வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - பத்தொன்பது
கோள்களின் பார்வை பலன்கள் தொடர்ச்சி…
3. பிறக்கும்
நேரத்தில், சந்திரன் தனுசுவில் இருந்து
அது புதனால் பார்க்கப்படுமானால், அவர் உறவினர்களை காப்பாற்றுபவராக இருப்பார்; அது வியாழனால்
பார்க்கப்படுமானால், அரசராக இருப்பார்; சுக்கிரனால் பார்க்கப்பட்டால், அவர் பலரைக்
காப்பாற்றுபவராக இருப்பார்; சனியால், சூரியனால் அல்லது செவ்வாயால் பார்க்கப்பட்டால்
அவர் நிகழ்ச்சிகளில் தன்னை முன்னிறுத்திக் கொள்வதுடன், பிற மனிதர்களின் வேலையினை ஏற்க
மாட்டார்.
பிறக்கும்
நேரத்தில், சந்திரன் மகரத்தில் இருந்து அது புதனால் பார்க்கப்படுமானால்,
அந்த மனிதர் அரசர்களுக்கு அரசராக இருப்பார்; அது வியாழனால் பார்க்கப்படுமானால், அவர்
அரசராக இருப்பார்; சுக்கிரனால் பார்க்கப்பட்டால், அவர் கற்றறிந்தவராக இருப்பார்; சனியால்
பார்க்கப்பட்டால் வசதிமிக்கவராக இருப்பார்; சூரியனால் பார்க்கப்பட்டால் ஏழையாக இருப்பார்; செவ்வாயால்
பார்க்கப்பட்டால் அரசராக ஆவார்.
பிறக்கும்
நேரத்தில், சந்திரன் கும்பத்தில்
இருந்து
அது புதனால் பார்க்கப்படுமானால், அவர் அரசராக இருப்பார்; அது வியாழனால் பார்க்கப்படுமானால்,
அரசருக்கு நிகராக இருப்பார்; சுக்கிரனால் அல்லது சனி அல்லது சூரியன் அல்லது செவ்வாயால் பார்க்கப்பட்டால் பிறர் மனைவியரின் மேல்
இச்சைக் கொண்டவராக இருப்பார்.
பிறக்கும்
நேரத்தில், சந்திரன் மீனத்தில் இருந்து அது புதனால் பார்க்கப்படுமானால்,
அவர் நகைச்சுவை உணர்வு கொண்டவராக இருப்பார்; அது வியாழனால் பார்க்கப்படுமானால், அரசராக
இருப்பார்; சுக்கிரனால் பார்க்கப்பட்டால், அவர் கற்றறிந்தவராக இருப்பார்; சனியால்,
சூரியனால் அல்லது செவ்வாயால் பார்க்கப்பட்டால் அவர் தீய செயல்களின் ஈடுபடுபவராக இருப்பார்.
உரையாசிரியரின் குறிப்பு:
சென்ற
பகுதியின் கடைசி பத்தியில் குறிப்பிட்டவாறு, சந்திரனுக்கு கூறியவை அனைத்தும் உதய இராசிக்கும்
பொருந்தும். இராசி சக்கரத்தில் உள்ள கடகத்தினைத் தவிர மற்ற இராசிகளில் சந்திரன் இருந்து
பார்க்கப்படும்போது அது உதய இராசியாகவும் இருந்தால் அதன் பலனனாது தீயதாக இருக்கும்.
கோள்களின் பார்வை பலன்கள்.. தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment