபத்து ஏழு
திரேக்காண பலன்கள்.. தொடர்ச்சி
[குறிப்பு: இராசிகளின் வடிவங்களைக் கொண்டு பொதுப்பலன் உரைப்பது
போல்
இங்கு திரேக்காண வடிவங்கள்
விளக்கப்பட்டுள்ளன]
7. மிதுனத்தின்
முதல் திரேக்காணமானது பெண்ணாகவும், தையல் வேலை, அழகியலில் ஆர்வம் உடையதாகவும், அலங்காரத்தில்
ஆர்வம் உடையதாகவும், குழந்தைகள் இன்றியும், கைகள் உயர்ந்த நிலையிலும், பருவமடைந்ததாகவும்,
காம இச்சை எண்ணம் நிரம்பியதாகவும் இருக்கும்.
குறிப்பு:
இந்த திரேக்காணமானது பெண்ணின் வடிவம் கொண்டிருக்கும். இதன் அதிபதி புதன்.
8. மிதுனத்தின் இரண்டாவது திரேக்காணமானது பூந்தோட்டத்தில்
வசிக்கும் மனிதனாகவும், தற்காப்பு ஆடை அணிந்ததாகவும், கையில் வில்லும், சண்டையில் ஆர்வம்
உடையதாகவும், அம்புகளைக் சுமந்ததாகவும், கருடனைப்போல் முக அமைப்பும், எண்ணமானது குழந்தைகள்,
ஆபரணங்கள் சொத்துக்களின் மீதும் கொண்டதாகவும் இருக்கும்.
குறிப்பு:
இந்த திரேக்காணமானது ஆணின் வடிவமும் ஆயுதமும் கொண்டிருக்கும். இதன் அதிபதி சுக்கிரன்.
9. மிதுனத்தின்
மூன்றாவது திரேக்காணமானது ஆபரணங்கள் பூண்ட மனிதராகவும், பல்வேறு ரத்தினங்களை அணிந்தவராகவும்,
தற்காப்பு ஆடை அணிந்தவராகவும் இலக்கினைக் கொண்டிருப்பதுடன், கையில் வில்லும், அனைத்து
கலைகளும் அறிந்ததாகவும், இலக்கிய எழுத்தாளராகவும் இருக்கும்.
குறிப்பு:
இந்த திரேக்காணமானது ஆணின் வடிவம் கொண்டிருக்கும். இதன் அதிபதி சனி.
திரேக்காணத்தின்
பலன்கள்.தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment