தசா புத்திகள் அல்லது கால முறைக் கணிதம் - தொகுப்பு
தசா-புத்தி என்பது குறித்து நாம் ஆராய்ந்த வகையில் –
·
தசா-புத்தி என்பது காலமுறைக் கணிதம்
·
சாதகத்தில் ஒரு குறிப்பிட்ட நிகழ்வு நடப்பதற்கான
வாய்ப்பு எப்போது நிகழும் என்பதை அறிய உதவும் கணக்கீடு
·
இதில் பல்வேறு வகையான கணக்கீடுகள், அதாவது ஐம்பதற்கும்
மேற்பட்ட முறைகள் உள்ளன.
·
வராக மிகிரரின் முறையானது ஒப்பு நோக்கில் சிறப்புடையதாக
இருந்தாலும், நடைமுறையில் கணிதம் செய்வதற்குக் கடினமாக இருப்பதால், தற்போது எந்த சோதிடரும்
இந்த முறையினைப் பயன்படுத்துவது இல்லை.
·
வராக மிகிரரின் முறையில் காலக் கணிதமானது, அதிகபட்சமாக
120 ஆண்டுகள் – 5 நாட்கள் எனும் அளவில் உள்ளது.
·
அதில் எட்டு தசைகள் – அதாவது, இலக்கினம் மற்றும்
ஏழு கோள்களின் தசைகள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
·
பராசரர் தமது பராசர ஓரையில் பல்வேறு முறைகளைப் பற்றி
கூறினாலும், விம்சோத்திரி தசை முறையே சிறந்தது எனக் கூறுகிறார்.
·
விம்சோத்திரி தசை முறையில் மொத்தம் 120 ஆண்டுகள்
குறிக்கப்படுகிறது.
·
பிறக்கும்போது சந்திரன் உள்ள விண்மீனின் அடிப்படையில்
கணக்கிடப்படுகிறது.
·
அசுவணி தொடங்கி ரேவதி வரையில் உள்ள விண்மீன்களின்
அடிப்படையிலும், அவற்றின் அதிபதிகளான கேது தொடங்கி புதன் வரையில் உள்ள வரிசையின் அடிப்படையிலும்
தசா ஆண்டுகள் தொகுக்கப்படுகின்றன.
·
மொத்த தசா ஆண்டுகள் 120 என்பது, வராகமிகிரரின் மொத்த
தசா ஆண்டுகளோடு ஒத்து வருகிறது.
·
ஆனால், இராகு-கேது உட்பட ஒன்பது கோள்களுக்கான ஆண்டுகள்
பகிர்ந்தளிக்கப்பட்டதில், கணித முறையினை தர்க்க முறையில் நிலை நிறுத்த முடியவில்லை.
·
தசா புத்தி என்பது, தசா – புத்தி – அந்தரம் – சூட்சமம்
– பிராண அந்தரம் – தேக அந்தரம் என நுணுக்கமாக, கோள்களுக்கு உரிய விகிதாசார அடிப்படையில்
பிரிக்கப்படுகிறது.
·
ஒவ்வொரு தசையும், அந்த குறிப்பிட்ட தசா கோளின் புத்தி,
அந்தரம் என்பதில் தொடங்கி, அதற்கு அடுத்த கோளின் வரிசைப்படி, ஒரு ஒழுங்கு முறையில்
அமைக்கப்பட்டிருக்கிறது.
·
விம்சோத்திரி தசைதான் நடைமுறையில் பெருமளவு ஒத்து
வருகிறது என பெரும்பாலான சோதிட அறிஞர்கள் ஒப்புதல் செய்கின்றனர்.
·
அப்படி எனில், சில சமயங்களில் ஒத்து வரவில்லை என்பதையும்
கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது.
·
தசா நாதனை விட புத்தி நாதனும், புத்தி நாதனை விட
அந்தர நாதனும், அந்தர நாதனை விட சூட்சம நாதனும் பலமிக்கவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
·
எனவே எந்த ஒரு தசையும் முழு நற்பலனையோ அல்லது முழு
கெடுபலனையோ கொடுப்பதில்லை என நிலை நிறுத்தப்படுகிறது.
·
தசா புத்திகளின் பலன் அறிதலை, உரிய நேரத்தில், உரிய
பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
அடுத்து
… சட்பலம் -
No comments:
Post a Comment