Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Thursday, January 19, 2017

தசா புத்திகள் அல்லது கால முறைக் கணிதம் - 6


தசா புத்திகள் அல்லது கால முறைக் கணிதம்  - தொகுப்பு


தசா-புத்தி என்பது குறித்து நாம் ஆராய்ந்த வகையில் –

·         தசா-புத்தி என்பது காலமுறைக் கணிதம்

·         சாதகத்தில் ஒரு குறிப்பிட்ட நிகழ்வு நடப்பதற்கான வாய்ப்பு எப்போது நிகழும் என்பதை அறிய உதவும் கணக்கீடு

·         இதில் பல்வேறு வகையான கணக்கீடுகள், அதாவது ஐம்பதற்கும் மேற்பட்ட முறைகள் உள்ளன.

·         வராக மிகிரரின் முறையானது ஒப்பு நோக்கில் சிறப்புடையதாக இருந்தாலும், நடைமுறையில் கணிதம் செய்வதற்குக் கடினமாக இருப்பதால், தற்போது எந்த சோதிடரும் இந்த முறையினைப் பயன்படுத்துவது இல்லை.

·         வராக மிகிரரின் முறையில் காலக் கணிதமானது, அதிகபட்சமாக 120 ஆண்டுகள் – 5 நாட்கள் எனும் அளவில் உள்ளது.

·         அதில் எட்டு தசைகள் – அதாவது, இலக்கினம் மற்றும் ஏழு கோள்களின் தசைகள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

·         பராசரர் தமது பராசர ஓரையில் பல்வேறு முறைகளைப் பற்றி கூறினாலும், விம்சோத்திரி தசை முறையே சிறந்தது எனக் கூறுகிறார்.

·         விம்சோத்திரி தசை முறையில் மொத்தம் 120 ஆண்டுகள் குறிக்கப்படுகிறது.

·         பிறக்கும்போது சந்திரன் உள்ள விண்மீனின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

·         அசுவணி தொடங்கி ரேவதி வரையில் உள்ள விண்மீன்களின் அடிப்படையிலும், அவற்றின் அதிபதிகளான கேது தொடங்கி புதன் வரையில் உள்ள வரிசையின் அடிப்படையிலும் தசா ஆண்டுகள் தொகுக்கப்படுகின்றன.

·         மொத்த தசா ஆண்டுகள் 120 என்பது, வராகமிகிரரின் மொத்த தசா ஆண்டுகளோடு ஒத்து வருகிறது.

·         ஆனால், இராகு-கேது உட்பட ஒன்பது கோள்களுக்கான ஆண்டுகள் பகிர்ந்தளிக்கப்பட்டதில், கணித முறையினை தர்க்க முறையில் நிலை நிறுத்த முடியவில்லை.

·         தசா புத்தி என்பது, தசா – புத்தி – அந்தரம் – சூட்சமம் – பிராண அந்தரம் – தேக அந்தரம் என நுணுக்கமாக, கோள்களுக்கு உரிய விகிதாசார அடிப்படையில் பிரிக்கப்படுகிறது.

·         ஒவ்வொரு தசையும், அந்த குறிப்பிட்ட தசா கோளின் புத்தி, அந்தரம் என்பதில் தொடங்கி, அதற்கு அடுத்த கோளின் வரிசைப்படி, ஒரு ஒழுங்கு முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

·         விம்சோத்திரி தசைதான் நடைமுறையில் பெருமளவு ஒத்து வருகிறது என பெரும்பாலான சோதிட அறிஞர்கள் ஒப்புதல் செய்கின்றனர்.

·         அப்படி எனில், சில சமயங்களில் ஒத்து வரவில்லை என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது.

·         தசா நாதனை விட புத்தி நாதனும், புத்தி நாதனை விட அந்தர நாதனும், அந்தர நாதனை விட சூட்சம நாதனும் பலமிக்கவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

·         எனவே எந்த ஒரு தசையும் முழு நற்பலனையோ அல்லது முழு கெடுபலனையோ கொடுப்பதில்லை என நிலை நிறுத்தப்படுகிறது.

·         தசா புத்திகளின் பலன் அறிதலை, உரிய நேரத்தில், உரிய பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

அடுத்து … சட்பலம் -


No comments: