வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபத்து ஆறு
சாதகம் இல்லாத நிலை …தொடர்கிறது
13. அவ்வாறு பெருக்கி வந்த(1) எண்ணை 7-ஆல் பெருக்க
வரும் எண்ணைக் கொண்டு, பிறப்பானது பகலில் அல்லது இரவில் நடந்ததா என்பதையும் நட்சத்திரத்தினையும்
அறிய முடியும்.
குறிப்பு:
1. இது
11-வது பத்தியில் கூறப்பட்ட 4 பெருக்கல் தொகைகளில் மூன்றாவது ஆகும், அதுனுடன் தேவையெனில்
9-ஐக் கூட்ட வேண்டும் அல்லது கழிக்க வேண்டும். வரும் எண்ணை 2-ஆல் வகுக்க, மீதம் ஒன்று
வந்தால் பகல் எனவும் என்றுக்கு மேல் வந்தால் இரவு எனவும் கொள்ள வேண்டும். அதேபோல் அந்த
எண்ணை 27-ஆல் வகுக்க வரும் மீதியை அசுவனி முதல் கணக்கிட்டு நட்சத்திரத்தினைக் கண்டு
பிடிக்க முடியும்.
14. அவ்வாறு பெருக்கிவந்த(1) எண்ணை 5-ஆல் பெருக்க வரும்
எண்ணைக் கொண்டு, கதி, உதய இராசி, ஓரை, உதய நவாம்சம் ஆகியவற்றை அறிய தீர்மானிக்கலாம்.
குறிப்பு:
1. இது
11-வது பத்தியில் கூறப்பட்ட 4 பெருக்கல் தொகைகளில் கடைசி ஆகும், அதுனுடன் தேவையெனில்
9-ஐக் கூட்ட வேண்டும் அல்லது கழிக்க வேண்டும். அதனை பிறந்த பொழுதான் பகலின் கதியின்
எண்ணிக்கை அல்லது இரவின் கதியின் எண்ணிக்கையால் வகுக்க வேண்டும்; அவ்வாறனதில் வரும்
மீதியானது பிறந்தபோது உள்ள சூரிய உதயத்தின் கதிகை அல்லது மறைவின் கதியைக் குறிக்கும்.
அதே எண்ணை 12-ஆல் வகுக்க, வரும் மீதியானதை மேசத்திலிருந்து கணக்கில் கொண்டால், உதய
இராசி கிடைக்கும். அதே எணை 2-ஆக் வகுக்க, கிடைக்கும் மீதியானது 1 எனில் முதல் ஓரையாகவும்
ஒன்றிற்கு மேல் எனில் 2வது ஓரையாகவும் பிறந்த பொழுது உள்ளது என்பதை அறியலாம். அந்த
எண்னை 9-ஆல் வகுக்க வரும் மீதியானது பிறந்தபோது உள்ள உதய இராசியிலிருந்து எண்ணிவர,
நவாம்சத்தின் உதய நவாம்சம் கிடைக்கும்.
இதுபோலவே,
அதனை 12-ஆல் வகுக்க வரும் மீதியானது உதய துவதசாம்சத்தினைக் கொடுக்கும்; 3-ஆல் வகுக்க,
கிடைக்கும் மீதியானது உதய திரேக்காணத்தைக் கொடுக்கும்.
பின்குறிப்பு:
மேற்சொன்ன எல்லா வழிகளிலும், மீதி என்பது இராசி, பாகை, நொடி ஆகியவற்றின் வடிவத்திலேயே
உள்ளது. இராசியைக் குறிப்பிடும் எண்ணே, பிறக்கும்போது உள்ள குறிப்பிட்ட நட்சத்திரம்,
வருடம், பட்சம், திதி, கதி போன்ற எண்களைக் குறிக்கிறது – பாகையும் நொடியும் மட்டுமே
எண்களை ஒட்டுமொத்தமாக அதிகப்படுத்திகிறது.
சாதகம்
இல்லாத நிலை … தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment