வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - பத்தொன்பது
கோள்களின் பார்வை பலன்கள் தொடர்ச்சி…
5. பிறக்கும்
நேரத்தில், சந்திரனானது செவ்வாயின் நவாம்சத்தில் இருந்து, அது சூரியனால் பார்க்கப்பட்டால்,
அந்த மனிதர் ஒரு நகரத்தின் பாதுகாவலராக இருப்பார்; செவ்வாயால் பார்க்கப்பட்டால், பிறரைத்
துன்புறுத்துவதில் ஆர்வம் கொண்டவராக இருப்பார்; புதனால் பார்க்கப்பட்டால், சண்டைப்பயிற்சியில்
திறமையானவராக இருப்பார்; வியாழனால் பார்க்கப்பட்டால், அவர் அரசனாக ஆவார்; வெள்ளியால்
பார்க்கப்பட்டால் செல்வந்தராக இருப்பார்; சனியால் பார்க்கப்பட்டால் வம்புகளை வாங்கிவருவார்.
பிறக்கும்
நேரத்தில், சந்திரனானது வெள்ளியின் நவாம்சத்தில் இருந்து, அது சூரியனால் பார்க்கப்பட்டால்,
அந்த மனிதர் ஒரு முட்டாளாக இருப்பார்; அது செவ்வாயால் பார்க்கப்பட்டால், அவர் பிறர்
மனைவியின் மீது மோகம் கொண்டவராக இருப்பார்; புதனால் பார்க்கப்பட்டால் நல்ல கவிஞராக
இருப்பார் அல்லது பிறரின் கருத்துப்படி, பிறரின் மனைவியைக் கவர்பவராக இருப்பார்; வியாழனால்
பார்க்கப்பட்டால் சிறந்த நூல்களைப் படைப்பவராக இருப்பார்; வெள்ளியால் பார்க்கப்பட்டால்,
வசதியான வாழ்க்கையை விரும்புவராக இருப்பார்; சனியால் பார்க்கப்பட்டால், பிறர் மனைவியுடன்
சேர்ந்து வாழ்வார்.
நவாம்ச சந்திரனின் பலன்கள்.. தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment