வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபத்து ஏழு
திரேக்காண பலன்கள்.. தொடர்ச்சி
[குறிப்பு: இராசிகளின் வடிவங்களைக் கொண்டு பொதுப்பலன் உரைப்பது
போல்
இங்கு திரேக்காண வடிவங்கள்
விளக்கப்பட்டுள்ளன]
16. கன்னியின்
முதல் திரேக்காணமானது ஒரு கன்னிப் பெண்ணாகவும், பூக்களால் நிரம்பிய குடத்தினைச் சுமந்தவளாகவும்,
அழுக்கான ஆடைகளை அணிந்தவளாகவும், ஆடைகள் மீதும் சொத்துக்களின் மீதும் ஆசை உடையவளாகவும்
அவளுடைய ஆசிரியரின் வீட்டை நோக்கி செல்பவளாகவும் இருக்கும்.
குறிப்பு:
இந்த திரேக்காணம் ஒரு பெண்ணின் வடிவில் இருக்கும். இதன் அதிபதி புதன்.
17. கன்னியின்
இரண்டாவது திரேக்காணமானது கையில் எழுத்தாணி கொண்ட ஆணின் வடிவிலும், கருப்பாகவும், தலையில்
முண்டாசு கட்டியும், வரவு செலவு கணக்கினைப் பார்ப்பதாகவும், நீண்ட வில்லினைக் கையில்
கொண்டும் உடல் முழுதும் முடியால் மூடியபடியும் இருக்கும்.
குறிப்பு:
இந்த திரேக்காணம் கையில் ஆயுதம் கொண்ட ஒரு மனித வடிவில் இருக்கும். இதன் அதிபதி சனி.
18. கன்னியின்
மூன்றாவது திரேக்காணமானது மஞ்சள் வண்ண பெண்ணாகவும், வெள்ளைப்பட்டாடை அணிந்தும், பானையைச்
சுமந்தும், கையில் கரண்டியும், தூய்மையானதாகவும், கோவிலுக்கு செல்வதாகவும் காணப்படும்.
குறிப்பு:
இந்த திரேக்காணமானது ஒரு பெண்ணின் வடிவில் இருக்கும். இதன் அதிபதி சுக்கிரன்.
திரேக்காணத்தின்
பலன்கள்.தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment