Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Monday, November 20, 2017

சாதகம் இல்லாதவர்கள் – ஆண்டு - நாள் அறிதல் - பிருகத் ஜாதகா – 203



வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து ஆறு

சாதகம் இல்லாத  நிலை  …தொடர்கிறது


11.    மேற்படி முறையில் கணித்த எண்ணை(1), தேவை எனில் மேற்சொன்னவாறு 10, 8, 7, 5 ஆகியவற்றால் பெருக்கவும்; அதனுடன் 9-ஐக் கூட்டவும் அல்லது கழிக்கவும்; அவைகளுக்குரிய எண்ணால் வகுக்கவும்(2), அதன்படி பிறந்த பொழுதின் ஆண்டு, ரிது, மாதம், சந்திர நாள், பகல் அல்லது இரவு, நட்சத்திரம், கதி, உதய இராசி, உதய நவாம்சம் ஆகியவற்றை நீங்கள் கண்டுபிடிக்க முடியும்.


குறிப்பு:

இந்த பத்தியிலும், இதனைத் தொடர்ந்து வரும் மூன்று பத்திகளிலும், ஆசிரியர் மற்றொரு கணக்கீட்டு முறையில், ஒருவரின் பிறந்த ஆண்டு, மாதம் போன்றவற்றைக் கண்டறியும் வகையினைக் குறிப்பிடுகிறார்.

(1)  பத்தி 9-ன் இறுதியில் கண்டுபிடித்த எண்.

(2)  பின்வரும் மூன்று பத்திகளில் இத்தகைய மற்றும் வகுக்கும் முறைகள் பற்றி விளக்கப்படுகிறது.




12.    10-ஆல் பெருக்கிவந்த எண்ணைக் கொண்டு ஆண்டினையும்(வயது), ரிது மற்றும் பிறந்த மாதத்தினையும்(1) கணிக்க முடியும்; 8-ஆல் பெருக்கிவந்த எண்ணைக் கொண்டு பட்சத்தினையும் (15 நாட்கள்) திதியையும் (சந்திர நாள்) கணிக்க முடியும்(2).


குறிப்பு:

(1)  பெருக்கிவந்த தொகை என்பது கடைசி பத்தியில் குறிப்பிட்ட நான்கு பெருக்கல் தொகைகளுடன், தேவையெனில் 9-ஐக் கூட்டியது அல்லது கழித்தது. அவ்வாறான எண்ணிக்கையினை 120-ஆல் வகுக்க, வரும் மீதியைக் கொண்டு அந்த மனிதரின் வயதினைக் கண்டுபிடிக்க முடியும். அதே எண்ணிக்கையினை 6-ஆல் வகுத்தால் வரும் மீதியைக் கொண்டு அந்த மனிதரின் சிசிர ரிதுவைக் கண்டு பிடிக்க முடியும். அதே எண்ணிக்கையினை 2-ஆல் வகுக்க, வரும் மீதியைக் கொண்டு, முதல் அல்லது இரண்டாவது மாதத்தின் ரிதுவைக் கண்டுபிடிக்க முடியும்.

(2)  இந்த பெருக்கம் என்பது சென்ற பத்தியில் குறிப்பிட்ட நான்கு பெருக்கத்தின் இரண்டாவது பகுதியாகும், அது தேவைக்கேற்ப 9-ஐக் கூட்டியது அல்லது கழித்ததாகும். இந்த எண்ணிக்கையினை 2-ஆல் வகுக்க கிடைக்கும் மீதியானது பிறந்த பொழுதின் 15 நாட்களைக் கொடுக்கும். அதே எண்ணை 15ஆல் வகுக்க, கிடைக்கும் மீதியானது சந்திர நாளைக் கொடுக்கும்.


சாதகம் இல்லாத நிலை … தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17


No comments: