Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Monday, May 29, 2017

நவாம்ச சந்திரனின் பலன்கள்(3) - பிருகத் ஜாதகா – 150



வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  பத்தொன்பது

கோள்களின் பார்வை பலன்கள் தொடர்ச்சி…


7. பிறக்கும் நேரத்தில், சந்திரனானது சிம்மத்தின் நவாம்சத்தில் இருந்து, அது சூரியனால் பார்க்கப்பட்டால், அந்த மனிதர் கோபக்காரராக இருப்பார்; செவ்வாயால் பார்க்கப்பட்டால் அரசரால் ஆதரிக்கப்படுவார்; புதனால் பார்க்கப்பட்டால், புதையலைக் கண்டுபிடிப்பதன் மூலம் செல்வந்தராவார்; வியாழனால் பார்க்கப்பட்டால் செல்வாக்கு மிக்கவராகவும் அதிகாரம் மிக்கவராகவும் இருப்பார்; வெள்ளியால் பார்க்கப்பட்டால் குழந்தைகள் இருக்காது; சனியால் பார்க்கப்பட்டால் தீய செயல்களில் ஈடுபடுவார்.


பிறக்கும் நேரத்தில், சந்திரனானது வியாழனின் நவாம்சத்தில் இருந்து, அது சூரியனால் பார்க்கப்பட்டால், அந்த மனிதர் அதிகாரமிக்கவராக இருப்பார்; செவ்வாயால் பார்க்கப்பட்டால் சண்டைகளின் விதிமுறைகளை அறிந்தவராக இருப்பார்; புதனால் பார்க்கப்பட்டால் நகைச்சுவைத் திறன் கொண்டவராக இருப்பார்; வியாழனால் பார்க்கப்பட்டால், அவர் ஒரு அமைச்சராக இருப்பார்; வெள்ளியால் பார்க்கப்பட்டால் வீரியம் இல்லாத மனிதராக இருப்பார்; சனியால் பார்க்கப்பட்டால், அறக்கட்டளைகள நிர்வாகிப்பார்.


நவாம்ச சந்திரனின் பலன்கள்.. தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17



No comments: